27 இந்திய மீனவர்கள் விடுதலை
26 Aug,2018
இலங்கையின் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.குறித்த மீனவர்கள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
7 படகுகளில் இலங்கையில் தடை செய்யப்பட்ட மோனோ இழை மீன்பிடி வலைகளை பயன்படுத்தியமைக்காக இவர்களுக்கு 2000 ரூபா அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இந்திய உயர்ஸ்தானிகரகம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் ஒரு சில நாட்களில் இந்தியாவிற்கு திரும்பி செல்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.