ரஜினிமுருகனை கைப்பற்றியது ஸ்டுடியோ கிரீன்.?!
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்த படம் உத்தமவில்லன். இந்த படத்துக்கு கமலே கதை
எழுதியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் எதிர்பார்த்தபடி ஓடாததால் படத்தை தமிழ்நாடு முழுக்க வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெரிய நஷ்டத்தை சந்தித்தது.
விளைவு, இப்போது உத்தமவில்லன் படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்திருக்கும் ரஜினிமுருகன் படத்தை வெளியிடும் உரிமையை எங்களுக்கே தந்தாக வேண்டும் என்று திருப்பதி பிரதர்சிடமிருந்து அப்படத்தை கைப்பற்றியிருக்கிறதாம் ஸ்டுடியோ கிரீன்.
இதனால், ரஜினிமுருகன் படத்தை வெளியிட்டு சில படங்களை தயாரித்து தான் விட்ட பணத்தை எடுக்கலாம் என்று நினைத்த லிங்குசாமிக்கு இது அதிர்ச்சியாகி விட்டதாம். இருப்பினும், தங்களது முந்தைய படத்தை வாங்கி பெரும் நஷ்டத்தை சந்தித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் நிலையை ஒரு தயாரிப்பாளர் என்கிற கோணத்தில் யோசித்துப் பார்த்த லிங்குசாமி, அவர்களுக்கே ரஜினிமுருகனை வெளியிடும் உரிமையை கொடுத்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன
கமல், அஜீத்துடன் மோதுகிறார் சூர்யா!
அஞ்சான், மாஸ் படங்களை அடுத்து ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா. இந்த நிலையில்,
தற்போது யாவரும் நலம் பட இயக்குனர் விக்ரம்குமார் இயக்கும் 24 படத்தில் நடித்து வருகிறார். அதோடு இதற்கு முன்பு பேரழகன், மாற்றான், ஏழாம் அறிவு என சில படங்களில் இரண்டுவிதமான வேடங்களில் நடித்திருக்கும் சூர்யா, இந்த படத்தில் மூன்று விதமான வேடங்களில் நடிக்கிறார்.
ஒவ்வொரு வேடத்திற்குமிடையே நிறைய வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக பாடிலாங்குவேஜ் மட்டுமின்றி வித்தியாசமான காஸ்டியூம் அணிந்து நடித்திருக்கிறாராம் சூர்யா. அதனால்தான் இந்த படத்திற்கு ஏற்கனவே திட்டமிட்டதை விடவும் மேற்கொண்டும் சில மாதங்களாக சூர்யா நடிக்க வேண்டியதாகி விட்டதாம்.
முந்தைய இரண்டு படங்களும் அதிர்ச்சி தோல்வி கொடுத்திருக்கும் நிலையில், இந்த படத்தை எப்படியேனும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் சூர்யா, தனது நிலையை சிங்கம்-3 படத்தை இயக்கயிருக்கும் டைரக்டர் ஹரியிடம் சொல்லி, அவரைகூட சில மாதங்களாகவே தனக்காக வெயிட் பண்ண வைத்திருக்கிறார்.
மேலும், இந்த படத்தின் மீது சூர்யாவுக்கு நிறைய நம்பிக்கை உள்ளதாம். அதனால், வருகிற தீபாவளிக்கு கமலின் தூங்காவனம், அஜீத்தின் 56வது படங்கள் வெளியாகும் அதே நாளில் தனது 24 படத்தையும் வெளியிடுகிறாராம். இந்தமுறை இரண்டுமுறை தவறவிட்ட வெற்றியை கண்டிப்பாக கைப்பற்றிவிடுவேன் என்றும் முழு நம்பிக்கையுடன் கூறி வருகிறார் சூர்யா.
அதுமட்டுமின்றி, இப்படத்தின் நாயகி சமந்தா என்பதால், அவருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதோடு சூர்யாவுக்கும் ஆந்திராவில் ரசிகர்கள் இருப்பதால் தமிழில் படத்தை வெளியிடும்போது ஆந்திரா, கேரளாவிலும் வெளியிடுகிறார்களாம். அதனால் தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என மூன்று மாநிலங்களுக்கான வியாபாரமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
நயன்தாரா ராஜ்ஜியம்!
தன்னை பற்றி எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும், அதைப் பற்றி எந்த கவலையும் படாமல், தன்
வேலையிலேயே முழு கவனமும் செலுத்தி வருகிறார் நயன்தாரா. இதற்கு, அவருக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. \'மாயா, தனி ஒருவன், நானும் ரவுடிதான், திருநாள், இது நம்ம ஆளு, காஸ்மோரா\' என, அம்மணியின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. கோலிவுட் மட்டுமல்லாமல், தன் தாய்மொழியான மலையாளத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். மம்முட்டி ஜோடியாக, ஒரு புது படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். வாரத்துக்கு ஒரு இளம் ஹீரோயின், கோலிவுட்டுக்கு படையெடுத்து வந்தாலும், நயன்தாரா நங்கூரம் போட்டு அமர்ந்திருப்பது, சக நடிகையருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீமந்துடுவில் கூடுதல் காட்சிகள் இணைப்பு
நம்பர் 1 படத்தின் தோல்வியால் துவண்டிருந்த தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தான்
தயாரித்து நடித்துள்ள ஸ்ரீமந்துடு படம் வெற்றி அடைந்துள்ளதால் பெரும் உற்சாகமடைந்துள்ளார். இப்படத்தின் வசூலும் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்த இப்படம் சமூக கருத்தை வலியுறுத்தியதாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
ஸ்ரீமந்துடு படம் இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் ஓடுகின்றது. படத்தின் நீளம் கருதி குறைக்கப்பட சில காட்சிகளை மீண்டும் படத்தில் இணைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக படத்தின் டிரைலரில் இடம் பெற்ற குறிப்பிட்ட காட்சிகள் படத்தில் இல்லாததால் அவற்றை மீண்டும் படத்தில் இணைக்க ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை பரிசீலனை செய்த படக்குழு நீக்கப்பட்ட காட்சியை படத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் படத்தின் நீளம் மேலும் 10 நிமிடங்கள் அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் காட்சிகள் இணைக்கப்படுவது படத்தின் வசூலை அதிகரிக்க செய்யும் என்பதால் நடிகர் மகேஷ் பாபுவும் ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு இயக்குநர் சிவாவிடம் கூறியுள்ளாராம்.
விக்ரம் ரசிகர்களை உற்சாகப்படுத்திய சமந்தா!
தென்னிந்திய நடிகைகளில் இணையதளத்தை அதிகமாக பயன்படுத்துபவர்களில் சமந்தா குறிப்பிடத்தக்கவர். தனது சம்பந்தப்பட்ட
விசயங்கள் மட்டுமின்றி பொதுக்கருத்துக்களையும் அவ்வப்போது வெளியிடும் அவர், அடிக்கடி ஏதாவது விசயங்களை வெளியிட தவறுவதில்லை.
அந்தவகையில், தான் நடிக்கும் புதிய படங்களின் அறிவிப்புகளையும் முன்கூட்டியே வெளியிட்டு வரும் சமந்தா, தற்போது விக்ரமுடன் தான் நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படத்தின் டீசர் வெளியிடுவது பற்றியும் ஒரு தகவலை டுவிட்டர் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், சிம்புவின் வாலு, ஆர்யாவின் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க ஆகிய படங்கள் ஆகஸ்ட் 14ந்தேதி வெளியாகும் தியேட்டர்களில் பத்து எண்றதுக்குள்ள படத்தின் டீசரும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். சமந்தா கொடுத்த இந்த தகவலினால் விக்ரமின் ரசிகர்கள் உற்சாகமடைந் துள்ளனர். மேலும், விஜய்யின் புலி படத்தின் டிரைலரும், அஜீத்தின் புதிய படத்தின் டைட்டீலும் அறிவிக்கப்பட உள்ள ஆகஸ்ட் 15-ந்தேதிதான் விக்ரம் படத்தின் டீசர் வெளியாகயிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இற்போது ஒருநாள் முன்கூட்டியே விக்ரம் படத்தின் டீசர் வெளியாகிறது என்பதை சமந்தா கொடுத்த தகவல் தெரிவிக்கிறது.