லாஸ்லியாவிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்
18 Sep,2019
தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி ஆனது தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்று கூறலாம் .இந்த நிகழ்ச்சியில் யார் ஜெயிப்பார்கள் என்று யாரும் கூற முடியாத நிலை தற்போது இருந்து வருகிறது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் லாஸ்லியா இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இதற்கு பல திரைப்பட வாய்ப்புகள் வரும் என கூறப்படுகிறது .இருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சின்னத்திரை தொடரில் இரண்டாம் பாகத்தில் இவரை நடிக்க வைக்க இயக்குனர் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் புகழ் லாஸ்லியா இந்த சின்னத்திரை தொடர்களில் நடித்தால் அவரது புகழ் கட்டாயம் உயரும் என்பதில் எந்த வித குறையும் இல்லை ஆனால் இந்த சின்னத்திரை தொடரில் நடிக்க லாஸ்லியா அதற்கு அவரது தந்தை ஒப்புதல் அளிப்பாரா என்பது மிகப்பெரிய விஷயமாக உள்ளது.