அஞ்சான்’ படத்தின் இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த வியாழனன்று ‘யூ டியூப்’ வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நான்கு நாட்களுக்குள் சுமார் 11 லட்சம் பார்வையாளர்கள் அந்த டிரைலரைப் பார்த்துள்ளனர்.
சூர்யா நடித்து வெளிவந்த மற்ற எந்த படங்களையும் விட இந்த ‘அஞ்சான்’ படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. ரஜினிக்குப் பிறகு விஜய், அஜித்திற்குத்தான் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்வார்கள். ஆனால், அவர்கள் படங்கள் ஏற்படுத்தாத ஒரு தாக்கத்தை இந்த ‘அஞ்சான்’ படம் இணைய தளங்களில் ஏற்படுத்தியிருப்பது ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கடந்த மாதம் வெளியான பாடல்கள் அதிரடியாக அமைந்து படத்திற்கு நல்ல விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது.
‘அஞ்சான்’ படத்தின் டீஸர் கடந்த மாதம் 5ம் தேதி வெளியாகி ஒரே நாளிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை ரசிக்க வைத்து, இரண்டு நாட்களில் அது 20 லட்சத்தைத் தொட்டது. இதுவரை ‘அஞ்சான்’ டீஸரை 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.
இப்போது ‘அஞ்சான்’ படத்தின் டிரைலருக்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. யூ டியுப் இணைய தளம் மூலம் இதுவரை ‘அஞ்சான்’ டீஸர் மற்றும் டிரைலரை பார்த்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை இணையதள வடிவிலான படத்தின் பிரமோஷனை ‘அஞ்சான்’ படம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அஞ்சான்’ – சென்னையில் மட்டும் 40 தியேட்டர்களில் ரிலீஸ்ஸ
டிவி மோஷன் பிக்சர்ஸ், திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால் மற்றும் பலர் நடித்துள்ள ‘அஞ்சான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று வெளியாக உள்ளது.
இப்படம் சென்னையில் மட்டும் 40 தியேட்டர்களில் வெளியாகிறது. சென்னைப் புறநகரில் 21 தியேட்டர்களில் வெளியாகிறது. சென்னையில் ஒரே வளாகத்தில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் வெளியாகிறது. சத்யம் காம்ப்ளக்சில் இரண்டு தியேட்டர்களிலும், எஸ்கேப் வளாகத்தில் மூன்று , ஐநாக்ஸில் மூன்று , உட்லண்ட்ஸ்-ல் இரண்டு , ஆல்பட்-ல் இரண்டு , அபிராமி வளாகத்தில் நான்கு , சங்கம் வளாகத்தில் இரண்டு , பிவிஆர் வளாகத்தில் மூன்று, பெரம்பூர் எஸ் 2 வளாகத்தில் மூன்று, கமலா வளாகத்தில் 2, உதயம் காம்பள்க்ஸில் மூன்று, ஐநாக்ஸ் நேஷனல் வளாகத்தில் நான்கு என மொத்தம் 40 தியேட்டர்களில் வெளியாகிறது.
சென்னையைப் பொறுத்தவரை அபிராமி மெகா மால் இப்படத்தை வெளியிடுகிறது. ‘அஞ்சான்’ வெளியீட்டைப் பற்றி அபிராமி மெகா மால் – அபிராமி ராமநாதன் கூறுகையில், “எங்களது நிறுவனம் ‘சிவாஜி’ திரைப்படத்தை சென்னையில் உள்ள 18 தியேட்டர்களில் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பலரும் அம்மாதிரியே படத்தை வெளியிட்டு வருகிறார்கள். அவரவர் வீட்டுக்கு அருகில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் படத்தை வெளியிட முடிவு செய்து இந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் ‘அஞ்சான்’ படத்தை ரிலீஸ் செய்கிறோம், ” என்கிறார்.
இதன் மூலம் ‘அஞ்சான்’ படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே நல்ல வசூலை அள்ளிவிட முடியும் என திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஷால், சித்தார்த் பாராட்டில் சௌந்தரராஜாஸ
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜிகர்தண்டா’ படத்தில் வளர்ந்து வரும் நடிகர் சௌந்தரராஜா ‘திண்டுக்கல் பொன்ராம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் சௌந்தரராஜா. அதோடு, விஷால், சித்தார்த் பாராட்டியது அவரை இன்னும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
இந்த மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொண்டார் சௌந்தரராஜாஸ
“ஜிகர்தண்டா படம் இவ்ளோ பெரிய வெற்றி பெற மீடியா முக்கியமான காரணம். ஜிகர்தண்டா படத்தையும், அதில் என் கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டு பாராட்டி கௌரவித்த அத்தனை மீடியா நண்பர்களுக்கும், அத்தனை மீடியாக்களுக்கும் ஜிகர்தண்டா குழுவில் ஒருவனாக நன்றிகளை தெரிவிக்கிறேன்.
ஜிகர்தண்டா படம் பிரிமியர் ஷோவில் என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டினார் படத்தின் ஹீரோ, சித்தார்த். விஷால் சார் ஹைதராபாத்தில் படம் பார்த்துவிட்டு, சௌந்தர் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு, நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க என்று வாட்ஸ் ஆப்பில் மெசெஜ் பண்ணார். வளர்ந்து வரும் நடிகனை பெருந்தன்மையோடு பாராட்டிய விஷால் சாருக்கும், சித்தார்த் சாருக்கும் என் சந்தோசம் நிறைந்த நன்றிகள்.
எப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கும் அண்ணன், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், நண்பர்கள் விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்பட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பின் நன்றிகள்.
‘சுந்தர பாண்டியன்’-ல் ஆரம்பித்து ‘‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், அதிதி,” என்று தொடர்ந்த என் பயணத்தில் ‘ஜிகர்தண்டா’ முக்கியமான படம். இப்போது, எல்.ஜி.ரவிச்சந்தர் சார் இயக்கும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்தில் பரத் சாரின் நண்பனாகவும், ஹரி சார் இயக்கும் ‘பூஜை’ படத்தில் விஷால் சாரின் நண்பனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறேன்.
என் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும் அனைத்து மீடியா நண்பர்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்,” என்றார் சௌந்தரராஜா
மீரா ஜாஸ்மின் நடிக்கும் ‘விஞ்ஞானி’ஸ
பார்த்திஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பார்த்தி இயக்கி நாயகனாக நடிக்கும் படம் ‘விஞ்ஞானி’. இந்தப் படத்தில் அவருடைய ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.
தன்னுடைய சிறப்பான நடிப்புத் திறமையால் நன்றாக அறியப்பட்ட மீரா ஜாஸ்மின் தற்போது அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படம் விஞ்ஞானி. விஞ்ஞானி திரைப்படத்தில் அவருடைய நடிப்பாற்றலை மேலும் சிறப்பாக வெளிப்படுத்தும் விதத்தில் காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குனர். பார்த்தி, சினிமாத் துறையில் சாதனை படைக்கும் நோக்கத்தில் தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சித் துறையிலிருந்து விலகி வருகிறார்.
விஞ்ஞானி, ஒரு சைண்டிஃபிக் திரில்லர் வகையிலான திரைப்படம். ஒரு இளம் விஞ்ஞானி தந்திரமாக விரிக்கப்பட்ட திருமண வலையில் சிக்கிக்கொள்கிறார். அதனால் அவருடைய வாழ்க்கையே மாறிவிடுகிறது. அந்த விஞ்ஞானி உலகின் மிகப் பெரிய பிரச்சினைக்கு தீர்வு காணும் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். அப்போது நடைபெறும் அவருடைய திருமணம் அவருடைய குறிக்கோளை எவ்வாறு பாதிக்கிறதுஸ? அது அவரது ஆய்வுக்கு சாதகமா பாதகமாஸ?! என்பதுதான் படத்தின் பரபரப்பான கதை. ஆக்ஷன், திரில்லர், கிளாமர் மற்றும் காமெடி கலந்த ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
பாடல்கள் வெளிநாடுகளிலும், கண்கவர் ஸ்டுடியோ செட்டிங்களிலும், இந்தியாவின் அழகான பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அதிக பொருட்செலவில் அமைக்கப்பட்ட ஆய்வுக்கூடங்கள் இத் திரைப்படத்தைப் பார்க்கும் மாணவர்களுக்கு பாடமாகவும், பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடிய வகையிலும் இருக்கும் என்கிறார் இயக்குனர் பார்த்தி
எவன் கருவையும் களவாடவில்லைஸ. – பார்த்திபன்
பார்த்திபன் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 15ம் தேதியன்று வெளியாக உள்ளது.
இந்த படத்தின் வெளியீட்டைப் பற்றி பார்த்திபன் அவருடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான இரண்டு படங்களான ‘ஜிகர்தண்டா, சரபம்’ ஆகிய இரண்டு படங்களும் கொரியன், ஜப்பான் படங்களின் காப்பி என பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில் அவருடைய பதிவில் “அந்நியன் எவனின் கருவையும் களவாடாமல்” என்று அவர் பாணியில் குறிப்பிட்டுள்ளது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.
அவருடைய பதிவு இதோஸ.
“ஸ்ஸ்ஸ்! அப்பாடா ஸ. எப்படா? ரிலீஸ் என முடிவாகி (ஆகஸ்ட் 15) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளை ஒப்பந்தம் செய்தல், விளம்பர தீப்பந்தங்கள் ஏற்றுதல், வியாபார தந்திரங்களுக்குள் சிக்காமல் # ktvi இளம் ரசிகர்களின் இமைகளுக்கும் கண்களுக்கும் இடையே சிம் கார்டாய் இணைப்பது எப்படி? ஸ
ஆள் வைத்தாவது நம் மூச்சை வாங்க வைத்துவிட்டு, சற்று நேரம் நாம் ஓய்வெடுக்கலாமா என யோசிக்க வைத்தது சில நாட்களின் வேலைப் பளு.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆயிரம் பேரை வாழ வைத்தாலும் ‘என்னை வாழ வைக்கும்’ என ரசிகர்களை குறிப்பிடுவார். அப்படி அந்த மகானே குறிப்பிட்ட ரசிகர்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் ‘என்னை வாழ வைக்க’ஸ
அது, ஆகஸ்ட் 15-இல் வெளியாகும் என் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை அன்றே பார்த்து வெற்றியாக்குவது!
ஏன்?ஸ அந்நியன் எவனின் கருவையும் களவாடாமல், இப்படி இரவெல்லாம் கண் விழித்து கவனமாய் செதுக்கிய ஒரு ‘ஒரிஜினல்’ திரைப்படத்திற்குக் கிடைக்கும் மகத்தான வெற்றியே என்னை உயிர்ப்புர செய்யும்.
எவ்வளவு நாளைக்குதான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?”, என்று அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எதையும் வெளிப்படையாகப் பேசும் பழக்கம் கொண்ட பார்த்திபனின் இந்த பதிவும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை
மாதவன் நடிக்கும் ‘இறுதிச் சுற்று’ஸ
வாயை மூடி பேசவும், காவியத் தலைவன்” போன்ற படங்களை வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த சசிகாந்தின் ‘Y நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தற்போது பிரபல தயாரிப்பாளர் சீ.வீ.குமாரின் திருக்குமரன் எண்டர்டேயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘இறுதிச் சுற்று’.
முதல் முறையாக இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் முதல் படம் இதுவே. மாதவன், நாசர், ரித்திகா, மும்தாஜ் மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் தயாராகிறது.
சுதா கொங்காரா இப்படத்தை இயக்குகிறார். பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ஸ்ரீகாந்த், விஷ்ணு நடித்து வெளியான ‘துரோகி’ படத்தை இயக்கியவர்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சிவா ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கத்தை சந்தானம் கவனிக்கிறார்.
‘இறுதிச் சுற்று’ படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது.
அஜித், விஜய்யின் சாதனையை நெருங்கிவிட்ட தனுஷ்.
சமீபத்தில் ரிலீஸான தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் இவ்வருட ஆரம்பத்தில் வெளியான அஜீத்தின் வீரம், மற்றும் விஜய்யின் ஜில்லா படங்களின் வசூலை நெருங்கிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
தனுஷின் வேலையில்லா பட்டதாரி நான்காவது வாரமாக சென்னை உள்பட பல நகரங்களில் நல்ல வசூலுடன் ஓடுக்கொண்டு இருக்கின்றது. வரும் 15ஆம் தேதி அஞ்சான் திரைப்படம் வெளிவரும் வரையில் எந்த தியேட்டரிலும் படத்தை தூக்க தியேட்டர் அதிபர்கள் விரும்பவில்லை. அஞ்சான் ரிலீஸுக்கு பின்னரும் ஒருசில தியேட்டர்களில் தொடர்ந்து இந்த படம் ஓடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் முதல்முறையாக தனுஷ் படம் ஒன்று விஜய் மற்றும் அஜீத் படங்களில் வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான அஜீத்தின் வீரம் அமெரிக்காவில் $243,955 வசூல் செய்தது. அதேபோல் விஜய்யின் ஜில்லா படம் $230,224 வசூல் செய்தது. இந்நிலையில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி இதுவரை $225,000 வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
நடிகர் போஸ்கியின் டுவிட்டர் ஏற்படுத்திய பரபரப்பு. முன்னணி நடிகர்கள் வருத்தம்.
பிரபல நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான நடிகர் போஸ்கி பெயரில் போலி டுவிட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதன்மூலம் பல முன்னணி நடிகர்களை அவர் கேலி செய்து வருவதாக சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
நடிகர் போஸ்கி ரிலீஸாகும் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் பிரபலம் பெற்றது. இதனை அடிப்படையாக வைத்து அவர் பெயரில் மர்ம நபர் ஒருவர் டுவிட்டரில் போலி கணக்கு ஒன்றை ஆரம்பித்து ரிலீஸாகும் புதிய படங்களை கேலியாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் அதில் நடித்த நடிகர் நடிகைகளை மிகவும் அருவெறுக்கத்தக்க முறையில் விமர்சிப்பது போன்றும் சில வார்த்தைகள் உள்ளன.
இதுகுறித்து முக்கிய நடிகர்கள் சிலர் போஸ்கியிடம் வருத்தம் தெரிவித்து விளக்கம் கேட்டபோதுதான் அவருக்கு தனது பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போலி அக்கவுண்ட் குறித்து தெரியவந்தது.
தான் 25 வருடங்களாக சினிமா துறையில் இருப்பதாகவும் பல முன்னணி நடிகர்களிடம் தான் நட்பு முறையில் உறவு வைத்திருப்பதாகவும், ஆனால் யாரோ ஒரு மர்ம நபர் டுவிட்டரின் போலி கணக்கு மூலம் சிதைத்து வருவதாகவும், இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அஞ்சானுக்கு வரும் கூட்டத்தை விட எனது படத்திற்கு வரும் கூட்டம் அதிகமாக இருக்கும். பார்த்திபன்
சூர்யா, சமந்தா நடித்து பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் அஞ்சான். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவருகிறது. லிங்குசாமி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
பொதுவாக ரஜினி, விஜய், அஜீத் படங்கள் வெளியாகும்போது தியேட்டர் கிடைக்காத காரணத்தால் சிறிய படங்கள் வெளியாவது தள்ளிப்போகும். ஆனால் முதல்முறையாக சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் வெளியாவதை ஒட்டி பல சின்ன பட்ஜெட் திரைப்படங்களில் ரிலீஸ் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்.பார்த்திபன் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தான் இயக்கியுள்ள 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' திரைப்படத்தை அஞ்சான் ரிலீஸாகும் ஆகஸ்ட் 15 அன்றே வெளியிடு அதிரடியாக முடிவு செய்துள்ளார். சூர்யா போன்ற மாஸ் நடிகர் படத்துடன் மோதுவதற்கு எப்படி துணிந்தீர்கள் என டுவிட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள பார்த்திபன், 'சூர்யாவின் படத்திற்கு டிக்கெட் எடுத்து தியேட்டருக்கு செல்பவர்களின் எண்ணிக்கையை விட டிக்கெட் கிடைக்காமல் வெளியே காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அவ்வாறு டிக்கெட் கிடைக்காதவர்கள் அனைவரும் எனது படத்திற்கு வந்தாலே எனக்கு போதும். இதன்படி பார்த்தால் எனது படத்திற்குத்தான் அவர் படத்தை விட அதிக கூட்டம் வரும் எ