பெரியாரின் 139வது பிறந்தநாள் !!
17 Sep,2017
பகுத்தறிவு பகலவான் ஈ.வெ. ராமசாமியின் 139 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ. இராமசாமி கடந்த 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ஈரோட்டில் பிறந்தார்.
ஜாதிய ஒடுக்குமுறைகளை அழிக்கும் சமூக சீர்திருத்ததிற்காவும், மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும் போராடிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார்.
சமூக சீர்திருத்தத்துக்காக, தமிழகத்தில் மிக முக்கியமாக இயக்கப்படும் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய சமூக போராளி.
இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவு வாதமும் மிகவும் புகழ்பெற்றவை. தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்றும் போற்றப்பட்டவர் தந்தை பெரியார்.
1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி உடல் நலக்குறைவால் தனது 94வது வயதில் உயிரிழந்தார். இவரது 139வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.