மோடி விமானத்துக்கு பாக்., அரசு அனுமதி
11 Jun,2019
லாகூர்: மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் நடக்கும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் தனது வான் எல்லை வழியாக செல்வதற்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
இந்தாண்டு துவக்கத்தில் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாக். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். எனப்படும்
மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை நமது விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது. அதைத் தொடர்ந்து தனது வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு பாக். தடை விதித்தது.
இந்நிலையில் மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் 13 - 14ல் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவருடைய விமானம் பாகிஸ்தானின் வான் எல்லை வழியாக செல்ல மத்திய அரசு அனுமதி கோரியிருந்தது. மத்திய அரசின் இந்த கோரிக்கையை பாக். அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் விமானம்
Advertisement
தங்களுடைய வான் எல்லை வழியாக செல்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இதை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாநாட்டில் பாக். பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்கிறார். ஆனால் மாநாட்டின் இடையே இம்ரான் கானை பிரதமர் மோடி சந்திக்க மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.