தற்காலிக சிறுநீர் தேக்கமடைதல் எனும் பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை
31 Mar,2023
எம்மில் சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது முழுமையாக வெளியேறாமல் குறிப்பிட்ட அளவு சிறுநீர் தேக்கமடைந்திருக்கும். இவை தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் ஏற்படக்கூடிய பாதிப்பு.
சிலருக்கு திடீரென்று விருப்பத்துடன் சிறுநீர் கழிக்கும் போது.. அவை திருப்திகரமாகவும், சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகும் அளவிற்கு சிறுநீரை வெளியேற்ற இயலாத நிலை உண்டாகும். இதனை மருத்துவர்கள் தற்காலிக சிறுநீர் தேக்கப் பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள்.
சிறுநீர் கழிக்க இயலாத நிலை, சிறுநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வு, அடிவயிற்றில் ஏற்படும் வலி, பலவீனமான சிறுநீரகப் பாதை, சிறுநீர் கழித்த பிறகு அசௌகரிய உணர்வு.. சிறுநீர்ப்பாதையில் அடைப்புகள், தொற்று பாதிப்புகள், காயங்கள், வீக்கம், புரொஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு.. போன்ற பல காரணங்களால் தற்காலிக சிறுநீர் தேக்கமடைதல் பாதிப்பு ஏற்படக்கூடும்.
கிரிஸ்டோஸ்கோபி எனும் கருவியின் ஊடான பரிசோதனை, எலக்ட்ரோயோகிராபி, உரோடினாமிக் பரிசோதனை ஆகிய பரிசோதனைகளுக்கு பிறகு பாதிப்பின் தன்மையை துல்லியமாக மருத்துவர்கள் அவதானிப்பர். இதனைத் தொடர்ந்து அதற்குரிய சிகிச்சையை அளிப்பர்.