சினிமா செய்தித் துளிகள் எஸ்-3 அம்மாவாக நடிக்கும் அனுஷ்கா

09 Feb,2016
 


கவர்ச்சிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறேன்! -சாந்தினி


  
.
கே.பாக்யராஜ் இயக்கிய சித்து ப்ளஸ்-2 படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்தவர் சாந்தினி. அதன்பிறகு நகுல் நடித்த நான்

ராஜாவாகப்போகிறேன் என்ற படத்தில் நடித்த சாந்தினிக்கு பின்னர் தமிழில் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லை. அதனால் தெலுங்கு சினிமாவுக்கு சென்று சில படங்களில் நடித்தவர் தற்போது தமிழில் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இதுபற்றி சாந்தினி கூறுகையில், சென்னை பெண்ணான எனக்கு தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜின் இயக்கத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்த போது சந்தோசமடைந்தேன். அந்த படம் எதிர்பார்த்தபடி போகவில்லை என்றபோதும், பாக்யராஜின் அறிமுகம் என்கிற பெருமை எனக்கு உள்ளது.

அதோடு, சினிமாவில் உடம்பைக்காட்டி நடிப்பதை விட திறமையைக்காட்டி நடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன்தான் நான் நடிக்க வந்தேன். அதனால்தான் இப்போதுவரை நான் கிளாமர் விசயத்தில் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறேன். அதற்காக மாடர்னாக நடிக்க மறுக்கவில்லை. பாடல் காட்சிகளில் மிதமான கிளாமர் காட்டி நடிக்கத்தான் செய்கிறேன். ஆனால் ஒருபோதும் ஓவர் கிளாமர் காட்ட மாட்டேன். மேலும், இப்போதைய ரசிகர்கள் கிளாமராக நடிப்பவர் களை விட நல்ல பர்பாமென்ஸ் நடிகைகளைத்தான் ரசிக்கிறார்கள். அதனால் எனது கவர்ச்சி கொள்கையில் உறுதியாக இருந்து எப்போதும் லிமிட் தாண்டாமல் நடிப்பேன் என்கிறார் சாந்தினி.

 


உஷாரான லட்சுமிமேனன்!


  
.
சமீபகாலமாக ஒரே டைரக்டரின் படங்களில் தொடர்ந்து நடித்தாலோ அல்லது யாராவது நடிகர்களுடன் அதிகமான செல்பிக்களை எடுத்து

வெளியிட்டாலோ அந்த நடிகைகள் காதல் வளையத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த வகையில், நானும் ரவுடிதான் படத்தில் நடித்து வந்தபோது அப்பட டைரக்டரான விக்னேஷ் சிவனுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் நயன்தாரா. ஆனால் அது நயன்தாராவின் மார்க்கெட்டை எவ்வகையிலும் பாதிக்கவில்லை.

ஆனால், இதுபோன்ற கிசுகிசுக்களால் சிலநேரங்களில் மார்க்கெட் சரிவடைவதும் உண்டு. அதன்காரணமாக, தற்போது லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகள் உஷாராகி விட்டனர். அதாவது எந்தெந்த டைரக்டர், ஹீரோக்களின் படங்களில் தாங்கள் தொடர்ந்து நடிக்கிறோமோ அவர்களை அண்ணன் என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதில் லட்சுமிமேனனை எடுத்துக்கொண்டால் இதற்கு முன்பு, ஒருமுறை கிசுகிசுவில் சிக்கினார். அதையடுத்து இப்போது ஒரு டைரக்டருடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். ஆனால் இதை தொடரவிடக்கூடாது என்று நினைக்கும் லட்சுமிமேனன், தற்போது அந்த டைரக்டரை மற்றவர்களின் காதில் விழுமாறு அண்ணா அண்ணா என்று அழைக்கிறாராம். மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கும்போதும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் என்று சொல்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார் லட்சுமிமேனன்.

 







சமந்தாவின் மார்க்கெட் சூடு பிடிக்கிறது!



  
.
தமிழில் அஞ்சான் படத்திற்கு முன்பு வரை இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல்தான் நடித்து வந்தார் சமந்தா. ஆனால் அஞ்சானில் ரசிக

கோடிகள் மிரண்டு போகும் அளவுக்கு டூ-பீஸ் நடிகையாக பிரவேசித்தார். ஆனால் கத்தி படத்திற்கு பிறகு தொடர்ந்து அதே ரூட்டில் போனால் இன்னும் சில படங்களோடு வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என்பதால் தங்கமகனில் குடும்ப குத்து விளக்காக நடித்த சமந்தா, இப்போது மாடர்ன் ரோல் என்றாலும் கிளாமர் விசயத்தில் எல்லைக்கோடு வைத்தே நடிக்கிறார்.

 

ஆனால், தெலுங்கில் இப்போது அவர் நடித்து வரும் படங்களில் கிளாமர் விசயத்தில் எல்லைக்கோட்டை விலக்கிவிட்டாராம். காரணம், அங்கு இவருக்கு போட்டியாக உருவெடுத்துள்ள ராகுல் ப்ரீத் சிங், சில படங்களில் கவர்ச்சி சுனாமியாக வெடித்துளளாராம். அதனால் அவரை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக தானும் அஞ்சான் படத்தில் நடித்தது போன்று கவர்ச்சியில் களமிறங்கி நிற்கிறாராம் சமந்தா. இதனால் தெலுங்கில் முதல் ரவுண்டில் கவர்ச்சி எல்லையை அதிகமாக தாண்டாமல் இருந்து வந்த சமந்தா, இப்போது வாரி வழங்கி வருவதால் அவரது மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறதாம்.









