ராம்குமாரிடம் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
26 Jul,2016
ஏற்கனவே ராம்குமாரை காவல்துறை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது ராம்குமார் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை எப்படி கொலை செய்தான் என்பதை நடித்துக்காட்டியதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் மீண்டும் ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து, வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது