கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் என்ன தாக்கம் இருக்கும் – இதோ
23 Apr,2020
கொரோனா வைரஸின் கடுமையான தாக்கத்திற்கு உள்ளான நபர்கள், மீண்டும் வரும்போது அவர்களுக்கு பல்வேறு பின் விளைவுகள் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவை என்ன என்பதனை பார்ப்போம். முதலில் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். மூச்சு எடுத்து விடுவதில் தொடர்ந்தும் பல மாதங்கள் சிறிதளவு சிரமம் இருக்கும். சிலருக்கு இதயம் பலவீனமாக காணப்படுவதோடு, நுரையீரலும் பலவீனமாக இருக்கும். மூட்டுகளில் அதீத வலி இருக்கும். பொதுவாக இடுப்புக்கு கீழ் இந்த வலி காணப்படும்.
மேலும் சிலருக்கு ஈரல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். இவை அனைத்துமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட மனிதர்களுக்கு பொதுவாக காணப்படும் பின் விளைவுகள் ஆகும்