ஓய் கிடாபூசாரி மகுடி விமர்சனம்

09 Apr,2016
 

              


ஜெயிலில் கைதியாக இருக்கும் நாயகி ஈஷா, தனது அக்காவின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வருகிறார். பஸ்சில் ஊருக்கு செல்லும்போது நாயகன் கீதனும் அதே பஸ்சில் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பயணம் செய்கிறார். பஸ் ஒரு நிறுத்தத்தில் நிற்கும்போது, கீழே இறங்கும் கீதனின் செயினை அவனுக்குத் தெரியாமலேயே திருடன் ஒருவன் திருடிச் செல்கிறான்.

இதை அறிந்த நாயகி ஈஷா, பஸ்சிலிருந்து இறங்கி அந்த திருடனைத் துரத்திப் பிடித்து செயினோடு திரும்பி வருகிறார். அப்போது, அவர் செல்லவேண்டிய பஸ் சென்று விடுகிறது. அதில், அவர் கொண்டு வந்த உடமைகளும் சென்றுவிடுகிறது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் அவருக்கு, கீதன் தான் ஒரு கிராமத்தில் பெரிய பண்ணையாரின் மகன் என்று பஸ்சில் மற்றொருவருடன் பேசியது நினைவுக்கு வருகிறது.

தனது பையை கீதன் எடுத்து சென்றிருக்கலாம் என்று நினைத்த ஈஷா, கீதன் சொன்ன கிராமத்திற்குச் சென்று செயினை கொடுத்துவிட்டு, தனது பையை வாங்கிக் கொண்டு வரலாம் என்று புறப்படுகிறார். கிராமத்தில் அவன் சொன்ன வீட்டுக்கு சென்று செயினை பற்றிச் சொன்னதும், வீட்டில் உள்ள அனைவரும் அவளை கீதனின் காதலி என்று நினைத்துக் கொண்டு அன்போடு உபசரிக்கிறார்கள். உண்மையை சொல்ல எவ்வளவுதான் முயன்றாலும் யாரும் இவருடைய பேச்சை கேட்பதாயில்லை. அவரும் தனது அக்கா ஊருக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பதால் வேறு வழியின்றி அங்கேயே தங்குகிறாள்.

மறுமுனையில், கீதன், ஈஷா விட்டுச் சென்ற பையை எடுத்துக் கொண்டு தனது காதலியை பார்க்க சென்னைக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்புகிறார். வந்த இடத்தில் ஈஷாவை தன்னுடைய காதலி என்று தன்னுடைய குடும்பமே நினைத்துக் கொண்டிருப்பதை கண்டதும் அதிர்ச்சியடைகிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க கீதனின் குடும்பம் முடிவு செய்கிறது.

இந்த குழப்பத்திற்கு மத்தியில் கீதன் ஈஷாவை கரம்பிடித்தாரா? அல்லது தனது காதலியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் கீதனுக்கு இதுதான் முதல்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், ரொமான்ஸ், கோபம், வெகுளித்தனம், சண்டைக்காட்சி என எல்லாவற்றிலும் பெரிய நடிகர்களுக்கு சவால் விடுகிற அளவுக்கு நடித்திருக்கிறார். ஈஷாவும் தன் பங்குக்கு நாயகனுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்.

நாயகனின் மாமாவாக வரும் அர்ஜுனன் படத்தில் காமெடி கதாபாத்திரத்தை சுமந்து சென்றிருக்கிறார். இதுவரை மாடர்ன் பையனாக பார்த்த இவரை, இந்த முறுக்கு மீசை, வேஷ்டி சட்டை சகிதமாக பார்க்கும்போது கிராமத்து இளைஞனாக மனதில் பதிகிறார். இவரும், நாயகனின் தாத்தாவாக வரும் சங்கிலி முருகனும் இணைந்து செய்யும் காமெடிகள் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

கிராமத்து பின்னணியில் ஒரு அழகான காதல் மற்றும் செண்டிமென்ட் கலந்த ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரான்சிஸ் மார்கஸ். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கிராமத்து படத்தை ரசிக்கும்படி கொடுத்தற்கு அவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். அதேபோல், நிறைய பேர் புதுமுகங்களாக தெரிந்தாலும், அவர்களை அழகாக வேலை வாங்கியிருக்கிறார். ஆனால், ஒரேயொரு இடத்தில் மட்டும்தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஈஷா எதற்காக ஜெயிலுக்கு போனார் என்பதை கடைசி வரை சொல்லாமல் சென்றதுதான்.

படத்திற்கு மிகப்பெரிய பலமே இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் பாடலும். கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்களுக்கு இசையமைப்பது இளையராஜாவுக்கு கைவந்த கலை. அதை இந்தப் படத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார். மேலும், யுகாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஓய்’ ஒய்யார நடை.


 கிடாபூசாரி மகுடி

பதிவு: ஏப்ரல் 08, 2016 13:04
கிடாபூசாரி மகுடி

நாயகன் தமிழ் கிராமத்தில் ஐயனார் சாமிக்கு கிடா வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் சிறுவயதில் இருக்கும் போதே, இவரது அக்காவிற்கு திருமணம் நடந்து விடுகிறது. ஐந்து வருடமாக குழந்தை பிறக்காமல் இருந்த அக்காவிற்கு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தைக்கு மலர் (நட்சத்திரா) என்று பெயர் வைத்து தன்னுடைய உயிராய் நினைத்து வளர்த்து வருகிறார் தமிழ்.

சிறு வயதில் இருந்தே நட்சத்திராவை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ஆசையுடனே தமிழ் வளர்ந்திருக்கிறார். ஆனால் நட்சத்திராவோ சென்னையில் இருந்து வந்த ராம்தேவ் என்பவரை காதலிக்கிறார். ராம்தேவ்வும் நட்சத்திராவின் காதலை ஏற்று, ஆங்காங்கே பார்த்து பேசி வருகிறார்கள்.

இவர்கள் காதலிப்பது ஊர் மக்கள் மூலமாக தமிழ் காதுக்கு செல்கிறது. கோபமடைந்த தமிழ், நேராக வீட்டுக்கு சென்று நட்சத்திராவிற்கு தாலி கட்டி திருமணம் செய்துக் கொள்கிறார். முதலில் தமிழை கணவனாக ஏற்க மறுக்கும் நட்சத்திரா, பின்பு அவரின் அன்பை உணர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டு இருவரும் சந்தோஷமாய் வாழ்கிறார்கள்.

இந்நிலையில், காதல் தோல்வியால் சென்னைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வருகிறார் ராம்தேவ். இவரை பார்த்தவுடனே தமிழ்-நட்சத்திரா குடும்பத்தில் பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனைகள் தீர்ந்ததா? இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக தமிழ் நடித்து இவரே படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். முதல் பாதியில் நட்சத்திரா மீது பாசமுள்ள மாமாவாகவும், இரண்டாம் பாதியில் வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியான நட்சத்திராவிற்கு இதுதான் முதல் படம். இவர் காதலியாகவும், மனைவியாகவும், அம்மாவாகவும் என தன்னுடைய நடிப்பு திறனை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். படத்திற்காக மொட்டை அடித்து, கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

இரண்டாவது நாயகனாக வரும் ராம்தேவ் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிங்கம்புலி, பவர் ஸ்டார் சீனிவாசன், செவ்வாழை ராசு, சுப்புராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

‘என் ராசாவின் மனசிலே’, ராஜ் கிரண் படம் பாணியில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெயக்குமார். குறைந்த பட்ஜெட்டில் கிராமத்து பின்னணியில் தரமான படத்தை கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி மட்டும் சற்று நெருடலை தருகிறது. இதை தவிர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

படத்திற்கு பெரிய பலம் இளையராஜாவின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. பின்னணியை இசையையும் வெளுத்து வாங்கியிருக்கிறார். ரவி சீனிவாசின் ஒளிப்பதிவும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கிடா பூசாரி மகுடி’ இனிமை.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies