ஓடும் ரெயிலுக்குள் பாய்ந்த 600 கிலோ தண்டவாளம் ..
14 Apr,2018
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் நகரை நோக்கிச் சென்ற மயூரா எக்ஸ்பிரஸ் ரெயில், அதிகாலை சுமார் 3.30 மணியளவில் பீகார் மாநிலத்தின் லக்கிசாராய் மாவட்டத்தில் பன்சிப்பூர் நிலையத்தை கடந்து வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது, சுமார் 10 மீட்டர் நீளம் கொண்ட சுமார் 600 கிலோ எடையுள்ள தண்டவாளத்தின் ஒரு துண்டு, ரெயில் பெட்டியின் அடிப்பகுதியை கிழித்து கொண்டு பயணிகள்மீது பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த ஒரு பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த இரு பயணிகள் பாட்னா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நடைபெற்ற பகுதி நக்சலைட்களின் ஆதிக்கத்தில் உள்ள இடம் என்பதால் இந்த அசாதாரண விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கும் என கருதும் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.