நந்திதாவின் பர்சனல் வேண்டுகோள்!



   
.
அட்டகத்தி படத்தில் நடித்த நந்திதாவுக்கு முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அதன்பிறகு அவர் நடித்த எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய்

பால குமாரா, முண்டாசுப்பட்டி ஆகிய படங்கள் தொடர் வெற்றியாக அமைந்ததால் தனது தாய்மொழியான கன்னட சினிமாவை கூட மறந்து விட்டு தமிழ்ப்படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார் நந்திதா. அதோடு தொடர்ந்து ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்த அவர், இப்போது கொஞ்சம் கிளாமருக்கும் மாறியிருக்கிறார்.

இப்போது அவர் நடிப்பில் இடம் பொருள் ஏவல், அஞ்சல போன்ற சில படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. அதைத் தொடர்ந்து உள்குத்து, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். ஆனால், முன்பிருந்த பரபரப்பு இப்போது அவரது மார்க்கெட் இல்லை. அவர் எதிர்பார்த்தபடி அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த நந்திதா, மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக இப்போது தனது பெயரை நந்திதா ஸ்வேதா என்று மாற்றியிருக்கிறார். இந்த ஸ்வேதா என்பது அவரது நிஜ பெயர்தான். ஆனால் இதுவரை படங்களின் டைட்டில்களில் நந்திதா என்று அவர் பெயர் இடம்பெற்று வந்த நிலையில், இனிமேல் தனது பெயரை நந்திதா ஸ்வேதா என்று போடுமாறும் தற்போது தான் நடித்து திரைக்கு வர இருக்கும் படங்களின் டைரக்டர்களிடம் பர்சனலாக கேட்டுக்கொண்டு வருகிறார் நந்திதா.




மணிரத்னம் படத்தில் கார்த்திக்கு ஜோடி சாய் பல்லவி...!


  

ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் கார்த்தி, பிரேமம் புகழ் சாய் பல்லவி இருவரும்

நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக திரைத்துறையில் தகவல் அடிபடுகிறது. ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றிக்குப் பிறகு கூடுதல் கவனத்துடன் அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் மணிரத்னம்.

கார்த்தி, துல்கர் சல்மான் இருவரும் இணைந்து நடிக்க டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் புதிய படத்தை மணிரத்னம் தொடங்க திட்டமிட்டு இருந்தார். அந்தக்கதையைக் கேட்டுவிட்டு கார்த்தி, துல்கர் இருவரும் நடிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் இருவரது தேதிகளும் சரியாக அமையவில்லை. எனவே அந்தப்படத்தை இயக்கும் எண்ணத்தையே ஒத்தி வைத்தார் மணிரத்னம்.

அதன் பிறகு கார்த்தி மட்டும் ஸோலோ ஹீரோவாக நடிக்கும் கதையை எழுத ஆரம்பித்தார். தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டார் மணிரத்னம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்கவிருப்பதாக தகவல் அடிபடுகிறது.

நாகார்ஜுனா உடன் நடிக்கும் தெலுங்குப் (தமிழில் தோழா) படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து, தற்போது காஷ்மோரா படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. அப்படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்தப்படத்தை வழக்கம்போல் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. பிரேமம் மலையாளப் படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல். கார்த்தி, சாய் பல்லவி உடன் மற்ற பாத்திரங்களின் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

 


எஸ்-3 அம்மாவாக நடிக்கும் அனுஷ்கா!



  
.
என்னை அறிந்தால் படத்தில் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடித்தார் திரிஷா. அதையடுத்து மாயா படத்தில் நயன்தாரா அம்மாவாக நடித்தார்.

அவர்களைத் தொடர்ந்து சேதுபதி படத்தில் ரம்யா நம்பீசன் அம்மாவாக நடித்துள்ளார். இந்த நிலையில், அடுத்து அனுஷ்காவும் சூர்யாவுடன் நடித்து வரும் எஸ்-3 படத்தில் அம்மாவாக நடிக்கிறாராம்.

 

இற்கு முன்பு சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களில் சூர்யாவின் காதலியாகவே நடித்திருந்தார் அனுஷ்கா. அவர்களது திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில், அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். ஆனால் இப்போது எஸ்-3 என்ற பெயரில் உருவாகி வரும் சிங்கம்-3 படத்தில் சூர்யா-அனுஷ்காவின் திருமணம் முடிந்து அவர்களுக்கு குழந்தை பிறப்பது போன்று கதை உள்ளதாம். அதன்காரணமாக, திருமணத்திற்கு பிறகு கர்ப்பிணியாகும் வரை ஸ்லிம்மாக நடிக்கும் அனுஷ்கா, அதையடுத்து கர்ப்பிணியாகும்போது உடம்பில் வெயிட் போட்டு நடிக்கிறாராம்.


 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies