நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.!
13 Mar,2023
விக்னேஷ் அவர்களுக்கு நயன்தாரா சிபாரிசு செய்து ak 62 திரைப்படத்தினை இயக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். ஆனால் விக்கி அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
கதையை எழுதாமல் விக்கி தன்னுடைய பர்சனல் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டுள்ளார் அதனால் அஜித் மற்றும் லைக்கா கடும் கோபத்திற்கு ஆளானார் உடனே விக்கியை அஜித் 62 திரைப்படத்திலிருந்து நீக்கினார்கள். தன்னை திடீரென நீக்கி விட்டதால் மனம் நொந்து பல பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார். தன் கணவரை தூக்கி அவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என மனைவி நயன்தாரா பல திட்டங்களை போட்டு வருகிறாராம்.
அந்த வகையில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஒரு கதையை எழுதி அதனை கன்பார்ம் செய்து நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்கள், நயன்தாரா மற்றும் விக்கிக்காக விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் படத்தில் அபிஷேக் பச்சனை நடிக்க வைக்க பல திட்டம் தீட்டி வருகிறாராம்.
இதற்காக பாலிவுட் எழுத்தாளர் ஒருவரை கதை எழுத கூப்பிட்டுள்ளார்கள் அதனால் தன் மனைவி நயன்தாரா மற்றும் தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் விக்கி மும்பை முகாம் இட்டுள்ளார். இந்த படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை முடித்த பிறகு பிரதீப் ரங்க நாதனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
தன்னை அவமானப் படுத்தியவர்களை பழிக்கு பழி வாங்கவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் உறுதிமொழி எடுத்து அதிரடியாக பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள்