சினிமா செய்தித் துளிகள் விஜய், அஜித் படங்களுக்கு கல்லெறியும் ராகுல் ப்ரீத் சிங்!

28 Jan,2016
 

மீண்டும் நிரூபித்த நடிகர் விஷால்



ஏற்கெனவே காரைக்குடியில் திருட்டு டிவிடி விற்கப்பட்டதை கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தார் நடிகர் விஷால்.

தற்போது அதேபோல் பெங்களூரில் திருட்டு டிவிடிக்களை கண்டுபிடித்துள்ளார். கதகளி படம் கடந்த 14ம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட திரையரங்கில் இருந்து திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டதை விஷால் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்துள்ளார். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

தற்போது அந்த திரையரங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அசின் தான் என் உலகம்: கணவர் ராகுல் சர்மா



நடிகை அசினுக்கும், தொழில் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் கடந்த 19-ந் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற்றது. கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி நடந்த இந்த திருமண விழாவில், திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, மும்பையில் வரவேற்பு நடந்தது. இந்த நிலையில், ‘அசின் தான் என் உலகம்’ என்று அவரது கணவர் ராகுல் சர்மா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருமணத்தின் போது எடுத்த ஒரு புகைப்படத்தையும் அதில் வெளியிட்டுள்ள அவர், அத்துடன் ‘என் உலகத்தை கரங்களால் பிடித்திருக்கிறேன்’ என்றும் புன்னகை தவழ அதில் பதிவு செய்துள்ளார்.

விருதுக்காக சொந்த குரலில் பேச தயாராகிய தமன்னா


    

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளாக விளங்கும் திரிஷா, நயன்தாரா உள்ளிட்டோர் தற்போது சொந்த குரலில் டப்பிங் பேச தொடங்கிவிட்டனர். தற்போது அந்த வரிசையில் நடிகை தமன்னாவும் இடம்பிடித்துள்ளார்.

இவர் தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வரும் ‘தர்மதுரை’ படத்தில்தான் சொந்த குரலில் டப்பிங் பேசவுள்ளார். இப்படத்தில் தமன்னா மதுரை பெண் வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு விருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், இதில் சொந்த குரலில் பேசி நடித்தால் அது நிச்சயம் எனவும் இயக்குனர் கூறியதால் தமன்னா இந்த முடிவை எடுத்தள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மதுரை பாஷையில் பேச தமன்னா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, எம்.எஸ்.பாஸ்கர், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மதுரை மற்றும் தேனி பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.





அரண்மனை–2 பேய் படமாக இருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமாக இயக்கியுள்ளார் சுந்தர் சி!

 



ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் ‘அரண்மனை–2’ வருகிற 29–ந்தேதி உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.சுந்தர்சி இயக்கி நடிக்கும் இந்த படத்தில் நாயகனாக சித்தார்த், நாயகிகளாக திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி நடிக்கிறார். அரண்மனை வெற்றியால் இப்படத்துக்கு வின்யோகஸ்தார் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வந்தது.இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி பேய் படமாக இருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமாக இயக்கியுள்ளார். மேலும் i‘அரண்மனை–2’ தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவிலும் மற்ற வடமாநிலங்களிலும் உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகிறது, தமிழ்நாட்டில் ‘அரண்மனை–2’ படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் ‘அரண்மனை–2’ வருகிற 29–ந்தேதி உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.சுந்தர்சி இயக்கி நடிக்கும் இந்த படத்தில் நாயகனாக சித்தார்த், நாயகிகளாக திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி நடிக்கிறார். அரண்மனை வெற்றியால் இப்படத்துக்கு வின்யோகஸ்தார் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வந்தது.இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி பேய் படமாக இருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமாக இயக்கியுள்ளார். மேலும் i‘அரண்மனை–2’ தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவிலும் மற்ற வடமாநிலங்களிலும் உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகிறது, தமிழ்நாட்டில் ‘அரண்மனை–2’ படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடவது குறிப்பிடத்தக்கது
 



எனது தொழிலில் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகவே பத்மஸ்ரீ விருதை கருதுகிறேன்: - 



 
இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவரது நடிப்பில் வெளிவந்த டான், பர்பி, மேரிகோம், காமினி, பாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. 2008-ல் ‘பேஷன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். அமெரிக்க டி.வி தொடரில் வந்து மக்களுக்கு பிடித்த தெற்காசிய நடிகை என்ற குவான்டிகோ விருதுக்கும் தேர்வானார். தற்போது மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அவருக்கு கிடைத்துள்ளது. விருது பெற்றது குறித்து பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி வருமாறு:-
இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவரது நடிப்பில் வெளிவந்த டான், பர்பி, மேரிகோம், காமினி, பாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. 2008-ல் ‘பேஷன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். அமெரிக்க டி.வி தொடரில் வந்து மக்களுக்கு பிடித்த தெற்காசிய நடிகை என்ற குவான்டிகோ விருதுக்கும் தேர்வானார். தற்போது மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அவருக்கு கிடைத்துள்ளது. விருது பெற்றது குறித்து பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி வருமாறு:-    
 

‘‘பத்மஸ்ரீ விருது கிடைத்ததை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை. கனவில் வாழ்வது போல் உணர்கிறேன். எனது தொழிலில் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகவே இதை கருதுகிறேன். இந்த வருடம் எனக்கு மிகச்சிறந்த வருடமாக அமைந்துள்ளது. தெற்காசியாவில் மக்களுக்கு பிடித்த நடிகை என்ற குவான்டிகோ விருது பெற்றதன் தொடர்ச்சியாக பத்மஸ்ரீ விருதும் கிடைத்து இருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது. பெருமையாக இருக்கிறது. இதற்காக மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஒரு ராணுவ அதிகாரியின் மகளாக இந்த விருது எனக்கு மிகவும் ஸ்பெஷல். பத்மஸ்ரீ விருது, மேலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பையும் ஊக்கத்தையும் எனக்குள் ஏற்படுத்தி இருக்கிறது.இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.
 




விஜய், அஜித் படங்களுக்கு கல்லெறியும் ராகுல் ப்ரீத் சிங்!



  
.
தமிழில், தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தவர் ராகுல் ப்ரீத் சிங். அப்படி அவர் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி

பெறவில்லை. அதனால் அடுத்தபடியாக அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை. அதையடுத்து தெலுங்கிற்கு சென்ற ராகுல் ப்ரீத் சிங் நடித்த எல்லா படங்களுமே ஹிட் அடித்ததால் இப்போது அங்கு முன்னணி ஹீரோயின் ஆகி விட்டார். ராம்சரணுடன் அவர் நடித்த புருஸ்லீ த பைட்டர் படம் தமிழில் டப் செய்து வெளியானது.

மேலும், இப்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் போன்ற மேல்தட்டு ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் ராகுல் ப்ரீத் சிங்கை தமிழில் நடிக்க வைக்க சிலர் அழைத்தனர். ஆனால், வளர்ந்து வரும் நடிகர்கள் அந்த படங்களின் ஹீரோ என்பதால் மறுத்து விட்டாராம் அவர். அதோடு, தமிழில் எனது அடுத்த டார்க் கெட் விஜய்-அஜித்தான். அவர்களின் படங்களில் நடிக்கதான் முயற்சி எடுத்து வருகிறேன். ஒருவேளை அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தெலுங்கு, இந்தியில் முழுக்கவனத்தை திருப்பி விடுவேன் என்று கூறிவிட்டாராம் நடிகை.





Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies