1,300 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த தொழிலதிபர் உருக்கமான தகவல்
26 Dec,2018
இந்தியாவின் மிகப்பெரிய திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
ஒரு ஜோடி மணமக்களுக்கு நிறைந்த பணம், பொருள் செலவில் இந்த திருமணம் நடைபெறவில்லை.மாறாக 261 ஜோடிகளுக்கு நடைபெற்ற பிரமாண்ட திருமண நிகழ்வுதான் இது.
இந்தியாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள சுராட் நகரில் இந்த பாரிய திருமண நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால்,சுமார் 261 தந்தைகளற்ற மணப்பெண்கள் இந்த திருமண நிகழ்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தியா முழுவதுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமண ஜோடிகளுக்கு இந்த மெகா திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் அவரவர் மத சம்பிரதாயங்களுக்கு அமைவாகவே இந்த மெகா திருமண நிகழ்வு நடைபெற்றது.
இந்த அரிய திருமண நிகழ்வை ஏற்பாடு செய்த சுராட் நகர செல்வந்தரான மஹேஷ் சவானி கூறுகையில், “261 மகள்மார் இங்கு தமது மணமகன்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொள்கின்றனர்.
அவர்களில் 6 முஸ்லிம் மகள்மார், 3 கிறிஸ்தவ மகள்மார் மற்றும் 45 வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஹிந்து மத பெண்கள் இங்கு உள்ளனர்” என்று தெரிவித்தார்.
இந்தியாவை பொறுத்தவரையில் பின்தங்கிய மணப்பெண்களுக்கு இவ்வாறு திருமண நிகழ்வு நடைபெறுவது அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றமை சிறப்பான விடயமாகும்.
இதற்காக சூரத்தில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டது. அங்கு தங்க நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் சீதனமாக வழங்கி, அனைவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அப்போது ஒரு தந்தையாக இருந்து அனைத்து சடங்குகளையும் செய்து வைத்தார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தந்தையில்லா ஏழைப் பெண்களுக்கு மஹேஷ் சவானி திருமணம் செய்து வைத்து வருகிறார்.
இதுவரை 1,300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு மஹேஷ்க்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் அதற்கு முன்பே அவரின் தந்தை உயிரிழந்துள்ளார்.
இதனால் தந்தையின்றி தான் திருமணம் நடைபெற்றது. இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். அப்போது முதல் தந்தையில்லா பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க தொடங்கினார்.
நேற்றைய விழாவின் போது பெண் ஒருவரின் தன்னை அறியாமல் கண்ணீர் சிந்தினார். அதைக் கண்டு மஹேஷ் தந்தையாக கண்ணீரைத் துடைத்தார். இந்தக் காட்சிகள் நெஞ்சை உருகும் விதமாக அமைந்தன.