அணு சக்தி நிறுவப்பட்டுள்ள இடங்கள் பற்றிய பட்டியலை இந்தியாவிடம் வழங்கியது
01 Jan,2019
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. இதன்படி, பாகிஸ்தான் நாட்டில் உள்ள அணு சக்தி நிறுவப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வசதிகள் ஆகியவை அடங்கிய பட்டியல் இந்திய தூதரக பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோன்று புதுடெல்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சகம் ஆனது இந்தியாவில் அணு சக்தி நிறுவப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வசதிகள் ஆகியவை அடங்கிய பட்டியலை பாகிஸ்தான் தூதரக பிரதிநிதியிடம் வழங்கியுள்ளது.
இந்த நடைமுறை கடந்த 1991ம் ஆண்டு ஜனவரி 27ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வருவது என கட்டாயமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1992ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதியில் இருந்து தொடர்ச்சியாக இந்நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.