சூர்யாவின் அஞ்சானும் 3 மணி நேர படமாம்!மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு 13-08-2014

13 Aug,2014
 

             


இது டுவிட்டர் காலம். அதனால் 2 மணி நேரம அல்லது அதிகபட்சமாக இரண்டே கால் மணி நேரத்தோடு படத்தின் நீளத்தை நிறுத்திக்கொள்ளுங்கள் அதற்கு மேல் ரசிகர்கள் தியேட்டரில் உட்கார மாட்டார்கள் என்று விஜய், அஜீத் உள்ளிட்ட பிரபல ஹீரோக்களே தங்களது இயக்குனர்களுக்கு ஆர்டர் போட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், சித்தார்த் நடித்த ஜிகர்தண்டா கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய படமாக வந்துள்ளது. இந்த நீளம் ரசிகர்களுக்கு போரடித்து விடுமோ என்ற அச்சம் ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது ரசிகர்களிடமிருந்து அதுபற்றிய கமெண்டு எதுவும் வராததால் அப்படியே விட்டுவிட்டனர்.

அதனால் 3 நேரம் வரை எடுக்கப்பட்டுள்ள அஞ்சான் படத்தை கடைசி நேரத்தில் தேவையில்லாத காட்சிகளை கத்தரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்கள், இப்போது அதெல்லாம் தேவையில்லை என்று அப்படியே ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

காரணம், ஏற்கனவே சூர்யா நடித்த சிங்கம் படத்தைப்போன்று இப்படமும் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகியிருப்பதால், கதை படு ஸ்பீடாக நகர்த்தப்பட்டுள்ளதாம். அதனால், கதையோடு நகரும் ரசிகர்களுக்கு படத்தின் நீளமே தெரியாத அளவுக்கு கதையோட்டம் இருக்கும் என்கிறார்கள்.

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற கேள்வி முட்டாள்தனமானது. சூர்யாவின் அதிரடி பேட்டி.
 அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று பரபரப்பாக அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் விவாதங்கள் சமூக இணையதளங்களில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சுக்கே இடமில்லை. சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுந்தான் என அதிரடியாக சூர்யா பேசியுள்ளதால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகை ஒன்றின் மூலம் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற விஜய், விரைவில் வெளிவர இருக்கும் கத்தி திரைப்படத்தின் டைட்டிலில் 'அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்" என்ற பதிவு செய்ய தயாராக இருக்கின்றார். இந்நிலையில் சூர்யாவின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் சூர்யா கூறியதாவது, "சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது சாதாரணமாக கிடைக்கக்கூடியது அல்ல. ரஜினி சாரின் உழைப்புக்கும், வெற்றிக்கும் மரியாதைக்கும் கிடைத்த வரம். அந்த பட்டத்தையும் அவரையும் பிரித்து பார்க்கவே முடியாது. எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியே முட்டாள்தனமானது. என்னை பொறுத்தவரையில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் மட்டுமே என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கின்றார்.

 

இந்த பேட்டி வெளியான சில நிமிடங்களில் சூர்யாவை விமர்சித்து அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக இணையதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர். இன்னும் இரண்டு நாட்களில் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் விஜய் ரசிகர்களை சீண்டிவிடும்படி கருத்தை சூர்யா தவிர்த்திருக்கலாம் என கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது


குரங்காட்டியை இயக்குகிறார் ராஜுமுருகன்-தனுஷ் ஹீரோ.?!


பத்திரிகையாளராக இருந்து சினிமா இயக்குனர் ஆனவர் ராஜு முருகன். இவர் இயக்கிய முதல் படமான குக்கூ பரவலான பாராட்டுகளை பெற்றது.

பார்வையற்றவர்களின் உலகை யதார்த்தமாக காட்டிய படம். இதனை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரித்திருந்தது. இந்த நிறுவனமே ராஜு முருகனின் அடுத்த படத்தையும் தயாரிப்பதாக அறிவித்திருந்தது.

ராஜுமுருகன் அடுத்த குரங்காட்டி என்ற படத்தை இயக்க இருக்கிறார். இது ராம் திருவுடையான் என்ற எழுத்தாளரின் நாவல். இதனை படமாக்கும் உரிமையை அவரிடமிருந்து பெற இருக்கிறார் ராஜு முருகன். இதில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதும் ராஜு முருகன் அவரிடம் கதை சொல்ல நேரம் கேட்டிருக்கிறார்.

ஒரு வேளை தனுஷ் ஒத்துக் கொண்டால் காதலில் சொதப்புவது எப்படி பாலாஜி மோகன் இயக்கும் படத்தை முடித்துவிட்டு அடுத்து குரங்காட்டியில் அவர் நடிக்கலாம். தனுஷ் ஒத்துக் கொள்ளாவிட்டால் விக்ரமிற்கு ஒரு கதையும், சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதையும் தயாராக வைத்திருக்கிறார் ராஜு முருகன்.


டிஆர்பி ரேட்டிங்கில் விஜய், அஜீத் மோதல்


கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் அதன் விருது வழங்கும் விழா ஒளிபரப்பானது. அதில் விஜய்க்கு பெஸ்ட் எண்டர்டெய்னர் விருது வழங்கு வைபவம் ஹெலைட்டாக இருந்தது. அதே நேரத்தில் அதற்கு போட்டியாக இன்னொரு தொலைக்காட்சியில் அஜீத் நடித்த வீரம் படம் ஒளிபரப்பானது.

இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் தனித்தனியாக டுவிட்டர் கணக்கு தொடங்கி விஜய் நிகழ்ச்சியை மக்கள் அதிகம் பார்த்தார்களா? வீரம் படத்தை பார்த்தார்களா என்ற கணிப்பை நடத்தினார்கள். இருவரும் மாறி மாறி எங்கள் ஹீரோக்குத்தான் மவுசு என்று கமெண்டுகளை தட்டிவிட்டார்கள்.

தற்போது இதன் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட இரு நிகழ்ச்சிகளிலும் நடத்திய கணக்கெடுப்பில் சென்னை மண்டலத்தில் வீரம் படத்திற்கு 11 புள்ளிகளும், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு 10 புள்ளிகளும் கிடைத்தது.

கிராமங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு முழுமைக்குமான டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் நிகழ்ச்சிக்கு 10 புள்ளிகளும், வீரம் படத்திற்கு 9 புள்ளிகளும் கிடைத்துள்ளது. எப்படியோ இரு தரப்பு ரசிகர்களும் திருப்திபட்டுக் கொண்டுவிட்டார்கள்.

ஏழு தோல்விக்குப் பிறகு தனுஷூக்கு கிடைத்த வெற்றி!


2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பாக்ஸ்ஆபிசில் வெற்றிப்படங்கள் இல்லை. சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3, மரியான், நய்யாண்டி என கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வந்தார் தனுஷ்.

ஜூலை 18ஆம் தேதி வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி தனுஷுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. வேலையில்லா பட்டதாரி படத்திற்கு உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததன் காரணமாக, படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே சுமார் 15 கோடிகளை வசூல் செய்து சாதனை புரிந்தது.

உலகளவில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்ததினால் விஐபியின் முதல் வார வசூல் 20 கோடிகளைத் தொட்டது. முதல் வாரம் மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த வாரமும் விஐபியின் வசூல் குறையவில்லை.

ஜிகர்தண்டா படத்தை தள்ளிப்போட வைத்ததால், வேறு எந்த பெரிய படமும் அப்போது ரிலீஸாகவில்லை. எனவே போட்டியில்லாமல்போய் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் இரண்டாவது வாரமும் நல்ல வசூலைக் குவித்தது. மூன்றாவது வாரத்தில் ஜிகர்தண்டா படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதால், விஐபியின் வசூல் கொஞ்சம் குறைந்தாலும் பெரிய பாதிப்பில்லை.

தற்போதைய சூழலில் மூன்றாவது வாரத்திற்கு மேல் எந்த ஒரு படமும் தாக்குப்பிடிப்பதில்லை என்ற சூழலில் தற்போது 25 நாட்களை எட்டியுள்ளது விஐபி. தமிழகம் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா உட்பட வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு! தனுஷ் நடித்த படங்களிலேயே வெளிநாட்டில் முதல் முறையாக பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது விஐபி படத்துக்குத்தான்.

25 நாட்களில் உலகளவில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாயை வசூலித்துள்ளது விஐபி. தனுஷ் படங்களிலேயே அதிக அளவில் வசூல் செய்திருக்கும் படம் என்ற பெருமை வேலையில்லா பட்டதாரி படத்துக்குக் கிடைத்திருக்கிறது.

இரும்புக்குதிரை இளைஞர்களை கெடுக்கும் படமல்ல! -அதர்வா


சமீபகாலமாக இளைஞர்கள் சாலைகளில் கண்மூடித்தமாக பைக் ஓட்டி வருகின்றனர். அவர்கள் செல்லும் வேகம் காரணமாக, சாலைகளில் செல்லும் மற்ற வாகனங்கள் பதறிப்போகின்றன. அதனால்தான் சென்னை நகரத்தில் இந்த அளவு வேகத்துடன்தான் பைக் ஓட்ட வேண்டும் என்ற அவசர சட்டம் பிறக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, அதிக வேகத்துடன் பைக் ஓட்டுபவர்களை போக்குவரத்து போலீசார் பிடித்து அபராதம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். சிலரை கைது செய்தும் வருகின்றனர். இதனால் மிதமிஞ்சிய வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் பட்டாளம் தற்போது மிதமான வேகத்தில் பைக் ஓட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், இரும்புக்குதிரை படத்தில் பைக் ரேசராக நடித்துள்ள அதர்வா 180 கிலோ மீட்டர் வேகத்தில் பைக் ஓட்டியபடி நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் இதைப்பார்த்து இளைஞர்கள் இன்னும் கெட்டப்போவார்களே என்றொரு கருத்தும் நிலவியுள்ளது.

ஆனால் இதுபற்றி அதர்வா கூறும்போது, இந்த படத்தில் பைக் ரேசராக நடித்துள்ள நான் போட்டியின்போது அப்படி ஓட்டியிருக்கிறேன். மற்றபடி சாலைகளில் பைக் ஓட்டும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்தான் நடித்திருக்கிறேன்.

அதாவது, ஒரு நிமிடம் சாலை விதிகளை மதிக்காமல் பைக் ஓட்டிய ஒருவனின் வாழ்க்கையில் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதுதான் இப்படத்தின் ஹைலைட்டாக சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் இந்த படம் வாகனம் ஓட்டும் அனைவருக்குமே ஒரு விழிப்புணர்வு படமாகத்தான் இருக்கும் என்கிறார் அதர்வா.

2014 எனக்கு சந்தோசமான வருடம்! -ப்ரியாஆனந்த்


எதிர்நீச்சலுக்கு பிறகு பேசப்படும் நடிகையான ப்ரியாஆனந்த், கிருத்திகா உதயநிதி இயக்கிய வணக்கம் சென்னை படத்தில் இதுவரை நடிக்காத வெயிட்டான ரோலில் நடித்தார். அதன்பிறகு வெயிட்டான கதைகள் தேடியபோதும் அவரை நம்பி வாய்ப்பு கொடுக்க இயக்குனர்கள் முன்வரவில்லை.

அதனால் வழக்கம்போல் மரத்தை சுற்றி டூயட் பாடுவதற்காக, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, வை ராஜா வை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களில் கமிட்டானார்.

இதில், அரிமா நம்பி வெளியாகி ஹிட்டடித்து விட்டதால் உற்சாக மனநிலையில் இருக்கிறார் ப்ரியாஆனந்த். அதோடு, இரும்புக்குதிரை, வை ராஜா வை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என நான் நடித்துள்ள மூன்று படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

இந்த படங்கள் எல்லாமே வெற்றி பெறும் நிலையில்தான் உள்ளன. அந்த வகையில், நான் சினிமாவுக்கு நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளில் இந்த 2014ம் ஆண்டுதான் எனக்கு சிறப்பான வருடம் என்று சொல்லும் ப்ரியாஆனந்த், ஒரே வருடத்தில் 4 படங்கள் திரைக்கு வருவதால் அதிக உற்சாகத்தில் இருக்கிறேன் என்கிறார்


நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் கபடமாக பழகும் கதாநாயகி. அஜீத் தயாரிப்பாளர் அதிர்ச்சி.


 

நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒருவருக்கொருவர் பழகி தங்களுக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளை தீர்த்துக்கொள்ளும் திரைக்கதையுடன் உருவாகி வருகிறது 'கபடம்' திரைப்படம். இந்த படத்தில் புதுமுகம் சச்சின் மற்றும் அங்கனா ராய் ஆகியோர் நடிக்கின்றனர்.

அஜீத் அறிமுகமான 'அமராவதி' படத்தை தயாரித்த சோழா பொன்னுரங்கம் அவர்களின் சோழா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஜோதி முருகன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் செல்வராகவன் மற்றும் ராதா மோகன் ஆகியோர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து இயக்குனர் ஜோதிமுருகன் கூறியதாவது, "பெற்றோர்களால் திருமண நிச்சயம் செய்யப்பட்ட ஒரு பெண், தனது வருங்கால கணவருடன் திருமணத்திற்கு முன்னர் பழகி, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறாள். அவ்வாறு பழகும்போது அவர்களிடையே நிறைய மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதால் அதிர்ச்சியடையும்,  நாயகி திருமணத்திற்கு சம்மதித்தாரா, தடுத்தார? என்பதுதான் கதை.

சென்னை மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளிவரும் என தெரிகிறது. இந்த படத்தை சொன்ன பட்ஜெட்டில் இருந்து மிகவும் குறைவான செலவில் படத்தை முடித்துக்காட்டுவதாக இயக்குனர் கூறியிருப்பதால் தயாரிப்பாளர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

18 வயதில் திருமணமாகி விவாகரத்து ஆன பிரபல நடிகையுடன் டேட்டிங் செல்லும் வாசிக் அக்ரம்.

 
 பாகிஸ்தானில் மாடல் அழகியாக இருந்து பின்னர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக மாறிய நடிகை Humaima Malik, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் வாசிம் அக்ரமுடன் டேட்டிங் செல்வதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. Humaima Malik ஏற்கனவே தனது 18வது வயதிலேயே திருமணமாகி பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாகிஸ்தானில் பிரபல மாடல் அழகியாக இருந்த நடிகை Humaima Malik, பின்னர் பாலிவுட்டில் நடிகையாக மாறியுள்ளார். இவர் Bol,Ishq Khuda ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது Raja Natwarlal என்ற திரைப்படத்தில்  Emraan Hashmi அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கின்றது.

 

இந்நிலையில் தற்போது 26 வயதாகும் நடிகை Humaima Malik, 48வயதான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமுடன் டேட்டிங் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகிறது.இந்த தகவலை Humaima Malik, மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே இவர் ஒரு பேட்டியில் தன்னுடைய பாய்பிரண்ட் ஒருவரின் வயது 45க்கும் மேல் இருக்கும் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை  Humaima Malik, தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது..

மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலுஸ

தன் நகைச்சுவையால் பலரையும் குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்து, கவலைகளை மறக்கடித்து, அனைவரின் குடும்பத்திலும் ஒருவராய் உறவாடப்பட்ட வடிவேலு சிறு இடைவேளைக்குப் பிறகு ‘தெனாலிராமன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து மீண்டும் தன் நகைச்சுவை பயணத்தைத் துவங்கினார்.
‘தெனாலிராமன்’ படமும் வடிவேலுவின் நகைச்சுவையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
தற்போது வடிவேலு மீண்டும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘தெனாலிராமன்’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கவிருக்கிறார். 1970களில் நடக்கும்படியான கதையைக் கொண்டது இப்படம்.
ஒஹோ பிக்சர்ஸ் சார்பாக ஜி.ராம்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசை –  இமான், ஒளிப்பதிவு – கோபிஅமர்நாத், கலை – தோட்டாதரணி, படத்தொகுப்பு – ராஜாமுகமது.
படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.

முதல் மரியாதை’ – பிடிக்காமல் இசையமைத்த இளையராஜாஸ


பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் சிவாஜிகணேசன், ராதா மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘முதல் மரியாதை’ படத்தின் பின்னணி இசை இன்றளவும் பேசப்படும் ஒன்று. அந்த படத்தின் பின்னணி இசையில் பலவித மாயாஜாலங்களை ஏற்படுத்தியிருப்பார் இளையராஜா.
அதிலும் குறிப்பாக, அந்த இளவட்டக் கல்லை, சிவாஜிகணேசன் தூ



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies