அமெரிக்க கோடீஸ்வரிகள் பட்டியலில் 3 இந்திய பெண்கள்
08 Jun,2019
அமெரிக்காவின் பிரபல வணிக பத்திரிகையான போர்ப்ஸ், அமெரிக்காவில் சுயமாக சம்பாதித்து கோடீஸ்வரியான பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 21 வயது முதல் 92 வயது வரை உள்ள 80 பேர் கொண்ட 2019-ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவரான, அரிஸ்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெய்ஸ்ரீ உல்லால் தனது 58-வது வயதில் 140 கோடி டாலர் சொத்துகளுடன் பட்டியலில் 18-வது இடம் பிடித்துள்ளார்.
அதேபோல், வெறும் 2000 டாலர் முதலீட்டுடன் வீட்டிலேயே நிறுவனம் தொடங்கிய ‘சின்டல்’ நிறுவனத்தின் துணை நிறுவனர் நீர்ஜா சேதி (64), 100 கோடி டாலர் சொத்துகளுடன் பட்டியலில் 23-வது இடம் பிடித்துள்ளார்.
‘ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி’ என்ற நிறுவனத்தின் துணை நிறுவனரான, 34 வயதான நேஹா நர்கெடே, 36 கோடி டாலர் சொத்துகளுடன் பட்டியலில் 60-வது இடத்தில் உள்ளார்.