அதற்கு நான் தயாராக இல்லை - தீபிகா படுகோனே மறுத்தார்!

20 May,2015
 

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கும் ஹன்சிகா



தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது உள்ள இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வரும் ஹன்சிகாவின் நடிப்பில் கடந்த ஆண்டு மட்டும் ‘அரண்மனை’, ‘மீகாமன்’, ‘ஆம்பள’ ஆகிய 3 படங்கள் வெளியானது.

இப்படங்கள் ஹிட்டானதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் ஹன்சிகாவிற்கு குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது இவரது நடிப்பில் ‘வாலு’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘உயிரே உயிரே’, ‘புலி’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இதில் விஜய்யுடன் நடித்துள்ள 'புலி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது.

சிம்புடன் நடித்த ‘வாலு’, ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. அதாவது ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது. சிம்புவுடன் நடித்த ‘வாலு’ படம் நீண்ட காலமாக படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதிகள் தள்ளி போய் கடைசியாக ஜூன் 12ம் தேதி வெளியிட இருப்பதாக கூறியுள்ளனர்.

ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாவதால் இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார் ஹன்சிகா. இது இவருக்கு மட்டுமல்லாது ஹன்சிகா ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்துள்ளது.

அவந்திகாவாக ரசிகர்களைக் கவர்ந்த தமன்னா!



டோலிவுட்டில் தயாராகி வரும் சரித்திர திரைப்படமான பாகுபலி திரைப்படத்தின் புகைப்படங்கள், அப்படம் குறித்த

எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன. பாகுபலி படத்தின் கதாப்பாதிரங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் இயக்குநர் ராஜமௌலி இது வரை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர், நாயகன் பிராஸ், நாயகி அனுஷ்கா, நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் சத்யராஜ், நடிகர் சுதீப் என பலரது கதாப்பாத்திரங்களை இயக்குநர் ராஜமௌலி அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த வகையில் இப்படத்தில் அவந்திகாவா நடித்துள்ள தமன்னாவின் புகைப்படத்தை ராஜமௌலி வெளியிட்டுள்ளார். அழகு பதுமையான அவந்திகாவாக மாறி இருக்கும் தமன்னாவின் புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கின்றார். ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது


டண்டணக்காவுக்கு டி.ஆர். பச்சைக்கொடி? : மகிழ்ச்சியில் ரோமியோ ஜூலியட் படக்குழு


ஜெயம் ரவி – ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ரோமியோ ஜூலியட்’. இப்படத்தை லஷ்மண் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பணிகள் எல்லாம் முடிவடைந்துவிட்டதால் வருகிற ஜூன் 12-ல் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இவருடைய இசையில் இந்த படத்தில் அனிருத் ‘டண்டணக்கா’ என்று தொடங்கும் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடலை ‘டங்காமாரி’ புகழ் ரோகேஷ் எழுதியிருந்தார்.

இப்பாடல் பதிவு செய்த வீடியோவை படத்தின் புரோமோஷனுக்காக படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதில், டி.ராஜேந்தரின் வசனங்களையும் உள்ளே புகுத்தி இந்த பாடல் வெளிவந்தது.

இந்த பாடலை வைத்து டி.ராஜேந்தரை தவறாக சித்தரித்து சிலர் உருவாக்கிய வீடியோவும் இணையதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த ஜெயம் ரவிகூட, அவரை பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இந்த பாடலை எடுத்திருக்கிறோம். இதுமாதிரி தவறாக சித்தரிக்கவேண்டாம் என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், டி.ராஜேந்தர் ரோமியோ ஜூலியட் படக்குழுவினருக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், டண்டணக்கா பாடலை தொடர்ந்து ஒலிபரப்புவும், புரோமோஷன் செய்யவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

மேலும், இந்த பாடல் விவகாரம் தொடர்பாக தனக்கு ரூ. 1 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இது படக்குழுவினருக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது.

ஒருகட்டத்தில் டண்டணக்கா பாடல் இல்லாமல்கூட படத்தை வெளியிடலாம் என்ற முடிவுக்கு படக்குழுவினர் இறங்கினர். இந்நிலையில், இந்த பிரச்சினையில் சுமூக தீர்வை எடுக்க முயற்சி செய்த படக்குழு, டி.ராஜேந்தருக்கு ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை திரையிட்டு காண்பித்துள்ளார்கள்.

முழு படத்தையும் பார்த்த டி.ராஜேந்தர் மிகவும் சந்தோஷமடைந்து படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது ரோமியோ ஜூலியட் படக்குழுவுக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இதனால், உயர்நீதிமன்றத்தில் டி.ராஜேந்தர் தாக்கல் செய்திருக்கும் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ‘டண்டணக்கா’ பாடலோடு இப்படம் வெளிவரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


பெங்களூர் டேய்ஸ் - ஐ முடித்த ராகுல் ப்ரீத்தி சிங்


மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படத்தில் ஆர்யா, ஸ்ரீதிவ்யா,

பாபி சிம்ஹா, லட்சுமிராய் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கிலும் இயக்குநர் பொம்மரிலு பாஸ்கர் இயக்கி வருகின்றார். தெலுங்கில் சர்வானந், நித்யா மேனன், வருண் தேஜ், ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் டோலிவுட்டின் விருப்ப நாயகி ராகுல் ப்ரீத்தி சிங்கும் நடித்து வருகின்றார். மலையாளத்தில் நடிகை பார்வதி மேனன் நடித்த மாற்றுத்திறனாளி வேடத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ராகுல் ப்ரீத்தி சிங் 12 நாட்களில் தனக்கான பகுதிகளை நடித்து முடித்துக் கொடுத்துள்ளார். கிக் 2, பண்டகோ சேஷ்கோ போன்ற படங்களின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா போன்றவர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருகின்றார்


என்னுள் இருந்த நெருப்பு...! 36 வயதினிலே ஜோதிகா!




சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டுப்போன ஜோதிகா, சுமார் 8 வருடங்கள்

இடைவெளிக்குப் பிறகு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார். 2டி எண்டர்டெயிமெண்ட் பட நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்த இப்படம் மலையாளத்தில் ரிலீசாகி வசூலை வாரிக் குவித்த ஹை ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக் என்பது உலகத்துக்கு தெரிந்த விஷயம்தான். மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய ரோஸன் ஆண்ட்ரூஸ்தான் தமிழிலும் இயக்கியிருந்தார்.

ஜோதிகா மீண்டும் நடித்துள்ள படம் என்பதால் 36 வயதினிலே படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால்.... ஆண்களைவிட பெண்கள் மத்தியில்தான் 36 வயதினிலே படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகச்சரியாய் பூர்த்தி செய்திருக்கிறது 36 வயதினிலே. அதனால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய மறுபிரவேசத்துக்கு மாபெரும் வரவற்பு கிடைத்ததைப் பார்த்து நெகிழ்ந்து போயிருக்கிறார் ஜோதிகா.

அது மட்டுமல்ல, தன் கணவர் சூர்யாவின் ட்விட்டர் மூலமாக தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். '36 வயதினிலே' படத்துக்கு நீங்கள் காட்டிய அன்பும், மரியாதையும் என்னை நெகிழ வைத்துள்ளது. இந்தப்படம் எனக்கு மட்டுமல்ல, சூர்யா, இயக்குநர் ரோஷன் என அனைவருக்கும் மறக்க முடியாது வரவேற்பை அளித்துள்ளது. இப்பட வாய்ப்பு என் கதவுகளை தட்டியபோது அதை நான் வரவேற்று ஏற்றுக் கொண்டேன். அதற்குக் காரணம் இல்லத்தரசிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும், அவர்கள் பல்வேறு பணிகளை ஒரு சேர செய்கின்றனர் என்ற நெருப்பு என்னுள் எப்போதுமே இருந்தது. அதன் காரணமாகவே, நான் இப்படத்தில் நடித்தேன். ஆணாதிக்கம் மிகுந்த திரைத்துறையில் கதாநாயகிகளுக்கு சிறப்பிடம் தரப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணின் சுயமரியாதை, நம்பிக்கை, சாதனை எல்லாம் அவள் திருமண பந்தத்தால் ஏற்படும் அந்தஸ்தில் மட்டும் இல்லை. மாறாக அவள் அவளது கனவுகளை எப்படி மெய்ப்பட வைக்கிறாள் என்பதிலேயே உள்ளது. '36 வயதினிலே' திரைப்படத்துக்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவால் நான் இன்று பெருமிதம் கொள்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த நீங்கள் அனைவரும் மகளிர் மேம்பாட்டுக்கு வித்திடும், நிறைய வசந்திகள் தங்கள் கனவுகளை கைப்பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று சூர்யாவின் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் ஜோதிகா.

பெண் சுயமாக நிற்க வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் 36 வயதினிலே படத்தில் நடித்த ஜோதிகா, தன் கணவரின் ட்விட்டரில் தன் கருத்தை பதிவு செய்ததால் 36 வயதினிலே எதிர்மறையான, சராசரியான பெண்ணாகவே காட்சியளிக்கிறார் ஜோதிகா

 
அதற்கு நான் தயாராக இல்லை - தீபிகா படுகோனே மறுத்தார்!

 
அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து பாலிவுட்டின் வசூல் நாயகியாக வருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. தற்போது ரன்பீர் கபூருடன் ’தமாஷா’ படத்திலும் ரன்வீர் சிங் உடன் ’பஜிராவ் மஸ்தானி' படத்திலும் நடித்து வருகிறார். இவர் விரைவில் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ள போவதாக பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கபட்டு வருகிறது. முதலில் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்த தீபிகா படுகோனே ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். பின்பு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ’ராம் லீலா’ படத்தில் நடித்தபோது ரன்வீர் சிங் உடன் தீபிகாவிற்கு காதல் ஏற்பட்டது.
அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து பாலிவுட்டின் வசூல் நாயகியாக வருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. தற்போது ரன்பீர் கபூருடன் ’தமாஷா’ படத்திலும் ரன்வீர் சிங் உடன் ’பஜிராவ் மஸ்தானி' படத்திலும் நடித்து வருகிறார். இவர் விரைவில் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ள போவதாக பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கபட்டு வருகிறது. முதலில் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்த தீபிகா படுகோனே ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். பின்பு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ’ராம் லீலா’ படத்தில் நடித்தபோது ரன்வீர் சிங் உடன் தீபிகாவிற்கு காதல் ஏற்பட்டது.
    

அதற்கு பிறகு பல இடங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றினர். அதுமட்டுமில்லாமல் இருவரும் வெளிநாட்டுக்கு சென்று ஓய்வு எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து தீபிகாவிடம் கேட்டதற்கு எல்லா நட்சத்திரங்களும் கூறுவது போல் நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் என்று கூறிவந்தார். ஆனால் ரன்வீர் சிங் மட்டும் தீபிகாவை காதலிப்பதாக மறைமுகமாக தெரிவித்தார். பொது இடங்களில் நல்ல நண்பர்களை போன்று நடிக்கும் தீபிகாவும், ரன்வீரும் உண்மையில் தீவிரமாக காதலிக்கிறார்கள் என்று பாலிவுட் இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காதலர்களாக ஜோடி போட்டு வலம் வரும் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது. ஆனால் தீபிகா இதை மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், செட்டிலாவது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. வேலை என்பது வேறு, திருமணம் செய்து கொண்டு செட்டிலாவது வேறு விஷயம். அதற்கு நான் தயாராக இல்லை என்று நினைக்கிறேன். திருமணம் செய்து கொள்வதில் அவசரப்பட விரும்பவில்லை. வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் விஷயம். அதனால் அது சரியான நபருடன் சரியான நேரத்தில் நடக்க வேண்டும். புனிதமான திருமணத்தை அவசரப்பட்டு செய்ய விரும்பவில்லை என்று கூறினார் தீபிகா.
 





Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies