பாலியல் புகாரில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் கைது..
08 Jul,2019
பாலியல் பலாத்கார புகாரில் சூழலியல் ஆர்வலர் முகிலன், கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த முகிலன் மாயமானார்.
இதுகுறித்து வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், ஆந்திர ரயில்வே போலீசாரின் பாதுகாப்பில் இருந்த அவரை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது காலில் நாய் கடித்ததாக முகிலன் தெரிவித்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே முகிலனின் மனைவி பூங்கொடி,கணவரை சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தார்.
இதனை ஏற்று, பாலியல் பலாத்காரம், பெண் வன்கொடுமை உட்பட 3 பிரிவுகளின் கீழ் முகிலன் மீது பதிவு செய்த வழக்கின் கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.