நடிகை கங்கனா ரனாவத்துக்கு ரூ.30 கோடி சம்பளம்?நிர்வாண போஸ் கொடுத்த விவகாரம் செய்தித் துளிகள்

04 Aug,2014
 


இத்தாலி படத்தில் நடிக்கும் நடிகை கங்கனா ரனாவத்துக்கு ரூ.30 கோடி சம்பளம்? திரையுலகம் அதிர்ச்சி


தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்ற திரைப்படத்திலும், பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான குவீன் திரைப்படம் உள்பட பல வெற்றி படங்களில் நடித்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு இத்தாலி படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இத்தாலியின் மிகப்பெரிய இயக்குனர் ஒருவர் இயக்கவிருக்கும் ஹாலிவுட் திரைப்படத்தில் கங்கனா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்காக இத்தாலி நிறுவனம் கங்கனாவுக்கு அளித்துள்ள சம்பளம் ரூ.30 கோடி என்று கூறப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்டு இந்தியாவின் முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாலிவுட்டில் ‘Katti Batti’ என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் கங்கனா ரனாவத், இத்தாலி படத்திற்காக பெருமளவு கால்ஷிட்டை கொடுத்துவிட்டதால் இந்த படத்தில் இருந்து விலகிவிடுவார் என்று கூறப்படுகிறது. இத்தாலியன் இயக்குனரின் வேண்டுகோளுக்கு இணங்கி சுமார் 18 மாதங்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்துவிட்டார். இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இத்தாலியில் தங்குவதற்கு வீடு ஒன்றையும் ஏற்பாடு செய்துவிட்டதாகவும், இன்னும் ஒன்றரை வருடத்திற்கு கங்கனாவை இந்திய மொழி திரைப்படங்களில் பார்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

எந்திரன் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் ரூ.27 கோடிதான் இதுவரை இந்தியாவில் சினிமா நடிகர் ஒருவர் வாங்கிய மிகப்பெரிய சம்பளமாக கருதப்பட்டது. இந்த சாதனையை கங்கனா ரனாவத் முறியடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கங்கனா ரனாவத் தரப்பில் இருந்து இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி படத்தில் தான் நடிப்பது உண்மைதான் என்றும், ஆனால் சம்பளம் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நிர்வாண போஸ் கொடுத்த விவகாரம். அமீர்கான் மீது கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு.


அமீர்கான் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் பி.கே திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. நிர்வாணமாக அமீர்கான் நின்றிருப்பது போன்ற போஸ்டர் பலவித சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் அமீர்கான் மற்றும் பி.கே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இதனால் பாலிவுட் படவுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் வெளியான அமீர்கானின் பி.கே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அன்றைய தினமே மும்பை மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவின் அனைத்து பிரபல நாளிதழ்களிலும் முழு பக்கத்தில் அமிர்கானில் நிர்வாண போஸ் வெளிவந்திருப்பதால், திரையுலக ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் படிக்கும் செய்தித்தாள்களில் நிர்வாண போஸ் கொடுத்து, பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை கலப்பதாக அமீர்கான் மீது புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் அநாகரீகமாக போஸ் கொடுத்துள்ளதாக அமீர்கான் மீது வழக்கு தொடுத்துள்ளார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது அவர் புகார் கூறி மனுதாக்கல் செய்துள்ளார்.ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
ராஜு ஹிரானி இயக்கிய பி.கே படத்தில் அமீர்கான், அனுஷ்கா சர்மா, சுசாந்த்சிங் ராஜ்புத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக திரைக்கு வெளியாக உள்ளது.

சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்து அஞ்சலிதான் குத்தாட்டத்திற்கு பொருத்தமானவர். ஆந்திர வி.ஐ.பியின் சர்ச்சை பேச்சு

 

நடிகை அஞ்சலி இடையில் சிலகாலம் பிரச்சனை காரணமாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தாலும், தற்போது ஆந்திராவில் தனது பழைய மார்க்கெட்டை கெட்டியாக பிடித்துக்கொண்டார். தற்போது மகேஷ்பாபு, வெங்கடேஷ், சமந்தா ஆகியோர்களுடன் அஞ்சலி Seetamma Vakitlo Sirimalle Chett என்ற படத்தில் நடித்து வருகிறார். சீனியர் நடிகரான வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்தாலும் அஞ்சலிக்கு நல்ல வெயிட்டான கேரக்டர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள ஒரு பிரபல இயக்குனர் அஞ்சலியை பற்றி கூறும்போது, அஞ்சலி மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போல கவர்ச்சியாக உள்ளார். இவர் மட்டும் குத்தாட்ட நடிகையாக மாறினால் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். அஞ்சலியின் தனிச்சிறப்பே பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் அவரது முக அமைப்பு மற்றும் இயல்பான குடும்பப்பாங்கான நடிப்புதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். உண்மை இவ்வாறு இருக்கும்போது அவரை சில்க்  ஸ்மிதாவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளதால் அந்தநபர் மீது அஞ்சலி கடும் ஆத்திரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

சிங்கம் 2 படத்தில் அஞ்சலி ஆடிய குத்தாட்டத்தை பார்த்துதான் தான் அவ்வாறு ஒரு கருத்தை கூறியதாகவும், ஒரு படத்தில் நடித்து சம்பாதிக்கும் பணத்தை இரண்டே இரண்டு குத்தாட்டத்தில் சம்பாதித்து விடலாம் என்ற அறிவுரையைத்தான் அஞ்சலிக்கு கூறியதாக அந்த வில்லங்க வி.ஐ.பி தனது கருத்துக்கு விளக்கம் கூறியுள்ளார். இது அஞ்சலிக்கு எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றினால் போல கடும் ஆத்திரத்தை கிளறியுள்ளது.

விஜய் சேதுபதியை அனைவரும் விரும்ப என்ன காரணம். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்


ஆரோகணம் படத்தை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் 'நெருங்கி வா முத்தமிடாதே'. இந்த படத்திற்கு ஹீரோவை செலக்ட்ச் செய்த தனது வித்தியாசமான அனுபவத்தை அவர் பிரபல இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பேட்டியில் கூறும்போது, "தனது படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரிடம் இந்த படத்திற்கு பொருத்தமான ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டர்களுக்கு நடிகர்களை தேர்வு செய்யும்படி கூறியிருந்தேன். சில நாட்கள் கழித்து வில்லன் கேரக்டருக்கு ஒரு இளைஞனை என்னிடம் அனுப்பினார். ஆனால் அந்த இளைஞர் எனது படத்தின் ஹீரோவுக்கு பொருத்தமானவர் என என் மனதிற்கு பட்டதால் உடனே அவரை ஹீரோவாக்கிவிட்டேன். வில்லனாக நடிக்க வந்து ஹீரோவானது அவரது தலையெழுத்து என்றார்.

மேலும் அவர் கூறுகையில் தனுஷ் மற்றும் சசிகுமாரை எல்லோருக்கும் ஏன் பிடிக்கின்றது என்றால் அவர்கள் இருவருக்கும் தமிழரின் முகம் இயற்கையிலேயே அமைந்துள்ளது. அதுபோல விஜய் சேதுபதி நம்ம வீட்டு பிள்ளை போல ரொம்ப இயல்பாக இருப்பதால் நான் உள்பட அவரை அனைவரும் விரும்புகின்றனர். இவர்களை போல தமிழ் முகமும், நம்ம வீட்டு பிள்ளை போன்ற தன்மையும் எனது ஹீரோ ஷபீருக்கு இருப்பதாக நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்

தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ரூ.3 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை. கோலிவுட் அதிர்ச்சி



தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படம் தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியில் தமிழில் நடித்த தனுஷும், தெலுங்கில் அல்லு அர்ஜூனும் நடிக்க இருக்கின்றனர்.

தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி நடித்த வேலையில்லா பட்டதாரி படம் தமிழில் மாபெரும் வசூலை குவித்தது. தனது சொந்தப்படமும், 25வது படமுமான இந்த படத்தின் வெற்றி தனுஷை மிகப்பெரிய இடத்தில் கொண்டுபோய் சேர்த்துவிட்டது. இந்த படத்தை இந்தியில் தனுஷே ரீமேக் செய்து நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு உரிமையை கேட்டு தனுஷிடம் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனா அணுகியுள்ளார். அல்லு அர்ஜுனா நடித்த ஆர்யா என்ற படத்தை ரீமேக் செய்து 'குட்டி' என்ற படத்தில் தனுஷ் நடித்தார். இதனால் தற்போது அல்லு அர்ஜுனாவுக்கு விஐபி படத்தில் தெலுங்கு உரிமையை அல்லுவுக்கு கொடுக்க தனுஷ் சம்மதித்து உள்ளார்.

வேலையில்லா பட்டதாரி இந்தி ரீமேக்கில் தனுஷுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்த அலியா பட் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதால் இப்போதே இந்த படத்திற்கு பாலிவுட்டில் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. ஆனால் தனுஷுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் கேட்டுள்ளார். தனுஷ் தரப்பில் இருந்து எவ்வித மறுப்பும் இன்றி அவர் கேட்ட தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது அனேகன், மற்றும் பால்கியின் படங்களில் பிசியாக இருக்கும் தனுஷ், இந்த இரண்டு படங்களை முடித்தவுடன் விஐபி இந்தி ரீமேக்கில் நடிப்பார் என தெரிகிறது.


18ம் தேதி முதல் வீட்டுக்குள் வருகிறார் டாக்டர் அமலா!


1980களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை அமலா. டி.ராஜேந்தரின் மைதிலி என்னை காதலி படத்தில் அறிமுகமான அமலா அதன்பிறகு கமல், ரஜினி, கார்த்திக், பிரபு, என அன்றிருந்த அத்தனை ஹீரோக்களுடனும் நடித்தார்.

தெலுங்கு படங்களில் நடித்தபோது நாகார்ஜூனாவை காதலித்து 1992ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவை விட்டு முற்றிலும் ஒதுங்கினார். புளூகிராஸ் அமைப்பில் இணைந்து பிராணிகள் நலனுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். தற்போது அவர் மகன் அகில் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

அமலா சினிமாவில் இருந்து விலகினாலும் அவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. அதனை அவர் தீவிரமாக மறுத்து வந்தார்.

தற்போது யாரும் எதிர்பாராத வகையில் உயிர்மெய் என்ற தமிழ் சீரியலில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதில் அமலா டாக்டராக நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. ஐதராபாத்திலிருந்து பறந்து வந்து நடித்து கொடுத்து விட்டு வந்த வேகத்தில் திரும்பி விடுகிறார்.

தான் உயிர்மெய் சீரியலில் நடிப்பது ஏன் என்பதற்கு அமலா கொடுத்துள்ள விளக்கம் இது: திருமணத்துக்கு பிறகு நடிக்கிற எந்த ஐடியாவும் என்கிட்ட இல்ல. இனி சினிமா வேண்டாம்.
நல்ல அம்மா, நல்ல மனையியாக வாழ்ந்தால் போதும் புளூகிராஸ் மூலம் முடிந்ததை செய்தால் போதும் என்று இருந்தேன்.

சமீபத்தில் சேகர்காமுலா வற்புறுத்திக் கேட்டதால் லைஃப் இஸ் பியூட்டிபுல் படத்தில் மட்டும் நடித்தேன். உயிர்மெய் சீரியல் தயாரிப்பாளர் ரமேஷ் என்னை சந்தித்து இது மருத்துவமனை டாக்டர்கள் பற்றிய கதை.

அதில் நீங்க நடிச்சா உங்க மூலம் மக்களுக்கு சில மேசேஜ்களை சொல்ல முடியும். நீங்க சொன்னா மக்கள் நம்புவாங்கன்னு சொன்னார். சீரியல்ல இருந்து சமூக அக்கறையும் பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்கிறார் அமலா.

உயிர்மெய் தொடர் வருகிற 18ந் தேதி முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இனி திங்கள் முதல் வெள்ளி வரை நம் வீட்டுக்குள் வருகிறார் டாக்டர் அமலா.


கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: கவர்னர் வழங்கினார்


தமிழ் வர்த்தக சங்கம் என்ற அமைப்பும், சோழநாச்சியார் பவுண்டேஷன் என்ற அமைப்பும் இணைந்து உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. இதற்கான விழா மயிலாப்பூர் ஏவிஎம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது.

விழாவில் தமிழக கவர்னர் ரோசையா கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: எனக்கு சினிமா பற்றி அதிகமாக தெரியாது. அதிகமாக சினிமா பார்ப்பதும் இல்லை.
என் தாய்மொழியான தெலுங்கில் வரும் சில படங்களை பார்ப்பதுண்டு. கமல்ஹாசன் நடித்த தெலுங்கு படங்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன். அவை திரும்ப திரும்ப பார்க்க தூண்டுபவையாக இருக்கும் சில படங்களை மூன்று முறை பார்த்திருக்கிறேன்.
கமல்ஹாசனுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர் இன்னும் அதிக படங்களில் நடித்து, அதிக சாதனை படைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு கவர்னர் பேசினார்.
விருதை பெற்றுக் கொண்டு கமல்ஹாசன் பேசியதாவது: நான் தனி மனிதன் அல்ல. எனக்கு கற்றுக்கொடுத்த வாத்தியார்களின் கலவை நான். கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், ஆர்.சி சக்தி உள்ளிட்ட ஆசியர்களிடம் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அதைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கீங்களே வாங்க உங்கள் சாதனையை பாராட்டி விருது தருகிறோம் என்று நீங்கள் அழைத்து வரவில்லை. இந்த விழாவுக்கு கூட எனது ஷூட்டிங்கை நிறுத்திவிட்டுத்தான் வந்திருக்கிறேன். அந்த வாய்ப்பை வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி.
இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்கிற உறுதியை வாங்கிக் கொண்டு இந்த விருதை வழங்கியிருப்பதாக நினைக்கிறார். அதையே நானும் செய்வேன்.இவ்வாறு கமலஹாசன் பேசினார்.
விழாவில் பிரிட்டீஷ் துணை கமிஷனர் பரத்ஜோஷி, இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், ஆர்.சி.சக்தி ஆகியோர் பேசினார்கள். முன்னதாக தமிழ் வர்த்தக சபை தலைவர் சோழநாச்சியார் ராஜசேகர் வரவேற்க, முடிவில் நீதிபதி ஜெகதீசன் நன்றி கூறினார்

சிவகார்த்திகேயன் ஜோடியாகிறார் லட்சுமி மேனன்

சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் படம் ரஜினி முருகன். இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகராகவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் உள்ளூர் வெள்ளை வேட்டி பார்ட்டியாகவும் நடிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் ஹீரோயின் கேரக்டருக்கு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. குடிதண்ணீர் பிடிக்கும் இடத்திலிருந்து சினிமா தியேட்டர் கவுண்டர் வரைக்கும் யாரிடமும் சண்டைக்கு நிற்கும் வாயாடி பெண் கேரக்டர். சுமாரான அழகு கொண்ட லோக்கல் பெண் கேரக்டர். எதற்கெடுத்தாலும் சேலையை வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு திரிகிற கேரக்டர்.

கெட்ட வார்த்தைகளை சரளமாக அள்ளிவிடுகிற பெண். இந்த கேரக்டரில் நடிக்க ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஜிகிர்தண்டாவில் சேலை திருடும் பெண்ணாக நடிதிருந்த லட்சுமிமேனனைப் பார்த்துவிட்டு அவரையே ஹீரோயினாக முடிவு செய்து விட்டார்கள்.

இதற்கு லட்சுமிமேனனும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கிறது. இதில் சிவாகர்த்திகேயன், சூரி, லட்சுமிமேனன் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். லட்சுமிமேனன் சிவகார்த்திகேயனுடன் இணையும் முதல் படம் இது.

காமெடி ஸ்கிரிப்ட்டை ஆக்சனாக மாற்றச்சொல்லிய ஆர்யா!


ஆர்யா சினிமாவில் அறிமுகமானபோது சில படங்களில் ரொமான்டிக் ஹீரோவாகத்தான் நடிக்க விரும்ப



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies