வெள்ளை நிற சீனியில் ஒப்பிடுகையில் ப்ரௌன் நிற சர்க்கரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். வெகு விரைவில் ஜீரணமாககூடிய சர்க்கரை யை ஒப்பிடும்போது வெல்லம், செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும். உடலுக்கு தேவையான இரும்புச்சத்து தேவையை பூர்த்தி செய்ய வெல்லம் இருக்கிறது.
வெல்லத்தின் பயன்கள்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தசை களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கும்.
வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும்.
உடல் வலி மற்றும் உடல் சோர்வு, சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
ஞாபக மறதியை தடுக்கலாம்.
மாதவிடாய் பிரச்சனையின் போது சாப்பிடலாம்.
இருப்பினும், சர்க்கரை வெகு விரைவில் செரிமானமாகி, நம் ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தும். நிறைய சர்க்கரை உண்ணும் நபர்களுக்கு வெகு விரைவில் நீரிழிவு நோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உண்டு.
சர்க்கரையின் தீமைகள்
உடல் எடை அதிகரிக்கும்.
உடல் வலி, உடல் சோர்வு ஏற்படும்.
இருப்பினும் கலப்படம் எதுவும் இல்லாத பனை வெ ல்லம் அல்லது பனங்கற்கண்டு எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குறிப்பாக பாலில் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தினால் நாள்பட்ட சளி, இருமல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா?
கோடை காலம் வந்துவிட்டாலே இளநீர் அமிர்தமாகவே காணப்படும். ஆம் அந்த அளவிற்கு உடம்பை குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இளநீர் பானங்கள் பயன்படுகின்றது. இளநீரில் அதிகளவு வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த இளநீரானது ஊட்டச்சத்துக்களுடன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது.
இளநீர் புத்துணர்ச்சியையும், போதுமான ஆற்றலை வழங்குவதுடன் சர்க்கரை நோயாளிகள் இதனை தாராளமாக அருந்தலாம். இளநீர் குடித்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்த உதவியாக இருக்கின்றது.
ஆனால் இவற்றில் இயற்கையாகவே சர்க்கரை கூறுகள் இருப்பதால் நீங்கள் இளநீரை அதிகளவு குடிக்காமல் அளவோடு குடிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
கோடை காலத்தில் வேறு பானங்களை அருந்தாமல் இளநீர் அருந்துவது நல்லதாகும்.
சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைப்பதிலும் பெரிதும் உதவியாக இருக்கிறது, ஒருவர் தினசரி இளநீரை குடித்து வர அவர்களது சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் அருமருந்தாக பயன்படுகிறது. சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு இளநீரை கொடுத்தால் அவர்களது சிறுநீரில் கற்கள் உருவாக காரணமாக இருக்கும் அதிக சிட்ரேட், பொட்டாசியம் மற்றும் குளோரைடுகள் வெளியேற்றுகிறது.
எனவே இளநீர் குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும் என்பது தெரிகிறது.
இளநீர் குடிப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பான பங்கினை வகிக்கிறது. இளநீரில் நிறைந்துள்ள உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றது.
அடிக்கடி இளநீர் குடித்து வர இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது என்று ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் சருமம் பொலிவடைவதுடன், இயற்கையான மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகின்றது.