அதர்வா படித்து முடித்துவிட்டு பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக் ஓட்டுவதென்றால் ரூல்ஸை கடைப்பிடிக்கிற கேரக்டர். ஒருநாள் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை பார்க்கிறார். பார்த்தவுடனயே அவள் அழகில் மயங்கிவிடுகிறார்.
மறுநாளும் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை பார்க்கிறார். அப்பொழுது பிரியா ஆனந்த் நேரடியாக இவரிடம் வந்து, அவரை காதலிப்பதாக கூறிவிட்டு சென்றுவிடுகிறார். அதைக்கேட்டதும் அதர்வா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். மறுபக்கம் சந்தோஷமும் அடைகிறார்.
ஒருநாள் பிரியா ஆனந்தின் வீட்டுக்கே பீட்சா டெலிவரி பண்ணப்போகும் அதர்வாவிடம், பிரியா ஆனந்த் தான் அன்று பஸ்ஸில் தனது பிரெண்டோட பாய் பிரெண்டை கலாய்ப்பதற்கு பதில், தவறுதலாக உன்னிடம் கூறிவிட்டேன் என்று சொல்கிறாள். இதனால் சோகத்துடன் திரும்பும் அதர்வா, அவளுடைய போன் நம்பரை கண்டுபிடித்து அவளுடன் பேசத்துடிக்கிறார்.
ஒருகட்டத்தில் பிரியா ஆனந்தின் போன் நம்பரை கண்டுபிடித்து அவளிடம் பேச ஆரம்பிக்கிறார் அதர்வா. அவளும் அதர்வாவுடன் பேசத்தொடங்குகிறாள். இருவரும் நட்பாக பழகிக்கொண்டிருக்கும்போது அதர்வா மனதுக்குள் மட்டும் காதல் துளிர்விடுகிறது.
பிரியா ஆனந்த்துக்கு பைக் என்றால் கொள்ளை பிரியம். ஒரு பைக்கின் சத்தத்தை வைத்தே அது எந்த பைக் என்று கண்டுபிடிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவள். அவள் நமக்கென்று ஒரு பைக் இருந்தால் எப்படி இருக்கும் என்று அதர்வாவிடம் தனது ஆசையை கூறுகிறாள். பிரியா ஆனந்திற்கு விருப்பமான பைக்கை வாங்க முடிவெடுத்து ஒரு ஷோரூமுக்கு செல்கிறார்கள்.
அங்கு சில பைக்குகளை பார்த்து திருப்தியடையாத பிரியா ஆனந்த், குடோனுக்குள் வைக்கப்பட்டிருக்கும் ரேஸ் பைக்கான டிகார்டி பைக்கை வாங்கவேண்டும் என்று அதர்வாவிடம் கூறுகிறாள். அதர்வாவோ அந்த பைக் வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், பிடிவாதமாக பிரியா ஆனந்த் அந்த பைக்தான் வாங்கவேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.
வேறு வழியின்றி அதர்வாவும் அந்த பைக்கை வாங்கிக்கொண்டு பிரியா ஆனந்தை சந்திக்கிறார். அதனால் சந்தோஷமடையும் பிரியா ஆனந்த், அதர்வாவை கூட்டிக்கொண்டு தான் படித்த கல்லூரிக்கு சென்று சுற்றி காட்டுகிறாள். அப்போது அவள்மீதுள்ள காதலை சொல்லும் அதர்வாவிடம், நட்பாகத்தான் பழகுகிறேன் என்று சொல்லி அவன்மீது கோபப்படுகிறாள்.
இருவரும் அங்கிருந்து கோபத்துடனேயே திரும்பி வரும்வேளையில் இவர்களை ஜானி மற்றும் அவருடைய ஆட்கள் ரேஸ் பைக்கில் வந்து அவர்களை சுற்றி வளைத்து ஒரு குடோனுக்குள் அழைத்துச் செல்கின்றனர். அங்கு அதர்வாவை அடித்துப் போட்டுவிட்டு, பிரியா ஆனந்தை கடத்தி சென்றுவிடுகின்றனர்.
ஜானி, பிரியா ஆனந்தை கடத்திச் செல்ல காரணம் என்ன? பிரியா ஆனந்தை ஜானியிடம் இருந்து அதர்வா மீட்டாரா? என்பதை சுவாரஸ்யத்துடன் பிற்பாதியில் சொல்லியிருக்கிறார்கள்.
‘பரதேசி’ படத்திற்கு பிறகு அதர்வாவுக்கு இப்படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு. அதை சரியாகவும், செம்மையாகவும் செய்திருக்கிறார். பைக் ஓட்டுவதில் ரூல்ஸ் ராமானுஜராக வரும் அதர்வா, பிற்பாதியில் எடுக்கும் விஸ்வரூபம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. இந்த படத்தில் எதற்காக சிக்ஸ் பேக் வைத்தார் என்பதுதான் தெரியவில்லை.
பிரியா ஆனந்த்-அதர்வாவுடன் இணைந்து வரும் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். அதர்வாவின் நண்பியாக வரும் லட்சுமிராய் நடிப்பிலும், கவர்ச்சியிலும் சமமாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வில்லனாக வரும் ஏழாம் அறிவு ஜானி, அதர்வாவுடன் சண்டை போடும் காட்சியில் ஆக்ரோஷம் காட்டுகிறார்.
படத்தின் கதை ஓ.கேதான் என்றாலும் அதை திரைக்கதையாக்குவதில்தான் இயக்குனர் யுவராஜ் போஸ் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். படத்தின் முன்பாதியை நகர்த்துவதற்கு ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். பிற்பாதியில், கொஞ்சம் விறுவிறுப்பு காட்டியிருக்கிறார். இருந்தாலும் ஒருசில காட்சிகளை நீளமாக வைத்திருப்பதால் கொஞ்சம் போரடிக்க வைத்திருக்கிறது.
படத்தில் பாராட்டப்பட வேண்டியது கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவுதான். இறுதிக்காட்சியையும், படத்தின் பாடல்களையும் படமாக்கியது அருமை. ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை பரவாயில்லை.
மொத்தத்தில் ‘இரும்பு குதிரை’ முரட்டுத்தனம்
லிங்கா பர்ஸ்ட் லுக் வெளியானது!
சூப்பர் ஸ்டார் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கும், லிங்கா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் கர்நாடகாவில் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அதில் சூப்பர் ஸ்டார் ஒரு கோவிலின் பின்னணியில் ஸ்டைலாக நடந்து வருவது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. அவர் அணிந்துள்ள ஆடை வித்தியாசமாக உள்ளது. லேசாக கிழிந்த மாடல் ஜீன்ஸ் அணிந்திருக்கிறார்.
வெள்ளை பனியனுக்குமேல் முழுக்கை சட்டை அணிந்து பட்டனை திறந்து பறக்கவிட்டு வருகிறார். கழுத்தில் ஒரு டர்பனை கட்டி அதன் ஒரு முனையை தோளைச் சுற்றி தொங்கவிட்டிருக்கிறார். காலில் லெதர் ஷூ அணிந்திருக்கிறார்.
புலி நகத்தை டாலராக கழுத்தில் அணிந்திருக்கிறார். முகத்தில் கருப்பு கண்ணாடி அணிந்திருக்கிறார். 80களில் வலம் வந்த ரஜினியை அப்படியே மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். அவர் நடந்து வரும்போது புழுதி பறப்பதாக டிசைன் செய்திருக்கிறார்கள்.
லிங்கா என்ற எழுத்து மெட்டல் லெட்டராக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்திலும் ரஜினி கழுத்தில் அணிந்திருப்பது போன்ற புலி நக டிசைன் இருக்கிறது. இந்த பர்ஸ்ட் லுக் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களிடமும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
விஷாலுக்காக மீண்டும் படம் இயக்கும் சுசீந்திரன்!
சுசீந்திரன் இயக்கத்தில், விஷால், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்த ‘பாண்டிய நாடு’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் தற்போது விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து ‘ஜீவா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் விஷால் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம் சுசீந்திரன். விஜய், அஜித்தையெல்லாம் இயக்க மாட்டீர்களா எனக் கேட்டால் அவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர்களும் சரியென்றுதான் சொன்னார்கள் என்கிறார் சுசீந்திரன்.
அவர் மேலும் கூறுகையில், “அப்படி அவங்களை மாதிரி பெரிய ஸ்டாரோட படம் பண்ணும் போது சாதாரணமான ஸ்கிரிப்டா இல்லாம ஒரு வித்தியாசமான ஸ்கிரிப்ட் ரெடி பண்ணணும். நான் இதுவரைக்கும் கதையைத் தயார் செய்துட்டுதான் அதற்கான நடிகர்களைத் தேர்வு செய்வேன்.
ஹீரோவுக்குன்னு கதை தயார் பண்ணணும்னா அதுக்குன்னு தனியா ஒர்க் பண்ணணும். முதல் முறையாக ஒரு ஹீரோவுக்காக கதை பண்ணப் போறேன். அப்படி நான் பண்ற படம் விஷாலுக்கு. ‘பாண்டிய நாடு’ படத்துக்கு முன்னாடி நான் ஃபெயிலியர் கொடுத்திருந்தாலும் என்னை நம்பி அட்வான்ஸ் கொடுத்தவர் அவர். அதற்காக அவருக்காக ரொம்ப மெனக்கெட்டு ஒரு கதை பண்ணப் போகிறேன், ” என்கிறார் சுசீந்திரன்.
ரஜினிகாந்துடன் ஜோடியாகத்தான் நடிப்பேன்ஸசரண்யாவின் ஆசைஸ!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சரண்யா. அதன், பின் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து பின்னர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார்.
அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்து சர்ரென உச்சத்திற்குப் போனார். ‘தென் மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார். ஏறக்குறைய இன்றைய இளம் நடிகர்கள் அனைவருக்குமே அம்மாவா நடித்து விட்டார். இன்றைய தேதியில் அம்மா கதாபாத்திரத்தில் இவரை விட்டால் மிஞ்ச யாருமேயில்லை.
நாயகியாக நடித்ததை விட தற்போது ரொம்பவே பிஸியாக இருக்கிறார் சரண்யா. சமீபத்திய பேட்டி ஒன்றில் இன்னும் நடிக்காத நடிகர்களைப் பற்றி அவர் பேசினார். அப்போது “நான் ரஜினிகாந்துடனும், மோகன்லாலுடனும் ஜோடியாக நடிப்பேனே தவிர அவர்களுக்கு அம்மாவாக நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். எனக்கு சிறு வயதிலிருந்தே ரஜினிகாந்த் என்றால் ரொம்ப பிடிக்கும்.
என்னுடைய அம்மா தீவிரமான கமல் ரசிகை. நான் சின்னப் பெண்ணாக இருந்த போது சினிமாவுக்குப் போக வேண்டுமென்றால் கூட கமல் படத்திற்குத்தான் முதலில் கூட்டிச் செல்வார். அப்புறம்தான் ரஜினி படத்திற்கே கூட்டிச் செல்வார். ரஜினியுடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், ” என்றார்.
தீவிர ரசிகையின் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்