ஹன்சிகா திரும்பி வந்ததன் ரகசியம்ஸ செய்தித் துளிகள் செய்தித் துளிகள்

12 Aug,2014
 

             

ஹன்சிகா தற்போது தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சில வாரங்களாக ஐரோப்ப நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார். ஒவ்வொரு ஊருக்குச் செல்லும் போதெல்லாம் டுவிட்டரில் புகைப்படங்களை வெளியிட்டு அவருடைய சுற்றுப் பயணத்தைப் பற்றி உடனுக்குடன் தெரிவித்து வந்தார்.

ஆனால், திடீரென சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி விட்டார்.
அவருடைய பிறந்த நாளை ஒரு முக்கியமான நபருடன் கொண்டாட வேண்டுமென்றுதான் பாதியில் திரும்பினாராம். அந்த முக்கியமான நபர் வேறு யாருமல்ல, அவருடைய அம்மாதான். ஹன்சிகாவிற்கு அனைத்துமே அவருடைய அம்மாதான்.

அவர்தான் ஹன்சிகாவின் தேதிகளைப் பார்ப்பது, அவர் சம்பந்தப்பட்ட பணிகளைக் கவனித்துக் கொள்வது என திரையுலக வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கிறார். அதனால், பிறந்தநாளை அம்மாவுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே திரும்பி வந்துவிட்டாராம்.

அம்மாவுடன் தன்னுடைய பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி அந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, 22 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய வெற்றிக்கும் தான் செய்யும் செயல்களுக்கும் அம்மாதான் காரணம் என்று அம்மா புகழ் பாடுகிறார் ஹன்சிகா.

தற்போது ஆர்யாவுடன் ‘மீகாமன்’, சிம்புவுடன் ‘வாலு’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை’, விஷாலுடன் ‘ஆம்பள’, மற்றும் ‘உயிரே உயிரே’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் ரவிதேஜாவுடன் ‘பவர்’ தெலுங்குப் படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.

தென்னிந்தியாவின் வித்யாபாலனாக துடிக்கும் நயன்தாரா


தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
Nayanthara_kahaani_remakeதெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்த பிறகுதான் நயன்தாராவிற்குள் ஒரு மிகப்பெரிய நடிகை இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதுவரை அவரை பிகினி நடிகை பட்டியலில் வைத்திருந்த இயக்குனர்கள் அதையடுத்து அவரை இன்னும் பெரிய ரேஞ்சுக்கு கொண்டு செல்ல நினைத்தனர்.

ஆனால், அந்த நேரம்பார்த்து நான் பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப்போகிறேன் என்று புதிய படங்களை தவிர்த்ததால் சில முக்கியமான படங்களை அப்போது இழந்தார் நயன்தாரா.

அதையடுத்து, பிரபுதேவாவுடனான திருமண விவகாரம் கைகூடாதால் மீண்டும் நடிக்க வந்த நயன்தாராவை, வித்யாபாலன் நடித்த கஹானி இந்தி படத்தின் ரீமேக்கான அனாமிகாவில் நடிக்க வைத்தார் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா.

அதே படம் தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் வெளியானது. ஆனால், இந்தியில் ஹிட்டடித்த அப்படம் தமிழ், தெலுங்கில் சுத்தமாக ஓடவில்லை.

அதனால் அதன்பிறகு நயன்தாராவை தென்னிந்தியாவின் வித்யாபாலனாக கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைத்த இயக்குனர்கள் பின்வாங்கி விட்டனர்.

இருப்பினும், இப்போது தன்னை டைட்டீல் வேடங்களில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டிருந்த அந்த இயக்குனர்களுக்கு மீண்டும் அழைப்பு விட்டு வருகிறாராம் நயன்தாரா. தென்னிந்தியாவின் வித்யாபாலனாகி விட வேண்டும் என்ற துடிப்பு முன்பை விட அவரிடத்தில் இப்போது இன்னும் அதிகமாகி உள்ளதாம்

சிகரம் தொடு படத்தில் பெண்களை பேய், பிசாசு என்று கிண்டல் செய்யும் காமெடியன்!


தூங்காநகரம் படத்தை இயக்கிய கெளரவ் தற்போது இயக்கியுள்ள படம் சிகரம்தொடு. ஏடிஎம் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் முதல் பாதியில் காமெடியாகவும், இரண்டாம் பாதியில் சீரியசாகவும் நடித்திருக்கிறார் விக்ரம்பிரபு. அதோடு, அவருடன் முதல் பாதியில் சதீஷ் என்ற காமெடியனும், இரண்டாவது பாதியில் கோவை மகேஷ் நடித்துள்ளனர்.

இதில் முதல் பாதியில் விக்ரம்பிரபுவுடன் நடித்துள்ள சதீஷ், சந்தானத்தைப் போன்று பெண்களை குறிவைத்து சில கேலியான கிண்டலான டயலாக்குகளை பேசி நடித்திருக்கிறார். முக்கியமாக, ஒரு காட்சியில் பொண்ணுங்களை ஏன் பேபின்னு சொல்றோம்னு தெரியுமா? என்று விக்ரம்பிரபுவைப் பார்த்து சொல்பவர், பே-ன்னா பேய், பி-ன்னா பிசாசு என்று சொல்வார்.

இதை கதைப்படி அவர் தமாசாக சொன்னாலும், சமீபகாலமாக பெண்களை ஏதாவது டபுள் மீனிங்கில் கிண்டல் செய்தால் வரிந்து கட்டும் பெண்கள் அமைப்புகளின் காதில் இந்த டயலாக்குகள் விழுந்தால், கொடி பிடித்து விடுவார்கள் என்று தெரிகிறது. இதுமட்டுமின்றி இதே படத்தில் இன்னும் பல அதிரடியான கேலியான காமெடி டயலாக்குகள் படம் முழுக்க தெளிக்கப்பட்டுள்ளதாம்.

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் சாதனை காட்சி


பரத்தின் 25-ஆவது படம் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி. கவிதாலயாவின் தயாரிப்பில் பரத் நடித்துள்ள இப்படம் இம்மாதம் 22-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நந்திதா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், கருணாகரன், சாம்ஸ் உட்பட கிட்டத்தட்ட 22 காமெடி, குணச்சித்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தை இயக்கியிருக்கும் ரவிச்சந்திரன் படம் குறித்து, இது ஒரு முழுநீள காமெடி படம் என்றாலும் இதில் சித்த மருத்துவம் குறித்த நல்ல ஒரு மெசேஜும் இருக்கிறது. என்று படம் தொடங்கிய நாள் முதலே கூறி வருகிறார். ஆனாலும் அவர் சொல்வதை சித்த மருத்துவர்கள் நம்பத் தயாராக இல்லை.

சித்த வைத்தியரின் கதை என்பதை வைத்தும், இது ஒரு காமெடி படம் என்பதை வைத்தும் இப்படத்தில் சித்த வைத்தியம் தொழில் செய்பவர்களை அசிங்கப்படுத்தி இருப்பார்களோ என்ற சந்தேகத்தில் உள்ளனர். அப்படி ஏதேனும் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் இருந்தால் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்துக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் ஒரு காட்சியில் சத்தமில்லாமல் ஒரு சதனையை செய்திருக்கிறார்கள். அதாவது ஒரு காட்சியில் பரத்துடன் 22 காமெடி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள அந்தக் காட்சி படம் பார்ப்போரை நீண்ட நேரம் சிரிக்க வைக்கும் வகையில் ஹைலைட் காட்சியாக அமைந்திருக்கிறது என்கிறார் இயக்குநர்.

அரை நிர்வாண போஸ் கொடுத்த சார்மி!


தற்போதைய இந்திய நடிகைகளில் ஆபாச போஸ் கொடுத்து பரபரப்பு தீயை அவ்வப்போது பத்த வைத்து வருபவர் ஸ்ருதிஹாசன். தான் நடிக்கும் சினிமாக்களில் மட்டுமின்றி, பெமினா உள்ளிட்ட சில புத்தகங்களின் அட்டைப்படங்களிலும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்.

இந்த பட்டியலில் இப்போது தெலுங்கு நடிகை சார்மியும் சேர்ந்துள்ளார். தமிழில் சிம்புவுடன் காதல் அழிவதில்லை படத்தில் நடித்த சார்மி, அதையடுத்து தெலுங்குக்கு சென்று ஆபாசத்தின் எல்லையை தொட்டார். இதனால் அவர் நடித்த சில படங்களுக்கு எதிராக ஆந்திராவில் உள்ள பெண்கள அமைப்புகளும் கொடிபிடித்து வந்தன.

இநத நிலையில், தற்போது தெலுங்கில் தயாராகும் பாலிவுட் குயின் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் சார்மி, தற்போது ஒரு காலண்டர் அட்டை படத்திற்காக அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் வெளியானதில் இருந்து ஆந்திராவில் சர்ச்சையாகி உள்ளதாம்.

ஆனால், வழக்கம்போல் எனக்கும், அதற்கும் எந்தசம்பந்தமும் இல்லை என்பது போல் எந்த மீடியாக்களின் கண்ணிலும் சிக்காமல் எஸ்கேப்பாகி வரும் சார்மி, அந்த காலண்டருக்கு போஸ் கொடுக்க பல கோடிகளை சன்மானமாக பெற்றிருப்பதாகவும் செய்தி பரவியுள்ளது.

ஒரே படத்தில் 5 பாடல்கள் பாடிய ஹீரோ!


1பிரபலமான ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் படத்தில் ஒரு பாடல் பாடுவது இப்போது பேஷன். புதுமுக ஹீரோக்களும் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். கபடம் என்ற படத்தில் நடிக்கும் ஹீரோ சச்சின் அந்தப் படத்தில் 5 பாடல்களை பாடியுள்ளார்.

இதுபற்றி படத்தின் இயக்குனர் ஜோதி முருகன் கூறியதாவது: நான் ராதாமோகன், செல்வராகன், சிம்புதேவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறேன். சோழா பொன்னுரங்கம் தயாரிக்கிறார். கடந்த ஒரு வருடமாக படத்தை வெளியிட போராடி வருகிறோம். இப்போது வருகிற 22ந் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

உலகத்தில் பிறந்த எல்லா மனிதனிடமும் கபடம் இருக்கிறது. இல்லை என்று சொன்னால் அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம். திருமணம் நிச்சயக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க நினைக்கிறாங்க.

அவுங்க பழகும்போது திடீர்னு ஒரு கொலை நடந்து போகுது. ஒருத்தர் மேல ஒருத்தருக்கு சந்தேகம் வருது. இதுல கபட நாடகம் ஆடுறது யாருங்றதுதான் கதை. ஹீரோ சச்சின் அடிப்படையில் ஒரு கீ போர்ட் பிளேயர் அதனால் படத்தில் வரும் ஆண் பாடும் 5 பாடல்களையும் அவரே பாடியிருக்கிறார்.

ஹீரோயினாக அங்கனாராய் நடிக்கிறார். வன்முறை காட்சியோ, ஆபாச காட்சியோ படத்தில் இல்லை. இருந்தாலும் கதை காண்டவர்சியாக இருப்பதாக சொல்லி படத்துக்க தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது என்கிறார் இயக்குனர் ஜோதி முருகன்.

சம்பளம் கேட்காமல் நடித்த அனன்யா


மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அறிமுகமான படம் இரவும் பகலும். இப்போது அதே தலைப்பில் படம் இயக்கி வருகிறார் ஏ.வெங்கடேஷின் உதவியாளர் பாலஸ்ரீராம். குரு காணிக்கையாக ஏ.வெங்கடேஷை போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்திருக்கிறார். அங்காடி தெரு மகேஷ் ஹீரோ, அனன்யா ஹீரோயின். ஜெகன் காமெடி செய்கிறார்.

“பகலில் என்ஜீனியரிங் படிக்கும் ஹீரோ இரவில் திருடனாக இருக்கிறார். அவர் திருடுவது எதற்காக அதனால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது படத்தின் கதை. படத்தின் கதையை அனன்யாவிடம் சொன்னதும் சம்பளம் பற்றி பேசாமலேயே நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஒரு ரூபாய் மட்டும் அடவான்ஸ் பெற்றுக் கொண்டார். நடித்து முடித்தும் நாங்கள் கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொண்டார். இதில் அனன்யாவின் நடிப்பு பேசப்படுவதாக இருக்கும். நாமக்கல், தொட்டியம் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரிதான் கதையின் களம்” என்கிறார் இயக்குனர் பாலஸ்ரீராம்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் முன்னோட்டம்



பார்த்திபன் எழுதி இயக்கியிருக்கும் படம், கதை திரைக்கதை வசனம் இயக்கம். கதையே இல்லாத படம் என்று பார்த்திபன் அறிவித்த நாள் முதல் இந்தப் படத்தின் மீது பலருக்கு ஆவல்.



தமிழ் சினிமாவில் நடக்கும் கதை விவாதத்தைதான் பார்த்திபன் படமாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. கதை விவாதத்தின் போது, இந்த காட்சியில் இந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள் அல்லவா. அப்போது அந்தக் காட்சியில் குறிப்பிட்ட நடிகரே தோன்றி நடிப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

 

ஆர்யா, விஷால், அமலா பால், தாப்ஸி, பிரகாஷ்ராஜ், விமல் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யாருமே பணம் வாங்காமல் நடித்துள்ளனர். பார்த்திபன் இதில் நடிக்கவில்லை என்பது படத்தின் இன்னொரு பலம்.

 

அல்போன்ஸ் ஜோ‌சப், சரத், விஜய் ஆண்டனி, எஸ்.தமன் என்று நான்கு பேர் இசையமைத்துள்ளனர். மதன் கார்க்கி, நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

ஆகஸ்ட் 15 படம் திரைக்கு வருகிறது.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies