சினிமா செய்தித் துளிகள் அரை நிர்வாணமாக சந்தோஷ்சாரிகா நடிக்கும் ‘நிராயுதம்’

27 Apr,2015
 

செம்மரக்கடத்தல் நடிகை: ஒரே சமயத்தில் 2 பேருடன் குடும்பம் நடத்தியது அம்பலம்


தெலுங்கு புது முக நடிகையான நீத்து அகர்வால், செம்மரக்கடத்தலில் முக்கிய பங்கு கொண்டது மட்டுமல்லாது, செம்மரக்கடத்தல்காரர் உட்பட இருவருடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் 20 தமிழக கூலித் தொழிலாளர்களை அம்மாநில போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதற்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. குற்றம் செய்யத் தூண்டிய பணக்கார முதலைகளை விட்டுவிட்டு கூலித் தொழிலாளர்களை ஆந்திர அரசு கைது கூட செய்யாமல் சுட்டுப் பொசுக்கியது கடும் விமர்சனத்துக் குள்ளானது.

இந்த சம்பவம் ஒரு மனித உரிமை மீறலாக அறிவிக்கப்பட்டது. மேலும், இது குறித்து முறையான விசாரணை செய்து வருகிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம். அதே சமயம், மேலும் சில தமிழக தொழிலாளர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், செம்மரக்கடத்தல் கும்பலைக் கூண்டோடு பிடிக்கும் முயற்சியில் முழு மூச்சோடு இறங்கி செயல்பட்டு வருகிறது ஆந்திர போலீஸ்.

இதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த புதுமுக திரைப்பட தயாரிப்பாளர் நடிகர் சரவணன் உட்பட 6 பேரைக் கைது செய்தது ஆந்திர காவல்துறை. அவர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து, மஸ்தான் வாலி என்ற முக்கிய புள்ளியைக் கைது செய்தது. மஸ்தான் வாலியிடம் மேற்கொண்ட விசாரணையில், தெலுங்கு புது முக நடிகை நீத்து அகர்வாலுக்கும் இந்த செம்மரக்கடத்தலில் பங்கு இருப்பது தெரியவந்தது.

மேலும், இந்த விசாரணையில், வடமாநிலத்தை சேர்ந்த நீத்துவின் ஹிந்தி மற்றும் ஆங்கில கம்யூனிகேஷனை பயன்படுத்து மஸ்தான் வாலி வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும், செம்மரக்கடத்தல் செய்தது அம்பலமானது. இது மட்டுமல்லாது, செம்மரக்கடத்தலில் கிடைத்த பணத்தை நீத்துவின் வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருப்பதும் தெரியவந்தது.

இந்த தகவல் கிடைத்த உடனேயே, நீத்துவின் வங்கிக் கணக்கை போலீஸார் முடக்கிவிட்டனர். நீத்துவை கைது செய்யவும் முற்பட்டனர். ஆனால், அதற்குள்ளாக உஷாரான நீத்து, எப்படியோ தலைமறைவாகிவிட்டார். இதை அடுத்து, நீத்துவைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து, பெங்களூரு, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

ஐதராபாத்தில் நீது அகர்வாலுக்கு சொந்தமான வீடு உள்ளது. தனிப்படையில் ஒரு படை அந்த வீட்டை ஜல்லடை போட்டு அலசியது. வீட்டில் ஒரு குழந்தையும், வேலைக்காரியும் மட்டுமே இருந்த நிலையில், வேறு ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று போலீஸார் சோதித்த போது, அங்கிருந்த ஆவணங்கள், நகை பணம், விலையுயர்ந்த பொருட்கள் அனைத்து மாயமானது தெரியவந்தது.

நீத்து மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டார் என்று தெரிந்து தனிப்படை போலீஸார் சிலர் இரவு பகலாக வீட்டை கண்கானிக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர். இதன் விளைவாக, நேற்று காலை நீத்து அவரது இல்லத்திற்கு வந்த போது, போலீஸாரால் கைது செய்யப்பட்டார். நீத்து முக்கிய புள்ளி என்பதால், ஸ்பெஷல் விசாரணைக்காக ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவரிடம் நடத்திய விசாரணை நடத்தியதில், அவருக்கு ஏற்கனவே ரத்தன் என்பவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளதும், அதன் பின் தான் மஸ்தான்வலி தயாரித்த படத்தில் நடித்தார் என்பது, அப்போது இருவருக்கும் பழக்கமாகி, செம்மரகடத்தல் தொழிலில் நேரடியாக பங்கேற்றதும் தெரியவந்தது. இதில் அதிர்ச்சி கரமான தகவல் என்னவெனில், நீத்து, மஸ்தான் வலியுடன் மனைவியாக குடித்தனம் நடத்திய அதே வேளையில் ஐதராபாத்தில் உள்ள சொந்த வீட்டில் தனது கணவர் ரத்தனுடனும் குடும்பம் நடத்தி வந்தாராம்.

இந்நிலையில், கர்னூல் மாவட்டம் ருத்ராவரம் போலீசார் நீது அகர்வாலை கைது செய்து அழைத்து வந்தபோது, அவரது முகம் மூடப்பட்டிருந்தது. செய்தியாளர்கள் சூழ்ந்திருந்த போது நீத்து பேசுகையில், ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் மஸ்தான் வலியிடம் நான் சரண் அடைந்து விட்டேன். மஸ்தான் வலி என்னை பல முறை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளார்’ என்று கூறி கதறி அழுதுள்ளார். இதைத் தொடர்ந்து, நீது அகர்வால் கோவில குண்டலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை மே 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் நந்தியாலா சிறையில் அடைக்கப்பட்டார். நீது அகர்வாலை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாக கர்னூல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் தெரிவித்தார்



மீண்டும் சிம்பு த்ரிஷா... இயக்குகிறார் செல்வராகவன்!


மாலை நேரத்து மயக்கம்

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தார். இந்நிலையில், இவர் இயக்குவதாக இருந்த ‘மாலை நேரத்து மயக்கம்' என்ற படத்தை தனது மனைவி செல்வரஞ்சனியை வைத்து இயக்க வைத்தார். அந்த படத்திற்கு இவர் திரைக்கதை அமைத்து வருகிறார்.

புதிய படம்

அடுத்து செல்வராகவன் தற்போது மீண்டும் படங்களை இயக்குகிறார். இவர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. அந்த செய்தியை தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். டாப்சியும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

மூன்றாவது முறை

சிம்புவும் த்ரிஷாவும் ஏற்கெனவே, ‘அலை', ‘விண்ணைத்தாண்டி வருவாயா' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல், செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய ‘ஆதவரி மடலக்கு அர்தலு வெருலே' என்ற படத்தில் த்ரிஷா நடித்திருந்தார்.

மே முதல் வாரம்

சிம்பு-த்ரிஷாவை வைத்து செல்வராகவன் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பை மே முதல் வாரத்தில் தொடங்கவிருக்கின்றனர்



உத்தமவில்லனை ஏன் பார்க்கனும்? நம் கடமையல்லவா!


‘உத்தம வில்லன்’ தரிசனம் கிடைக்க நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.  மணி துளிகள்ஸ நிமிடங்களாகிஸ நிமிடங்கள் நொடிகளாகி திரையில் எப்போது பார்ப்போம் என்று கோடிக்கணக்கான கண்கள் காத்து கிடக்கின்றன. இன்னும் ஒரு சில நாட்களில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது உத்தமவில்லன்.

கமல் படத்திற்கு எப்போதும் ஒவ்வொரு வகையான எதிர்பார்ப்பு இருந்துக் கொண்டே இருக்கும். இம்மியளவு கூட குறையாமல் இம்முறையும் இருக்கிறது. சொல்லப்போனால் அது பன்மடங்கு உயர்ந்து நிற்கிறது. ஏன்? இப்படத்தை பார்க்க எது உயர்ந்த காரணமாக இருக்கமுடியும். கமலைத் தவிர அப்படி என்ன இருந்துவிட முடியும் என்று நீங்கள் நினைப்பது சரிதான். அவற்றோடு நிறைய காரணங்கள் கண்களுக்கு விருந்தளிக்க இருக்கின்றன.

உத்தமவில்லனை ஏன் பார்க்கனும்? அது நம் கடமையல்லவா? இதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவரும் ட்ரெண்ட். அதற்கான காரணங்கள் இதோஸ
 புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞர்கள், டெக்னீஷியன்கள், லொக்கேஷன்கள் என ஹாலிவுட்  தரத்திற்கு இணையாக ஒரு தமிழ் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.  டிரெய்லர் பார்க்கும்போதே கமலின் வசனங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. இப்படத்தின் 3வது டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. காதல், பாசம், நன்றி, மன்னிப்பு இதை சொல்வதற்கு இப்போதெல்லாம் நேரம் இல்லை என்று இன்றைய எந்திர வாழ்க்கையை ஒரு வரியில் சொல்லியிறுக்கிறார் கமல்.  உத்தமன், மனோரஞ்சன் என இரண்டு வேடங்களில் மிரட்டியிருக்கிறார் கமல். வில்லுப்பாட்டில் தொடங்கி வித்தியாசமான பல கெட்அப்களில் தோன்றி நம்மை வியக்கவைத்திருக்கிறார்.  கமலின் கவிதை வரிகளில் உருவாகியுள்ள 5 பாடல்களுக்கு இசை உருவம் தந்திருக்கிறார் ஜிப்ரான். இவர்கள் கூட்டணியில் விஸ்வரூபம்-2 இரண்டாவது படமாக வெளிவரவிருந்தாலும் ‘உத்தமவில்லன்’ பாடல்களே இன்று விஸ்வரூபம் எடுத்து இப்படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.  கேரளாவின் புகழ்பெற்ற கலையானது தெய்யம். இதன் கலைஞராக கமல் வரும் காட்சிகள் இந்திய சினிமாவிற்கே புதியது என்றும் கமலின் நடனம் இளம் தலைமுறை நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாகவும் படம் பார்த்த பிரபலங்கள் கூறியுள்ளனர்.  இவையில்லாமல் கமல்-ரஜினி உள்ளிட்ட மாபெரும் கலைஞர்களை கண்டெடுத்து அவர்களை செதுக்கி தமிழ் திரையுலகுக்கு கொடுத்த குருநாதர் கே.பாலசந்தரின் கடைசி படம் இது.

என்ன பாஸ் படிச்சவுடனே புக் பண்ண ரெடியாகிட்டீங்க போலஸ





குடித்து விட்டு நடுரோட்டில் தகராறு செய்த ஊர்வசி


தென்னிந்தியா சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. தற்போது இவர் பல காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவர் கேரளாவில் ஒரு ஹோட்டலுக்கு சமீபத்தில் வந்துள்ளார். அங்கிருந்து அவர் கிளம்பும் போது நிதானம் இல்லாமல் குடித்திருந்தது தெரிய வந்துள்ளது.

அப்போது காரில் ஏறுகையில் அங்கிருந்தவர்களிடம் ஏதோ கூறி தகராறு செய்து கொண்டிருக்க, இதை யாரோ வீடியோ எடுக்க, இது தான் தற்போதைய ட்ரண்ட்


 அரை நிர்வாணமாக சந்தோஷ்சாரிகா நடிக்கும் ‘நிராயுதம்’


ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்த சந்தோஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘நிராயுதம்’. கதையின் நாயகியாக சாரிகா நடிக்கிறார். இப்படத்தை எஸ்.பி.எம்.கிரியேஷன்ஸ் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கிறார். முக்கிய வேடத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார்.

சரவணகுமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைக்கிறார் கனி. ‘நிராயுதம்’ படம் குறித்து படத்தின் இயக்குனர் M.B.ராஜதுரை கூறியதாவதுஸ

“நாயகன் சந்தோஷ் அமெரிக்கா ரிட்டன்ஸ். இவர் ஒரு பந்தா பேர்வழி. நாயகி சாரிகா சாப்ட்வேரில் பணிபுரிபவர். அறிமுக நடிகரான வெங்கட் கால் டாக்சி டிரைவராக வருகிறார். சாரிகா வேலை முடிந்து நடு இரவில் வெங்கட்டின் கால் டாக்சியில் பயணிக்கிறார். அவருக்கு மயக்க மருந்து ஸ்பிரே செய்து அவளை கடத்துகிறான்.

கண்விழித்து பார்க்கும்போது அரை குறை ஆடையுடன் ஒரு அறையில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதை உணர்கிறாள். அரை குறை ஆடையுடன் தப்பிக்க வழியை தேடி ஒவ்வொரு அறையாக கடந்து வரும்போது மற்றொரு அறையில் நாயகன் சந்தோஷும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். பின்பு அவர்கள் இருவரும் அரைகுறை ஆடையுடன் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை. படப்பிடிப்பு விறுவிறுப்புடன்  நடைபெற்று வருகிறது” என்றார் இயக்குனர்.


நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி பலியான தெலுங்கு நடிகர் கே. விஜய்!


காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி தெலுங்கு நடிகர் கே.விஜய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவர் கே.விஜய் (25). இவர் தற்போது எட்டகாரம் என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எட்டகாரம் படக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். ஆனால், படத்தின் நடன இயக்கத்தையும் ஏற்றுக் கொண்ட விஜய், அதற்கான ரிகர்சலில் ஈடுபட்டிருந்தார். எனவே, ரிகர்சலை முடித்து விட்டு தனிக்காரில் சென்றுள்ளார் விஜய்.

அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அவரது கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக பலியானார். மேலும் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.

கே.விஜய் பலியானதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். உடனடியாக விஜயின் உடலை ஆந்திரா கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் படி அம்மாநில அரசுக்கு தெலுங்கு திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் கிஷன் ஹைதராபாத்தில் கூறுகையில், ‘விஜய் மரணமடைந்திருக்கும் தகவல் வந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரும்பியபோது அவர்களின் கார் கவிழ்ந்து இறந்துள்ளார் விஜய். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். உடன் வந்த 3 பேர் காயமடைந்தனர்' என்றார்.

உயிரிழந்த விஜய் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பபட்லாவைச் சேர்ந்தவர்.
 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies