துபாய் லொட்டரி 17.68 கோடி ரூபாய் .கேரளாவைச் சேர்ந்த பெண்ணுக்கு கிடைத்துள்ளது
07 Apr,2017
.....................
கேரளாவைச் சேர்ந்த பெண்ணுக்கு, துபாய் அபுதாபியில் லொட்டரி சீட்டு பரிசுத் திட்டத்தில் 17.68 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குழந்தைகள் நல டாக்டர் நிஷிதா ராதாகிருஷ்ண பிள்ளை. இவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்துவருகிறார்.
நிஷிதா, அபுதாபியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அபுதாபியில் லொட்டரி சீட்டு விற்பனை இன்னும் அமுலில் உள்ளதால், அங்கு வசித்தபோது, லொட்டரி சீட்டுகளை வாங்கிக் குவிப்பாராம்.
அபுதாபியில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தபோதும் நிஷிதா லொட்டரி வாங்குவதை நிறுத்தவில்லை. தன் கணவரும் ஒன்லைனில் லொட்டரிவாங்குவதில் ஆர்வம் கொண்டவராம்.
இந்த நிலையில், நிஷிதா ஒன்லைனில் வாங்கிய லொட்டரிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. மேலும், முதல் பரிசாக 10 மில்லியன் திராம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல், துபாய் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
10 மில்லியன் திராம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 17 கோடியே 68 லட்சமாகும். நிஷிதா இதுவரை 50 சீட்டுகளுக்கு மேல் வாங்கி ஏமாற்றம் அடைந்துள்ளாராம்.