ஓடும் ரயிலில் பாரிய கொள்ளை!
16 Oct,2017
சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற ரயில் ஒன்றில் 5 கோடியே 75 இலட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
கடந்த வருடம் ஆகஸ்ட் 8 ஆம் திகதி சேலத்தில் இருந்து 332 கோடி ரூபாய் பணம் பலத்தபாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்போது பாதுகாப்பையும் மீறி இடைநடுவில் ரயிலின் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் 5.78 கோடிகளைக் கொள்ளையிட்டுச் சென்றதாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர முயற்சிகள் எடுத்து அதில் வெற்றிகள் கிடைக்காத காரணத்தினால், வழக்கு மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில் குற்றவாளிகள் குறித்து எந்தவித தகவலையும் பெறமுடியாத நிலையில் புலனாய்வுத்துறையும், பொலிஸாரும் திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது குற்றவாளிகள் குறித்து தகவல் அறிப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சென்னை ரயில் நிலையங்களில் சுவரெட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 044- 28511600, 9940022422, 9940033233 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.