சினிமா செய்தித் துளிகள் ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட் சூடுபிடிக்குமா?

18 May,2016
 

             


தமிழில் கவனம் செலுத்தும் லாவண்யா திரிபாதி!


  

சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் நாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி.உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவரான இவர், அம்மாநில

அழகியாகவும் தேர்வானவர். பின்னர் சில இந்தி சீரியல்களில் நடித்து விட்டு, தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். அங்கு பல படங்களில் நடித்த பிறகு பிரம்மன் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த படத்தின் தோல்வி காரணமாக கோடம்பாக்கம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் மறுபடியும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கி வரும் மாயவன் படத்தில் யாருடா மகேஷ் படத்தில் நடித்த சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பிரம்மன் படத்தை விட இந்த படத்தில் லாவண்யா திரிபாதிக்கு அழுத்தமான கதாபாத்திரமாம். அதனால் இந்த படம் வெற்றியாக அமைந்தால் அடுத்து கோலிவுட்டில் முகாமிடவும் முடிவு செய்திருக்கிறார் லாவண்யா. இந்த சேதி தட்டுத்தடுமாறி வளர்ந்து கொண்டிருக்கும் சில நடிகைகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


ஏ.எல்.விஜய் படத்தில் மீண்டும் எமிஜாக்சன்!


  
.
ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் தமிழுக்கு வந்தவர் இங்கிலாந்து நடிகை எமிஜாக்சன். அந்த படத்தில் இங்கிலாந்து பெண்ணாகவே

நடித்த வர், தமிழ் கலாச்சார நடிகையாகவும் சில காட்சிகளில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து விக்ரமை வைத்து தான் இயக்கிய தாண்டவம் படத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராக எமியை நடிக்க வைத்தார் ஏ.எல்.விஜய். அதன்பிறகு ஐ, தங்கமகன், கெத்து, தெறி என பல படங்களில் நடித்த அவர், தற்போது ரஜினியுடன் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அதே ஏ.எல்.விஜய், தற்போது பிரபுதேவா-தமன்னாவை வைத்து இயக்கி வரும் காந்தா படத்திலும் நடித்துள்ளார் எமிஜாக்சன். இந்த படத்தில் தமன்னா நாயகி என்றபோதும், எமிஜாக்சனுக்கு தாண்டவம் படத்தில் கொடுத்தது போன்று முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் கொடுத்திருக்கிறார் ஏ.எல்.விஜய். முதலில் நட்புக்காக எமியை நடிக்க வைக்கயிருந்த இயக்குனர், பின் னர் அவரது கேரக்டரில் வெயிட் சேர்த்து கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் கேரக்டராக மாற்றி விட்டாராம். மேலும். ஏ.எல்.விஜய், தன்னை கோலிவுட்டுக்கு அழைத்து வந்தவர் என்பதால், அவரிடம் தனக்கு எந்தமாதிரியான வேடம் என்றுகூட கேட்காமல் கமிட்டானவர், ஸ்பாட்டுக்கு சென்றபோதுதான் கேரக்டர் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு நடித்துக்கொடுத்தாராம்.



தமன்னா வேடத்தில் ஸ்ருதிஹாசன்!


  
.
இசை படத்திற்கு பிறகு தமிழில் முழுநேர நடிகராகி விட்டார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் தெலுங்கில் ஏற்கனவே தான் இயக்கிய குஷி, புலி படங்களில்

நடித்த பவன் கல்யாணை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க தயாராகிக்கொண்டி ருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், அப்படத்தின் நாயகி யார் என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் ஸ்ருதிஹாசன் கமிட்டாகியிருப்பது இப்போது உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே பவன்கல்யாணுடன் கப் பார்சிங் ஹிட் படத்தில் நடித்தவர் ஸ்ருதிஹாசன் என்பதால் இது சாத்தியமாகியுள்ளதாம்.

மேலும், தமிழில் அஜீத் நடித்து வெளியான வீரம் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் தமிழில் தமன்னா நடித்த ரோலில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அதே சமயம், தமிழில் தமன்னா நடித்தது போன்று புடவை கெட்டப்பில் ஸ்ருதி நடித்த போதும், பாடல் காட்சிகளில் தெலுங்கு ரசிகர்களின் ரசனையை மனதில் கொண்டு கவர்ச்சி உடையணிந்து நடிக்கிறாராம் ஸ்ருதிஹாசன். அது மட்டுமின்றி, தெலுங்கிற்காக காட்சிகளில் சில திருத்தங்களை செய்திருக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா.

 


முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க விரும்பும் மாயா!


  
.
டார்லிங்-2, உன்னோடு கா படங்களில் நடித்தவர் மாயா. இதில் டார்லிங்-2 அவருக்கு பெரிதாக பெயர் வாங்கித்தரவில்லை. ஆனால், உன்னோடு கா

அவர் மீது வெளிச்சம் போட்டு விட்டது. அந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித் துள்ள மாயா, பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்து இளவட்ட ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார். இந்த நிலையில், பல புதிய பட வாய்ப்புகள் அவரை முற்றுகையிட்டு வருகிறதாம். ஆனபோதும், அவசரப்படாமல் கதைகளை ஓகே பண்ணும் முடிவில் இருக்கிறாராம் மாயா.

அதாவது, நல்ல கதைகளுக்கு முதலிடம் என்றபோதும் அந்த படத்தில் நடிக்கும் ஹீரோ மார்க்கெட் இருப்பவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அப்படி நடித்தால்தான் அடுத்தகட்டத்துக்கு நான் செல்ல முடியும். அதனால், என்னைத்தேடி வந்துள்ள கதைகளில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கப்போகிறேன் என்று கூறும் மாயா, உன்னோடு கா படம் எனது கிளாமருக்கு ஒரு சின்ன சேம்பிள்தான். அதிரடியான கமர்சியல் கதைகள் கிடைத்தால் அதற்கேற்ப முழுமையாக மாறி நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்கிறார்.

ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட் சூடுபிடிக்குமா?


  

ஈட்டி படத்திற்கு பிறகு மருது, காஷ்மோரா, சங்கிலி புங்கிலி கதவ திற என 3 படங்களை கைவசம் வைத்துள்ளார் ஸ்ரீதிவ்யா. இதில் காஷ்மோரா

படத்தில் நயன்தாராவும் நடித்திருப்பதால், அந்த படத்தை பெரிதாக எதிர்பார்க்கவில்லையாம் ஸ்ரீதிவ்யா. ஆனால் விரைவில் வெளியாகியிருக்கும் விஷாலின் மருது மற்றும் ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ திற ஆகிய படங்களை எதிர்பார்க்கிறார். இதில் மருது படத்தில் மதுரைக்கார பெண்ணாக கலக்கி எடுத்துள்ளாராம் ஸ்ரீதிவ்யா.

 

ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைப்போலவே இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ள ஸ்ரீதிவ்யா, அடாவடித்தனமான பெண்ணாக நடித்துள்ளாராம். அதனால் இந்த படத்தில் என்னை வித்தியாசமான கோணத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று கூறும் ஸ்ரீதிவ்யா, இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாகயிருப்பதால், இதை வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எனது மார்க்கெட் சூடுபிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தனது எதிர்பார்ப்பை கூறி வருகிறார்.





Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies