கணவனுக்காக சசிகலா பரோலில் வரல.. ஆட்சியை கவுக்கதான் வந்துள்ளார்!
08 Oct,2017
சசிகலா தன்னுடைய கணவர் மீது உள்ள பாசத்தால் பரோலில் வரவில்லை என்றும், அரசியல் சூழ்நிலையை எப்படி சமாளிக்கலாம் அது பற்றி ஆலோசனை நடத்தவே சென்னை வந்துள்ளார் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தீபா பேசியதாவது: நான் இரட்டை இலை சின்னம் பெறுவது பற்றி தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்திருந்த மனுவை திரும்ப பெற்றுவிட்டதாக சிலர் வதந்தியாக பரப்பி வருகின்றனர்.
அப்படி ஒரு மனுவை நான் திரும்ப பெறவில்லை என தெரிவித்தார். மேலும், சசிகலாவிற்கு தன்னுடைய கணவர் நடராஜன் மீது பாசம் எதுவும் கிடையாது, எல்லாம் நாடகம் என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.