இஞ்சி முறப்பா – முன்னோட்டம்
புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்கும் ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ இஞ்சி முறப்பா” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். மற்றும் புதுமுகம் கிருஷ்ணா, ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – S. சகா இவர் திரைப்பட கல்லூரியில் பயின்றதுடன் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி அவர் கூறியதாவதுஸ
தன் தங்கையை எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று அண்ணன் கண்ட கனவு ஒரு கட்டத்தில் பொய்யாகிப் போகிறது .
தன் தங்கை காதலனிடம் ஏமாந்து போய் நிற்க அண்ணன் எடுக்கிற முடிவுதான் கதை .
பாசத்தையும், நாயகனின் காதலையும் திரைக்கதையில் சுவையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
படப்பிடிப்பு சென்னை, பாண்டி மற்றும் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
ஒளிப்பதிவு – P.R.K. ராஜு
பாடல் – யுகபாரதி
இசை – மணிசர்மா
எடிட்டிங் – ஹரி
கலை – ஹரி.K
நடனம் – சொர்ணா
ஸ்டன்ட் – நந்து
தயாரிப்பு நிர்வாகம் – வாசு
நிர்வாக தயாரிப்பு – ராஜு
தயாரிப்பு – மலர்கொடி முருகன், A.P.ராதாகிருஷ்ணன்.
இரவும் பகலும் வரும்
ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் ஏ.தணிகை வேல் வழங்க ஸ்கை டாட் பிக்சர்ஸ் சார்பாக பாலசுப்ரமணியம் பெரியசாமி தயாரிக்கும் படம் ‘இரவும் பகலும் வரும்’. பால ஸ்ரீராம் இயக்கும் இப்படத்திற்கு தினா இசையமைக்கிறார். ‘அங்காடித் தெரு’ மகேஷ், அனன்யா, ஏ.வெங்கடேஷ், ஜெகன், சாமிநாதன், யுவராணி, சஞ்சனா சிங், ஷகிலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குனர் பால ஸ்ரீராம், பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராகப் பல படங்களில் பணியாற்றியவர்.
படத்தைப் பற்றி இயக்குனர் பால ஸ்ரீராம் கூறுகையில்,
“பொறியியல் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன், எல்லோரும் மதிக்கும் வகையில் நல்ல முறையில் நடந்து கொள்ளும் நல்ல பண்புகளை கொண்டவன். காலையில் கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன், இரவில் மட்டும் திருடனாய் உலாவுகிறான். அவன் ஏன் திருடன் ஆனான்? எதற்காகத் திருடுகிறான் என்பதே ‘இரவும் பகலும் வரும்’ படத்தின் கதை.
எனது குரு ஏ.வெங்கடேஷ் எனது முதல் படத்திலேயே நடிக்கப் பெரிதும் ஒத்துழைப்பு கொடுத்தார். படத்தின் கதாநாயகி அனன்யாவிடம் கதையை சொல்லி முடித்த கனத்திலேயே 1 ரூபாயை முன் தொகையாகப் பெற்றுக் கொண்டு படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார்,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இயக்குனர் பால ஸ்ரீராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு நாமக்கல், தொட்டியத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி, சென்னையின் முக்கிய இடங்கள் என சுமார் 50 நாட்கள் நடைபெற்றுள்ளது.
தயாரிப்பு – ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் வழங்க ஸ்கை டாட் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் – பாலசுப்ரமணியம் பெரியசாமி
எழுத்து, இயக்கம் – பால ஸ்ரீராம்
இசை – தினா
பாடல்கள் – லலிதானந்த்
ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு – வி.டி.விஜயன் – என்.கணேஷ்குமார்
நடனம் – தினா
கலை – குருராஜ்
சண்டைப் பயிற்சி – மைக்கேல் ராஜ்
ஆடை வடிவமைப்பு – நித்யா , ரஃபி
மக்கள் தொடர்பு – நிகில்
அந்த குயில் நீதானா – முன்னோட்டம்
பொண்ணு பிலிம்ஸ் படநிறுவனம் சார்பாக குஞ்ஞய்யப்பன்,ராஜ்மார்த்தாண்டம் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “அந்த குயில் நீதானா”
சாகர் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக கீர்த்திகிருஷ்ணா நடிக்கிறார்.
மற்றும் வேணு, சலாம் குந்தத்து, ராஜ்மார்த்தாண்டம்,ராஜன், ஸ்ரேயாஜோஸ், சாருலதா, ஜெசி,ராக்பியா, ஸ்ரீகாந்த், தமில்வால்டர், மூனார்சிவா, விபின்குமார் சுரேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் ஸ்டான்லிஜோஸிடம் கேட்டோம்ஸ
இது கிராமத்து கதை ! கிராமத்தில் உள்ளவர்கள் அதிசயக்கும் அழகி பவளம். அவளது ஆசையோ முறைமாமன் முத்துவை காதலிப்பது தான்.டூரிஸ்ட் கைடாக இருக்கும் முத்து அனைவரிடமும் சகஜமாக பழகுவான். அப்படிதான் டூரிஸ்டாக வந்த அஞ்சலியிடம் பழக நேர்கிறது.சாதாரணமான அந்த பழக்கம் மற்றவர்களுக்கு வேறு மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் கதை! முத்து – பவளம் காதல் சேர்ந்ததா என்பதை “ அந்த குயில் நீதான “ படத்தின் மூலம் சொல்கிறோம்.
படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நெல்லை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் நடைபெற்றிருக்கிறது என்றார் ஸ்டான்லிஜோஸ்.
ஒளிப்பதிவு – ரஞ்சித்ரவி
இசை – கிருஷ்ணபிரசாத்துவாரகா
பாடல்கள் – அஜெய்
வசனம் , இணைஇயக்கம் – A.P.காசிம்
தயாரிப்பு மேற்பார்வை – மது
கலை – பிரதீப் / கதை – கனகம் ஸ்டெல்லா
எழுதி இயக்குபவர் – ஸ்டான்லிஜோஸ்
தயாரிப்பு – குஞ்ஞய்யப்பன்,ராஜ்மார்த்தாண்டம்
நீ நான் நிழல் – முன்னோட்டம்
ஸ்ரீ முத்தாரம்மன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜான் ராபின்சன் இயக்கத்தில் ஜெசின் ஜார்ஜ் இசையமைப்பில் சரத்குமார், அர்ஜூன் லால், மனோஜ் கே ஜெயன், இஷிதா, எம்எஸ் பாஸ்கர், தேவன், ப்ளாக் பாண்டி, காதல் அருண், சூப்பர் குட் லட்சுமணன், நிகிதா, ஸ்ருதி, பகத், லட்சுமி ப்ரியா, பாத்திமா பாபு என பெரும் நட்சத்திரக் கூட்டமே நடித்துள்ள படம் ‘நீ நான் நிழல்’.
ஃபேஸ்புக் நட்பால் நடக்கும் தொடர் கொலைகளின் கதைதான் இந்தப் படம். இன்றைய வாழ்க்கையில் ஃபேஸ்புக் என்பது மிகவும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்றச் சாதனமாகிவிட்டது. இந்த ஃபேஸ்புக் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுவது போலவே, மோசமான விஷயங்களுக்கும் பயன்படுகிறது.
மலேசியாவில் ஐந்து பேர் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். கொலைகளுக்கான காரணம் தெரியாமல் அந்த நாட்டு அரசே குழம்பிப் போகிறது. அப்போதுதான் அந்நாட்டு போலீஸ் அதிகாரிக்கு ஒரு க்ளூ கிடைக்கிறது. அதாவது ஒரு ஃபேஸ்புக்அழைப்புதான் இந்தகொலைகளின் பின்னணியில் இருப்பதை கண்டு பிடிக்கிறார். அடுத்த கொலை விழும் முன் கொலையாளியைக் கண்டு பிடிக்க முனைகிறார்.
அதே நேரம், இங்கு இந்தியாவில் ரோஹித் என்ற நபருக்கு, அதே ஃபேஸ்புக் அழைப்பு வருகிறது. அதன் பேரில் மலேசியா கிளம்புகிறான் ரோஹித். போன இடத்தில் என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை. இதுதான் இப்படத்தின் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை.
படத்தை எழுதி இயக்கியுள்ள ஜான் ராபின்சன் கடந்த 12 ஆண்டுகளாக இயக்குனர்கள் கே எஸ் அதியமான், மேஜர் ரவி ஆகியோருடன் பணியாற்றியுள்ளார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
இயக்கம் – ஜான் ராபின்சன்
இசை – ஜெசின் ஜார்ஜ்
பாடல்கள் – பிறைசூடன், கண்மணி ராஜா முகமது
ஒளிப்பவு – ஆல்பி – நஸீர்
படத் தொகுப்பு – நிகில் வேணு
வசனம் – கண்மணி ராஜா முகமது
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – பாதுஷா
கலை இயக்குநர் – அர்கன் எஸ். கர்மா
உடைகள் – சுனிதா பிரசாந்த்
மேக்அப் – ஷாஜி
நடனம் – ஷெரிஃப்
மக்கள் தொடர்பு – வீ.கே சுந்தர்
இம் மாத இறுதியில் ‘நீ நான் நிழல்’ திரைக்கு வரவிருக்கிறது