ஆயுர்வேதம்

02 Apr,2014
 

ஆயுர்வேதம்


ஆயுர் வேதம் இந்திய துணை கண்டத்தின் பழமையான மருத்துவ முறை ஆகும்.சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உருவானது. ஆயுர்வேதம் என்ற சொல்லானது “வாழ்க்கை அறிவியல்”என்றுப்பொருள்படும்.இது சமஸ்கிருத வார்த்தைகளான “ஆயுஸ்”என்பது வாழ்க்கை என்றும் வேதா என்பது அறிவியல் என்றும் இரண்டும் சேர்த்து ஆயுர்வேதம் ஆனது.மற்ற மருத்துவ முறைகள் போல் அல்லாமல் ஆயுர்வேத முறையில் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது உடல் ஆரோக்கியத்தை மேம்பட செய்கிறது.ஆயுர்வேதத்திற்கு முக்கிய நோக்கமே தேக சம்மந்தமான நோய்களை குணமாக்ககூடியது.

ஆயுர் வேதத்தின் நெறிப்படி மனித உடலானது நான்கு அடிப்படைகளை கொண்டதாகும்.அவை தோசா,தத்து,மலம் மற்றும் அக்னி.ஆயுர்வேதத்தில் உடல் அமைப்பு அடிப்படைகள்,மிகப்பெரிய சிறப்பான அம்சங்கள் ஆயுர்வேதத்தில் உள்ளடங்கியுள்ளது.இவை “மூலசித்தாந்த” அல்லது ஆயுர்வேத சிகிச்சை அடிப்படைகள் என்று அழைக்கபடுகின்றது.

 

தோசா

தோசா மூன்று முக்கிய பிரிவுகள் கொண்டது.அவை வாதம்,பித்தம் மற்றும் கபம் எனப்படுகிறது.இது மூன்றும் உடலை அழிக்கும் மற்றும் உட்சேர்க்கைக்குரிய வளர் சிதை மாற்றங்களை கட்டுப்படுத்தவும்,மாற்றவும் வல்லவை,உடல் முழுவதும் செரிக்கின்ற உணவுகளின் செயல்பாடாகவும் உள்ளது.இது உடலின் கட்டமைப்பிற்கு உதவுகின்றது.இந்த தோசத்தில் குறைபாடுகள உண்டாவதினால் உடலில் நோய்கள் உண்டாகிறது.
 
 

 


தாது

தாது என்பது உடலுக்கு உறுதுனையாக இருப்பது ஆகும். இது உடலில் ஏழு திசு அமைப்புகளாக உள்ளன.அவைகள் ரசம்,அக்டா,மம்சா,மெடா,அஸ்தி,மிஜா,சுக்ரா ஆகியவைகளை ரத்தம்,சதை, கொழுப்பு,திசுக்கள், எலும்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்துக்கள் என அழைக்கப்படுகிறது.இந்த தாதுக்கள் உடலுக்கு அடிப்படை ஊட்டச்சத்தினை மட்டுமே அளிக்கும். மனநிலை மற்றும் அதன் வளர்ச்சிக்கும் உடல் கட்டமைப்பிற்கும் உதவுகிறது.
 
 

 


மலம்

மலம் என்பது உடலின் கழிவு பொருட்கள்,அல்லது அழுக்கை குறிக்கிறது.இது உடலின் மூன்றின் தொகுதிகளில் மூன்றாக உள்ளது.மலம்,சிறுநீர் மற்றும் வியர்வை என மலம் வகைபடுத்தலாம்.உடலில் இருந்து வெளியேற்றும் கழிவுப்பொருட்கள முறையாக வெளியேற்றுவது உடல் நலனுக்கு அத்யாவசியமாகும்.மலத்தில் இரண்டு வகைகள் உண்டு.அவை மலம் மற்றும் கிட்டா.மலம் என்பது உடலில் ஏற்படும் கழிவு ,கிட்டா என்பது தாதுவின் கழிவுப்பொருட்களாகும்.
 
 

 


அக்னி

அக்னி உடலின் வளர்சிதை மற்றும் செரிமான செயல்பாடு அனைத்தும் உடலின் உயிரியல் தீயினால் நடப்பவையே ஆகும்.அக்னி அடிப்படையாக உடலின் கால்வாய்,கல்லீரல் மற்றும் திசு செல்களில் பல்வேறு என்சைம்கள் உள்ளன.
 
