'பென்ஷன்' திட்டத்தில் 28வது இடத்தில் இந்தியா
30 Oct,2017
'பென்ஷன்' திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
மெல்பரினின் மெர்சர் குளோபல் பென்ஷன் அட்டவணையில் உள்ள, 30 நாடுகளில் இந்தியா, 28வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கியிருந்தாலும், கடந்த ஆண்டை விட மேம்பட்டிருக்கிறது. இந்தியாவின் மதிப்பு கடந்த ஆண்டை விட, 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தியாவின் பென்ஷன் அமைப்பு, போலந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பென்ஷன் திட்டங்களை விட நீடித்த தன்மை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதார குழு தகவல் படி, இந்தியாவில் பணியாற்றும் வயதினரில், 7.4 சதவீதம் பேர் மட்டுமே பென்ஷன் திட்டங்களில் பங்கேற்கின்றனர். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் அமைப்பு சாரா துறைகளில் பணியாற்றுவது, இதற்கு முக்கிய காரணம். எனினும் என்.பி.எஸ்., திட்டம் மற்றும், 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டம் போன்றவை மூலம் இந்த நிலை மேம்பட்டு வருகிறது.