இந்திய எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை செய்த அட்டூழியம்
17 Feb,2018
ராமேஸ்வரம் : இந்திய கடற்பகுதி எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியுள்ளனர். ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இந்திய கடற்பகுதி எல்லைக்குள் தங்கள் படகுகளில் இன்று அதிகாலை மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இந்திய கடற்பகுதியில் தங்களது படகுகளில் சென்று மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் 200 படகுகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அதன்பின்னர் அவர்கள் தமிழக மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்து உள்ளனர் என மீனவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.