சினிமா செய்தித் துளிகள் அஞ்சலியைச் சுற்றும் அடுத்த காதல் வதந்தி ?

13 Jan,2016
 

காதல் திருமணங்கள் சிறந்ததா? தமன்னா, சுருதிஹாசன் பேட்டி
        


 


காதல் திருமணங்கள் சிறந்ததா? என்பதற்கு தமன்னா, சுருதிஹாசன் பதில் அளித்தனர்.

நடிகைகள் பலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் சினிமாவை விட்டு ஒதுங்கி சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார்கள். இன்னும் சிலர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர்.

இந்த நிலையில் காதல் திருமணங்கள் சிறந்ததா? என்பதற்கு நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமன்னா
நடிகை தமன்னா கூறியதாவது:–

காதல், ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையில் இருக்கிறது. இருவரும் விட்டுக்கொடுக்கணும் நான் உயர்ந்தவர் நீ தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பார்க்க கூடாது. ஒருவரையொருவர் மதிக்கணும். இதுமாதிரி யார் இருக்கிறார்களோ அங்கு காதல் இருக்கும்.

எனக்கு இதுவரை காதல் வரவில்லை. காதலிக்க நேரமும் இல்லை. எனக்கு பொருத்தமானவர் யார், அவர் எங்கு இருக்கிறார்? என்று சிந்திக்கவும் நேரம் இல்லை. ஓய்வே இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். எனவேதான் எனக்கு கணவராக வருபவரை தேர்வு செய்யும் பொறுப்பை பெற்றோரிடம் விட்டு விட்டேன். நல்ல மாப்பிள்ளையை அவர்களை விட யாராலும் தேர்வு செய்ய முடியாது.

எனக்கு பொருத்தமானவரை அவர்கள் தேர்வு செய்வார்கள். அம்மா, அப்பா பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
சுருதிஹாசன்
நடிகை சுருதிஹாசன் கூறியதாவது:–

‘‘காதல் சந்தோஷமான விஷயம். அது ஒரு தடவைதான் வரவேண்டும். எனவே யாரை காதலிக்கிறோம் என்பது முக்கியம். நமக்கு சரிபட்டு வருவாரா? பொருத்தமானவர்தானா? என்றெல்லாம் யோசித்து காதலிக்க வேண்டும். காதலித்த பிறகு தவறானவர் என்று தெரிந்தால் சரிசெய்ய முடியாது. பெண்கள் திருமணத்துக்குப்பிறகு கணவன், குழந்தை என்று ஆகிவிட வேண்டும். குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிப்பது எனக்கு பிடிக்காது.

ஆண்கள் மட்டும் பிடித்த மாதிரி வேலை செய்யலாம். பெண்கள் அப்படி இருக்க கூடாது என்பதில் நியாயம் இல்லை. நான் சினிமாவை உயர்வாக மதிக்கிறேன். திருமணத்துக்கு பிறகும் சினிமாவை விடமாட்டேன். கடைசி வரை நடித்துக்கொண்டே இருப்பேன்.

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.



விஜய் ஜோடியாக மியா ஜார்ஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ்?





 விஜய் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்த படம் அழகிய தமிழ் மகன். அந்த படத்தை இயக்கியவர் பரதன். அவர்தான் அடுத்து விஜய்

நடிக்கும் 60வது படத்தை இயக்குகிறார். இந்த புதிய படத்தில் விஜய் சிங்கிள் ரோலில்தான் நடிக்கிறார். இப்படம் ஜனரஞ்சகமான கதையில் உருவாகிறதாம். குடும்ப பின்னணியில் நடக்கும் கதை என்பதால், அப்படத்தில் நடிக்க ஹோம்லியான இரண்டு நடிகைகளை புக் பண்ணியிருக்கிறாராம் பரதன்.

அந்த வகையில், மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் மியா ஜார்ஜ் அப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழில் அமரகாவியம், இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் நடித்துவிட்டு, தற்போது ஒருநாள் கூத்து, வெற்றிவேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்து விட்டு விஜய்யுடன் ஜோடி சேருகிறாராம் மியா ஜார்ஜ். மேலும், இன்னொரு நாயகியாக காக்கா முட்டை நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாராம். இவர்களில் மியா ஜார்ஜ் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம்.




கொடி'யில் இணைந்த த்ரிஷா



  
.
'எதிர் நீச்சல், காக்கி சட்டை' ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க தனுஷ், த்ரிஷா, ஷாமிலி, எஸ்.ஏ. சந்திரசேகரன் மற்றும் பலர்

நடிக்கும் படம் 'கொடி'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது. கடந்த சில படங்களாகவே அனிருத்தை மட்டுமே இசையமைப்பாளராகப் பயன்படுத்தி வந்த தனுஷ் தற்போது சந்தோஷ் நாராயணன் பக்கம் சாய்ந்துள்ளார். இப்பட இயக்குனரின் முந்தைய படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படங்களின் வெற்றிக்கு பாடல்களும் ஒரு காரணமாக அமைந்தது. ஆனாலும், பீப் பாடல் சர்ச்சையில் சிக்கியுள்ள அனிருத்தால் இந்தப் படத்திற்கு நிம்மதியாக இசையமைக்க முடியாது என்று கருதியே அவரை மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

 

இசையில் தனுஷ் படத்தில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது என்றால் தனுஷுடன் நாயகியாக நடிப்பவர்களும் புதிய கூட்டணியாகவே அமைந்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் நடிக்க வந்து 13 வருடங்களுக்கு மேலாகியும் த்ரிஷா இதுவரை தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்ததே இல்லை. தனுஷ் நடிக்க வந்தும் 13 வருடங்கள்தான் ஆகிறது. இருவருக்கும் ஒரே வயதுதான். ஆனால், திரையில் இந்தப் புதிய ஜோடி எப்படியிருக்கப் போகிறது என்பது படம் வந்தால்தான் தெரியும். 'கொடி' படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் த்ரிஷா கலந்து கொள்கிறார். அரசியல் படமான இந்தப் படத்தில் த்ரிஷா நெகட்டிவ்வான ஒரு கதாபாத்திரத்தில்தான் நடிக்கப் போவதாகத் தெரிகிறது. 'தங்கமகன்' தோல்வியைச் சரிக்கட்ட இந்தக் 'கொடி'யை தனுஷ் நன்றாகப் பறக்க வைக்க முயற்சி செய்துள்ளார் என்கிறார்கள்.


அஞ்சலியைச் சுற்றும் அடுத்த காதல் வதந்தி ?



  

அஞ்சலியையும், சர்ச்சையையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்த் திரையுலகத்தில் அவருடைய சித்தியுடன்

ஏற்பட்ட பிரச்சனையால் தமிழ்நாட்டை விட்டுச் சென்று ஆந்திராவில் அடைக்கலமானார். அதன்பின் அவரைப் பற்றிய எந்த விதமான தகவல்களும் சில மாதங்களுக்கு வெளியாகவில்லை.

தமிழ்ப் படங்களில் நடிப்பதையும் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார். எப்படியோ கடந்த ஆண்டு 'சகலகலா வல்லவன்' படத்தில் நடிக்க அவரை மீண்டும் அழைத்து வந்தார்கள். அஞ்சலி மீது வழக்குத் தொடுத்திருந்த இயக்குனர் களஞ்சியமும் அதன்பின் எந்த பிரச்சனைகளையும் செய்யாமல் ஒதுங்கிக் கொண்டார். அதன் பின்னணியும் வெளியில் வராமலே அமுங்கிப் போனது.

தற்போது 'இறைவி' படத்தில் நடித்து முடித்துள்ள அஞ்சலி, 'பேரன்பு' படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்துள்ள 'டிக்டேட்டர்' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனிடையே, அஞ்சலியைப் பற்றிய வதந்தி மீண்டும் டோலிவுட் வட்டாரங்களில் செய்தியாக வர ஆரம்பித்தது.

அவருக்கும் டிவி தொகுப்பாளரான ஓம்கார் என்பவருக்கும் இடையே காதல் என்று அங்கு செய்திகள் வெளியாகின. வழக்கம் போலவே அந்த வதந்தியை அஞ்சலி மறுத்துள்ளார். அவரை நான் இதுவரை சந்தித்தது கூட இல்லை, அப்புறம் எங்கிருந்துதான் இப்படியெல்லாம் வதந்திகள் கிளம்புகிறதோ என அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அஞ்சலியைச் சுற்றும் வதந்திகள் இப்போதைக்கு நிற்காது போலிருக்கிறது.




 ஸ்ரீதிவ்யாவின் ஆசை அஜித்துடன் ஜோடி,


  

தமிழ்த் திரையுலகத்தில் வரும் புதுமுகமாக இருந்தாலும் சரி, கொஞ்சமே கொஞ்சம் பழைய முகமாக இருந்தாலும் சரி அனைவருமே அஜித்துடன்

நடிக்க வேண்டும் என்ற அவர்களது ஆசையை வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அவர்களது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டுமென்றால் அஜித் வருடத்திற்கு ஐந்து படத்தில் நடித்தால் கூட முடியாது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வசீகர நாயகியான ஸ்ரீதிவ்யாவுக்கும் அஜித் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதனால்தான் 'வேதாளம்' படத்தில் அவருடைய தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகே அந்த வாய்ப்பு லட்சுமி மேனனுக்குப் போயிருக்கிறது.

அஜித்துடன் நடித்தால் ஜோடியாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்ரீதிவ்யா. 'வேதாளம்' படம் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்று, தனக்குக் கிடைக்க வேண்டிய பெயர் லட்சுமி மேனனுக்குப் போனதில் கூட அவருக்கு வருத்தமில்லை என்கிறார்.

தற்போது 'பெங்களூர் நாட்கள்' படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இதுவரை குடும்பப் பாங்காகவே நடித்து வந்த ஸ்ரீதிவ்யா இந்தப் படத்தில் கொஞ்சம் மாடர்ன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இந்தப் படம் வந்த பிறகு இன்னும் பலர் தன் ரசிகர்கள் ஆவார்கள் என்றும் நம்புகிறாராம். தெலுங்குப் பெண்ணாக இருந்தாலும் தற்போது தட்டுத் தடுமாறி தமிழ் பேசக் கற்றுக் கொண்டுவிட்டார். இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இடம் பிடித்து விட வேண்டும் என்ற கனவிலும் இருக்கிறாராம்





Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies