சினிமா செய்தித் துளிகள் எந்த கதாபாத்திரத்திலும் என்னால் நடிக்க முடியும்! காஜல்

11 Mar,2016
 





பிரபுதேவா படத்தில் நடிக்கப்போவது யார்?





 




தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குபவர் பிரபுதேவா.

இவர் தற்போது தமிழில் ஏ.எல். விஜய் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவாகவும் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் புதிய படத்தை தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் இவர் மீண்டும் தமிழில் ஒரு படத்தை இயக்கபோவதாகவும் இதில் கார்த்தி ஹீரோவாக நடிப்பார் என்றும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லையாம். அடுத்தடுத்து கார்த்தி பல படங்களில் நடிக்கவிருப்பதால் வேறொரு முன்னணி ஹீரோவை தேடி வருகிறாராம் பிரபுதேவா






 எந்த கதாபாத்திரத்திலும் என்னால் நடிக்க முடியும்! காஜல்



 

   

.

காஜல் அகர்வால் நடித்து கடந்த வருடம் ‘மாரி, பாயும் புலி’ ஆகிய படங்கள் வந்தன. தெலுங்கில் ‘டெம்பர்’ என்ற படம் வெளியானது. தற்போது கவலை வேண்டாம், தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘பிரம்மோற்சவம்’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

ஒரு இந்தி படமும் கைவசம் வைத்துள்ளார். காஜல் அகர்வால் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘சினிமாவில் ஒவ்வொரு நடிகர்-நடிகைக்கும் தனித்திறமை இருக்கிறது. சிலருக்கு நன்றாக நடனம் ஆடத் தெரியும். சிலர் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிப்பார்கள். இன்னும் சிலருக்கு சோகமாக நடிக்க வரும். ஆனால் எனக்கு எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க வருகிறது.

சினிமாவில் அறிமுகமான புதிதில் எதுவும் தெரியாமல்தான் இருந்தேன். ஆனால் இப்போது எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு விட்டேன். எந்த வேடம் கொடுத்தாலும் பிய்த்து உதறுவேன்.

நடனம் நன்றாக ஆடுகிறேன். காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறேன். சினிமாவுக்கு வந்தபோது அழுகை மட்டும் எனக்கு வராமல் இருந்தது. டைரக்டர்கள் அழுகையை கொண்டு வர மிகவும் கஷ்டப்பட்டனர்.

நான் சிறு வயதில் இருந்தே அழுதது இல்லை. அதனால் அழுகை வரவில்லை. படப்பிடிப்பில் கிளிசரின் போட்டு அழவைப்பார்கள். கண்ணீர் வரும். ஆனாலும் அந்த அழுகையில் ஜீவன் இருக்காது.

இப்போது, அழுவதற்கும் கற்றுக்கொண்டு விட்டேன். கேமரா முன்பு நின்றதும் டைரக்டர் அழச்சொன்னால் முகத்தை சோகத்துக்கு மாற்றி உடனே அழுது விடுகிறேன்.

எனது தோழிகள் நான் அழுவதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். காட்சிகளோடும், கதையோடும், கதாபாத்திரத்தோடும் இப்போது ஒன்றிப்போய் விடுகிறேன். அதனால் தான் எனது வளர்ச்சி இவ்வளவு தூரம் வந்து இருக்கிறது.’’

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.







அம்மாவாக நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டது ஏன்..?





 




நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தினை முதல் பிரதி அடிப்படையில் இயக்குனர் சற்குணத்தின் தயாரிப்பு நிறுவனமான சற்குணம் சினிமாஸ் தயாரிக்கிறது.

இப்படத்தை இயக்குனர் சற்குணமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இப்படத்தின் கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் மேற்கொள்கிறார். படத்திற்கு இசை விவேக் மெர்வின்.

நகைச்சுவை கலந்த திகிலூட்டும் கிரைம் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கப்படவுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறது. இப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம்.

மாயா படத்தைப் போலவே இந்தப் படத்திலும் ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்கிறாரம் நயன்தாரா. இந்தப்படத்தில் அந்தக்குழந்தைதான் பேய் என்றும் சொல்லப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு வெளியான ஆர்பன் என்கிற ஆங்கிலப்படத்தைத் தழுவியே இந்தப்படம் எடுக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையென்றால் இது நிச்சய வெற்றிப்படம் என்றும் சொல்கிறார்கள்.

அதனாலேயே மறுபடியும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.





சிம்புவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்?





 


     சிம்பு தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் 3 வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தை தொடர்ந்து ‘வாலு’ படத்தை இயக்கி விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்திலும் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் படம் முடிந்தபிறகு இப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு ஜோடியாக முன்னணி நடிகையை தேர்வு செய்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது காஜல் அகர்வாலை சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

காஜல் அகர்வால் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானால், சிம்புவுடன் அவர் ஜோடி சேரும் முதல் படம் இதுவாகும்.

மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம் என நம்பப்படுகிறது.



 

நயன்தாராவுடன் விக்ரம் பாங்காக் பயணம்








ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் “இருமுகன்” படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் 20ம் தேதி முதல் மே மாதம் வரை நடைபெற உள்ளது.

இதற்காக சென்னையின் முக்கிய படப்பிடிப்பு தளங்களில் வெவ்வேறு அமைப்பிலான 8 பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சென்னையைத் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் காஷ்மீரில் நடைபெற உள்ள படப்பிடிப்பிற்காக இயக்குநர் ஆனந்த் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் மற்றும் கலை இயக்குனர் சுரேஷ் செல்வராஜ் ஆகியோர் அங்கு நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தவேண்டிய இடங்களை தேர்வு செய்து வந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

காஷ்மீரைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டு பின்னர் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இவ்வாறு இடைவிடாது படப்பிடிப்பு நடைபெறுவதற்கு இயக்குனர் ஆனந்த் ஷங்கர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அளிக்கும் முழு ஒத்துழைப்பை காரணமாகும்.

கார்த்தி நடிக்கும் காஷ்மோரா படப்பிடிப்பில் நடித்து வரும் நடிகை நயன்தாரா, சென்னையில் நடைபெறும் இருமுகன் படப்பிடிப்பில் 21ம் தேதி கலந்து கொள்ள உள்ளார். இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் மூன்று பாடல் காட்சிகளும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் கார்கி எழுதியுள்ள பாடல் வரிகளுக்கு பிருந்தா மாஸ்டர் நடனமைக்க உள்ளார்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies