'செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்'
08 Feb,2019
செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போன்களை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது நடைமுறையில் சாத்தியமானதா என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை இங்கு தொகுத்து வழங்குகிற்றோம்.
"பெரும்பாலான போலீஸ் அதிகாரிகள் பைக் ஓட்டும் போதே மொபைலில் பேசுகிறார்கள்.. ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுகிறார்கள்.. அவங்களுக்கும் அபராதம் விதிக்க முடியுமா" என்று கேள்வி எழுப்பியுள்ளார் மொஹமத் எனும் பேஸ்புக் நேயர்.
வாகனம் ஓட்டிக் கொண்டே பேசுபவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து ஒரு வாரத்திற்கு பின்பு தந்தால், இதனை தடுக்கலாம் என்கிறார் முருகேசன்
இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள பன்னீர்செல்வம் லோகநாதன், "இந்த உத்தரவை நீதிமன்றம் உடனே பிறப்பிக்க வேண்டும். உத்தரவிட்டால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் இப்படித்தான் போனில் பேசிக்கொண்டே போய் விபத்துக்களை உண்டாக்கி பல உயிர்களுக்கு எமனாக இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.வாகனம் ஓட்டிக் கொண்டே செல்போன் பேசுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து, அவர்களின் வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்ய வேண்டும் என்று குலசேகரன் எனும் நேயர் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.