 


 

 


உடல் ஒருங்கினைப்பு அமைப்பு

ஆயுர் வேதத்தில் வாழ்க்கை உடலின் புத்தி,மனம் மற்றும் ஆன்மா,உணர்வு இவை நான்கும் உடலின் கூட்டு வேலையாகும்.வாழும் மனிதன் மூன்றில் ஒன்றாக திரளுதல்(வாதம்,பித்தம் மற்றும் கபம்) அடிப்படை திசுக்கள் (ரசம்,ரத்தம்,மஜ்ஜை,எலும்பு,கொழுப்புதசை,எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து)மற்றும் உடலின் கழிவு உற்பத்தியில் சிறுநீர்,வியர்வை போன்றவை கழிவுப் பொருட்களாக உள்ளது.இதனால் மொத்த உடலில்,உருவாகும்.கழிவுகளை வெளியேற்றுவதால் உடலை ஆரோக்கியமாக இருக்கச் செய்கிறது.இந்த உடல் ஒருங்கினைப்பு அமைப்பு மற்றும் அதன் உட்பொருள்களை வளர்ச்சி மற்றும் அந்த கழிவுகள் செயல்படுத்த முடியும்.இது உணவு உட்கொள்வது செரிமானம்,உறிஞ்சுதல்,ஜீரணம் மற்றும் வளர் சிதை மாற்றம் குறிப்பிடத்தக்க உயிர் (அக்னி) மூலம் உளவியல் இயல் அமைப்புகள் மூலம் நோயை குணப்படுத்தமுடியும்.
 
 

 


பஞ்ச மஹா புத்தாஸ்

ஆயுள் வேதத்தின்படி மனித உடலானது பிரபஞ்சத்தின் அடிப்படை கூறுகளை கொண்டிருக்கிறன.அவை பூமி,நீர்,நெருப்பு,காற்று மற்றும் ஆகாயம் ஆகும்.உடல் நலம் மற்றும் உடல் உறுப்புகளில் இவை உடலின் கட்டமைப்பிற்கு தேவைகேற்ப சீரான முறையில் வெவ்வேறு விகிதங்களில் உடலில் அமைந்துள்ளது.உடலின் அணி வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியானது உணவு மற்றும் அதன் ஊட்டச்சத்தினை சார்ந்திருக்கின்றன .(எ.கா) நாம் உண்ணும் உணவில் அடிப்படை கூறுகளை கொண்டுள்ளது. இவை உயிர் தீயினால் எரிக்கப்பட்டு பின்பு அவை உடலின் கூறுகளை வளப்படுத்துவதற்கு உதவுகிறது.
 
 

 


உடல் நலம் மற்றும் நோய்

உடல் நலம் மற்றும் நோயானது உடலின் பல்வேறு உட்பொருட்களின்ஆ இடையே சமநிலை மற்றும் மொத்த உடல் அணியும் ஒரு சீரான நிலையில் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது பொறுத்து சார்ந்திருக்கிறது.உடலின் உள் மற்றும் வெளிப்புற காரணிகளும் உடலின் இயற்கையான சமநிலையில் தொந்ததரவு உண்டாக்கி நோய்களை உருவாக்க முடியும்.இந்த சமநிலை இழப்பானது முறையில்லாத உணவு முறை,விரும்பத்தகாத பழக்கம் ,மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையில் கவனம் செலுத்தாமை,ஆகியவைகளினால் ஏற்படுகிறது. பருவ கால இயல்பு,முறையற்ற உடற்பயிற்சி அல்லது உடலின் உறுப்புகளின் ஒழுங்கற்ற பழக்கவழ்க்கங்கள் இந்த தகுதியில்லாத செயல்களினால் உடலிலும், மனதலிலும் ,உடல் சமநிலையில் குழப்பம் உண்டாக்கும்.உடலில் மற்றும் கடினமான மன இறுக்கம் சரியான வாழ்க்கை முறை ,நன்னடத்தை போன்றவை பஞ்சகர்மா மற்றும் ரசாயன தீர்வுக்குள்ளது.
 
