தந்தையை அடுத்து மகனை இயக்கும் பிரபல இயக்குனர்!
08 Nov,2016
தந்தையை அடுத்து மகனை இயக்கும் பிரபல இயக்குனர்!
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய முதல் படமான ‘பகல் நிலவு’ படத்தில் மறைந்த பிரபல நடிகர் முரளி நடித்திருந்தார்.
இந்நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் முரளியின் மகன் அதர்வா நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
மணிரத்னம் தற்போது கார்த்தி, அதிதிராவ் நடித்து வரும் ‘காற்று வெளியிடை’ படத்தை இயக்கி வருகின்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அதர்வா படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே நேரத்தில் அதர்வா தற்போது ‘செம போதை ஆகாதே’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.