எனக்கு உன் அக்கா வேணும்..! நீ ஹீரோயின்..டீல் ஓகேவா..?
13 Jun,2017
எனக்கு உன் அக்கா வேணும்..! நீ ஹீரோயின்..டீல் ஓகேவா..? சிதைந்த ஒரு குடும்பம்..!
அந்த நடிகர் பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர். வித்தியாசமான நடிப்பு, பலகுரலில் மிரட்டல், என தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என மிரட்டியவர் அவர்.
அக்கட தேசத்தில் அவர் ஹீரோவாக நடித்த பார்வையற்ற படம் தூள் கிளப்பி, இந்தியா முழுக்க பாப்புலர் ஆனார்.
அவரிடம் ஒரே ஒரு பழக்கம் இருந்தது என்கிறார்கள். எல்லோரும் ஹீரோயின் மீது ஆவல் கொள்ளும் பழக்கம் இல்லையாம்.
ஹீரோயின் கூட ஷூட்டிங் வரும் சொந்தங்கள் மீது பயங்கர பாசம் வைத்து விடுவாராம். அப்படி பாசம் வைத்த சொந்தம் மீது காதல் கணை தொடுத்து, எப்பாடு பட்டாலும் அடைந்து விடுவாராம்.
அப்படி ஒரு கன்னடப் படம் புக் ஆன போது அவரோடு ஜோடி சேர்ந்த ஒரு அழகிக்கு சூப்பர் அழகில் ஒரு சகோதரியாம். அந்த அக்கா ராஜஸ்தானைச் சேர்ந்தவர்.
ஷூட்டிங் முழுக்க அந்த அக்காவைச் சுற்றி வந்தும் பிடி கொடுக்கவில்லை என்கிறார்கள். வேறு என்ன வழி என்று யோசித்தவர், என்னோடு அடுத்த படத்தில் நீ தான் ஹீரோயின். ஆனால் ஒரே ஒருநாள் உன் அக்கா வேண்டும் என்று ஓப்பனாகவே கேட்டு விட்டார்.
ஆடிப் போய் விட்டார் ஹீரோயின். பெரிய வாய்ப்பு. ஆனால் சகோதரி வேண்டும் என்கிறார்.
குழம்பிப் போனார் ஹீரோயின். அன்று இரவு ஹோட்டலில் தனது அக்காவிடம் ஹீரோ விருப்பதைக் கூறினார். அக்கா அதிர்ந்தார். ஒன்றும் சொல்லவில்லை.
அடுத்த வாரம் அந்த ராஜஸ்தான் ஹீரோயினுக்கு பெரிய அட்வான்ஸ் வாங்கிக் கொடுத்தார் ஹீரோ.
அக்கா, தங்கை இருவரும் ஆடிப் போனார்கள். அவ்வளவு பெரிய அட்வான்ஸ் தொகையைப் பார்த்ததே இல்லை.
அக்கா வெட்கத்துடன் ஒகே சொல்லி விட்டார். அங்குதான் விதி விளையாடியது. ஒரே ஒரு முறை என்று சொன்னவர் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கினார். லயித்துவிட்டார்.
இருவரும் சேர்ந்து வீடியோ, போட்டோக்கள் எடுத்துக் கொண்டார்கள். பெங்களூரு நகரில் சுற்றித்திரிந்தார்கள்.
ஷூட்டிங் முடிந்தது. கண்ணீரோடு விடை பெற்றார்கள். ஆனால் அடுத்த மாதமே தனது மாநிலத்தில் ஹீரோ மர்ம மரணம் அடைந்தார்.
அவரது போனை எடுத்துப் பார்த்த குடும்பம் ஆடிப் போனது. ராஜஸ்தானுக்கு மிரட்டல்கள். ஹீரோயின் குடும்பம் அதிர்ந்தது. பெரிய பூகம்பம்..! இப்போது அக்காவை விட்டு அவர் கணவர் பிரிந்து விட்டார்.
ஹீரோயினுக்கும் வாய்ப்புகள் இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் கலங்கிப்போய் இருக்கிறது அந்தக் குடும்பம்.
கட்டுப்பாடுகள் அற்ற வாழ்க்கை தானும் கெட்டு அடுத்தவர்களையும் கெடுத்து விடும்.!