 

 


நோயறிதல்

ஆயுர் வேதத்தில் உடல் பரிசோதனையில் எப்போதும் தனி குறிப்பிட்ட உறுப்பை மட்டும் பரிசோதிக்காமல் முழு உடலையும் பரிசோதிப்பார்.மருத்துவர் மிக கவனமாக நோயாளிகளின் உடல் உறுப்புகளில் செயல்,மனநிலை ஒழுங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்துவர் பாதிக்கப்பட்ட உடல் திசுக்கள்,உடல் உறுப்புகளில் எந்த நோய் எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது.எந்த தளத்தில் அமைந்துள்ளது என பரிசோதனை செய்வர்.உடலின் மூலக்கூறு (திசுக்கள்)இருப்பிடம்,தினசரி வேலை முறை,உணவு பழக்கவழக்கங்கள் சமூக பொருளாதார மற்றும் நோயாளியின் சுற்று சூழல், போன்ற நிலைமைகளுக்கு கீழ்கண்டவாறு பரிசோதனையில் செய்யப்படுகிறது:
•பொது உடல் பரிசோதனை
•துடிப்பு பரிசோதனை
•சிறுநீர் பரிசோதனை
•மலம் பரிசோதனை கண்கள் மற்றும் நாக்கு பரிசோதனை
•தொட்டுணரக்க்கூடிய மற்றும் செவிப்புலன் செயல்பாடு பரிசோதனை ஆகும்.
 
 

 


சிகிச்சை

அடிப்படையாக சிகிச்சை முறை தனிமைபடுத்தி அணுகுவது ஆகும்.இப்படி நோயாளியை தனிமையாக்கி சிகிச்சை அளிக்கும் மருத்துவரால்,இயல்பாக சுத்ந்திரமாக நோயாளியை நோயில் இருந்து விடுவித்து உடல் நலத்தைஅளிக்கிறார.ஆயுர்வேதாவின் உயர் பணி குறிக்கோள் உடல் நலத்தை பேணி,நலத்தை மேம்படுத்தி,நோய்தடுப்பு, நோயை குணமாக்குதல் ஆகும்.

ஒவ்வொரு உடலிலும் நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை –நோய் உண்டான காரணம்,உண்டான இடம்,பஞ்சகர்ம விதிமுறைகளின்படி மருந்துகள்,சரியான உணவு பழக்கம்,செயல் மற்றும் நடப்பு முறை ,சமநிலையை திரும்ப அடைதல்,உடலை வலிமையாக்குதல்,போன்றவைகளை கூடிய வரை எதிர் காலத்தில் சரி செய்ய முடியும்.

சிகிச்சை பொதுவாக மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது ,குறிப்பிட்ட உணவு கட்டுபாடு ,பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடு இந்த மூன்று நடவடிக்களை பயன்படுத்த இரண்டு வழிகளை கையாளப்படுகிறது.முதல அணுகு முறையானது நோய் எதிர்ப்பு தூண்டுதலை கணக்கிட்டு ,நோயின் காரணத்தின் உண்மையை கண்டறிந்து நோயின் வெளிப்பாடுகள் வைத்து கையாளப்படுகிறது.இரண்டாவது அணுகுமுறையில் மருந்து ,உணவு மற்றும் செயல்பாடு ஆகிய மூன்று நடவடிக்கைகளை கொண்டு நோய்களுக்கான காரணிகள் மற்றும் வெளிப்பாடுகள் போன்ற விளைவுகளை சரி செய்ய கையாளப்படுகிறது.சிகிச்சை அணுகு முறைகளை இந்த இரண்டு வகையான முறையே “விப்ரீட்டர்”மற்றும் ‘விப்ரீட்டத்தகரி’ சிகிச்சைகள் என்ப்படுகின்றன.

