60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆபத்து! சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை
30 Mar,2020
கொரோனா வைரஸ் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலகுவில் தொற்றக்கூடுமென, சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இலங்கையில் உயிரிழந்த முதலாவது நபரும் 60 வயதுடையவர் என்பதால்,
60 வயதுக்கு மேற்பட்டோர் வீடுகளில் இருப்பது தற்போதைய நிலைக்கு ஏற்றதாக அமையுமென, சகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.