சிகிச்சைகள் வெற்றிகரமாக அமைய நான்கு விசயங்கள் அத்தியாவசியமாக உள்ளன.அவைகள்:
i.மருத்துவர்
ii.மருந்து எடுத்துக்கொள்ளுதல்
iii.மருத்துவ பணியாளர்கள்
iv.நோயாளி

இதில் முதல் வருபவர் மருத்துவர் ஆவார்.அவர் தொழிநுட்ப திறன்,விஞ்ஞான அறிவு,தூய்மை மற்றும் மனிதனா புரிந்து கொள்ளும் ,அறிவுகூர்மை மற்றும் மனிதன் சேவை செய்பவராக இருக்க வேண்டும்.அடுத்ததாக பயன்படுத்தும் மருந்துகள் உயர்ந்த தரத்துடன் போதுமான அளவுடன் ,பரவலாகவும் கிடைக்க வேண்டும்.மூன்றாவதாக மருத்துவமனை ஊழியர்கள் பங்கு ஆகும்.பாசம்,அனுதாபம்,அறிவார்ந்த ,சுத்தமான மற்றும் சமயோசிதம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் .நான்காவதாக நோயாளியின தன்னை கூட்டு ஒத்துழைப்பு ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன் மருத்துவரிடம் தன்நிலையை எடுத்துக்கூறுதல் வேண்டும்.

ஆயுர்வேதம் நோய் காரணியின் இறுதியாக உள்ள கடைசி அறிகுறிகள் தெரியும் வரை செயல்படுகிறது.உண்மையான விளைவுகளை கண்டறிந்து. வெளிப்படையான மருத்துவத்தை செய்வதன் மூலம் நோயாளி குணமாக்கப்படுகிறார்.
 
 

 


சிகிச்சை வகைகள்


சோதானா திரபி - (தூய்மையாக்குதல் சிகிச்சை)


 
 

 


சாமானா திரபி - (நோய்க்குறி நீக்கல் சிகிச்சை)


 
 

 


பாதியா வய வாஸ்தா - (உணவு மற்றும் செயல்பாடு பரிந்துரை)


 
 

 


நிதான் பரிவர்ஜன் - (நோய் தவிர்த்தல்,காரணிகள் காரணமாக அதிகரிக்க கூடியவைகளாகும்)


 
 

 


சத்வ வாஜாய - (உளவியல்)


 
 

 


இரசாயான சிகிச்சை


 
 

 


உணவு மற்றும் ஆயுர் வேத சிகிச்சை

ஆயுர்வேதம் சிகிச்சையில் உணவுக்கட்டுபாடு பெரும் பங்கினை வகிக்கின்றது.ஏனெனில் மனித உடலானது உணவை பொறுத்தே உள்ளது.அத்துடன் அவரது குணமும் தனி நபர்கள் மனம் மற்றும் ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றை பொறுத்து அமையும்.உண்ணும் உணவு உடலில் பல மாறுதல்களை அடைகிறது.முதலில் உடலில் சாராகவும்,இரத்தமாகவும்,பின் தசை, கொழுப்பு, எழும்பு, எழும்பு மஜ்ஜை,இனப்பெருக்க உறுப்புகளில் பங்கு கொள்கிறது.இதனால் உணவு அனைத்து வளர் சிதை மாற்றம் மற்றும் வாழ்க்கை நடவடிக்கைகள் அடிப்படையில் உள்ளது.சத்துக்குறைவான உணவு,முறையற்ற உணவு,நோய் நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
 
 

 


இந்திய அளவிலான ஆயுற்வேத நிறுவனங்கள்


ராஸ்டிரிய ஆயுர்வேத வித்யதீபம்,டெல்லி

 

 


 
 

 


தேசிய அளவிலான அயுற்வேத நிறுவனம் ஜெய்பூர்

 


 
 

 


முதுநிலை கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிநிறுவனம்,ஜாம்நகர்,குஜராத்

 

 


 

 


அனைத்திந்திய ஆயுற்வேதத்தின் நிறுவனம்


 
 

 


ஆயுஸ் துரையின் வெளியிடுகள்
•ஆயுற்வேதத்தில் வீட்டுவைத்தியம்
•21 வகையான நோய்களுக்கு யோகா, இயற்கைமுறையில் வைத்தியம்.
•நோயிகள் வாரியான ஆயுஸ்ல் விபரங்கள்
ஆயுஸ் பொறுத்தான உண்மைகள் மற்றும் தொன்மங்கள் •ஆயுஸ்ல் தரக்கட்டுப்பாடு
•யுனானியில் வீட்டுத்தீர்வு
•சித்த மருத்துவமுறை 
 
 

 
 

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies