.
இளம் நடிகர்கள் மத்தியில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது என்ன தெரியுமா? விஜய்யின் போன் அழைப்பு பற்றிதான் ஒருவருக்கொருவர் ஆச்சர்யமாக பேசிக்கொள்கிறார்கள். அதாவது, ஒரு
வாரப்பத்திரிகையினால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டார் விஜய். அதன் அடுத்த கட்டமாக அந்தப் பட்டத்தை அவருக்கு வழங்குவதற்காக மதுரையில் பிரம்மாண்ட விழா நடத்தவும் இருக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி விஜய் சார்பாக நடிகர் நடிகைகள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். விஜய்யை வைத்து தேடினேன் வந்தது, வசீகரா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் செல்வபாரதியிடம் நடிகர் நடிகைகளை மதுரைக்கு அழைத்து வரும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் விஜய். செல்வபாரதி தலைமையில் விஜய்யின் பி.ஆர்.ஓ. உள்ளிட்ட சிலர் தினமும் நடிகர் நடிகைகளை சந்தித்து விஜய்யின் அழைப்பை தெரியப்படுத்தி அவர்களை மதுரைக்கு வரும்படி அழைத்து வருகின்றனர்.
யார் யாரெல்லாம் வருகையை உறுதி செய்துள்ளனர் என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாராம் விஜய். வருவதற்கு யார் யார் எல்லாம் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதையம் கேட்டுத் தெரிந்து கொண்டு, தன் பி.ஆர்.ஓ.வின் செல்போனில் இருந்தே அவர்களுக்கு போன் போட்டு பேசுகிறாராம் விஜய். மதுரைக்கு அவசியம் வரணும் ப்ரோ..! என்று அன்புடன் அழைப்பு விடுக்கிறாராம். விஜய்யின் போன் அழைப்பைக் கேட்டு வளரும் நடிகர்கர் புல்லரித்துப்போய் இருக்கிறார்கள்.
மாகாபா ஆனந்த் நாயகனாக நடிக்கும் ‘அட்டி’ஸ
அரிதுஅரிது, ஈசா” ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ள E 5 என்டர்டெயின்மென்ட் ஜெ. ஜெயகிருஷ்ணன், இமேஜினரி மிஷன்ஸ் கார்த்திகேயனுடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘அட்டி’.
“மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன்”, ஆகிய படங்களில் இயக்குனர் சுராஜிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த விஜயபாஸ்கர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் விஜய் டிவி மூலம் புகழ் பெற்ற மாகாபா ஆனந்த் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக அஷ்மிதா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ராம்கி நடிக்கிறார்.
“சித்தரம் பேசுதடி, அஞ்சாதே, நாடோடிகள்” ஆகிய வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த சுந்தர் சி.பாபு இசையமைக்கிறார். சினேகன், அண்ணாமலை, விஜயசாகர், கவிவர்மன், மதன் கார்க்கி, கானா வினோத் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வாட்டர் சப்ளை கடை வைத்திருக்கும் கதாநாயகன் மற்றும் அவனது நண்பர்களைப் பற்றிய கதைதான் இந்தப் படம். வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு எதிர்பாராமல் ஒரு பிரச்சனை வருகிறது. அந்தப் பிரச்சனையை கதாநயாகன் எப்படி சமாளித்தான் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லும் படம்தான் ‘அட்டி’.
வெங்கடேஷ் அர்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, ராஜேஷ் படத்தொகுப்பை கவனிக்க, பவர் பாண்டியன் சண்டைப் பயிற்சி அமைக்கிறார்.
படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
விஐபி‘ வில்லன் அமிதாஷ்ஸ
தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகியிருப்பவர் அமிதாஷ்.
பார்ப்பதற்கு இந்திப் பட ஹீரோ மாதிரி இருக்கிறார், இவர் எப்படி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்பது ஆச்சரியமான ஒன்றுதான். இசையமைப்பாளர் அனிருத்தின் பள்ளிக் கால நண்பராம் அமிதாஷ். சினிமாவில் நாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்தி நடிகர் அனுபம் கேர் நடத்தும் நடிப்புப் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று ஒரு நடிகருக்கான முழு தகுதியையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
எப்படி இந்த ‘விஐபி வில்லன்’ வாய்ப்பு என்று கேட்ட போது, படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.
“எனக்கு சொந்த ஊர் கர்நாடக மாநிலம்னாலும், நான் பிறந்து, வளர்ந்தது, படிச்சது எல்லாமே சென்னையிலதான். அனிருத்தோட சின்ன வயசுல இருந்தே நெருங்கிய நண்பன். அவர் தங்கை கல்யாணத்துக்கு நான் ஓடியாடி வேலை செஞ்சதை தனுஷ் கவனிச்சிருக்காரு. அப்ப கிடைச்ச அறிமுகத்துல அனிருத்தும், என்னோட சினிமா ஆசையைப் பத்தி சொன்னாரு. தனுஷும் நான் தயாரிக்கிற படத்துல ஒரு பணக்கார வில்லன் கதாபாத்திரம் இருக்கு. அதுல நடிக்க வைக்கலாம் என்றார். அப்படி கிடைச்சதுதான் இந்த வாய்ப்பு.
ரசிகர்களோட ரசிகர்களா தியேட்டருக்கு போய் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தைப் பார்த்துட்டிருக்கேன். ஆடியன்ஸ் ரொம்ப ரசிக்கிறாங்க. என் டயலாக்குக்கும் எதிர்ப்புக் குரல் கொடுக்கறாங்க. அதையெல்லாம் என் நடிப்புக்குக் கிடைச்ச வெற்றியா கருதறேன். இந்த நேரத்துல தனுஷையும், இயக்குனர் வேல்ராஜுக்கும் நன்றி சொல்ல ஆசைப்படறேன், ” என்றார்.
இப்போதைக்கு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கும் அமிதாஷ், ஒரு நாள் முழு ஹீரோவாக வளர்ந்து நிற்பேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
அஞ்சான் – ‘பார்த்திபன்’ இசை விமர்சனம்ஸ
அஞ்சான்’ படத்தின் பாடல்கள் வெளிவந்து ஒரு நாளைக் கடந்த நிலையில் படத்தின் பாடல்களைப் பற்றிய எதிர்பார்ப்பு இருக்கும். ‘தீபாவளி, பையா, வேட்டை’ படங்களுக்குப் பிறகு இயக்குனர் லிங்குசாமி, இசையைமப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா மீண்டும் இணைந்திருக்கும் படம்.
படத்தின் பாடல்கள் எப்படியிருக்கிறது என்பதை பாடல் வெளியீட்டின் போது இயக்குனர், நடிகர் பார்த்திபன் பேசியதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அதுவே ஒரு விமர்சனம் போலத்தான்ஸ
“பாட்டு கேட்டேன், ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு மாதிரி இருந்தது, ஒரு பாட்டு சூர்யா மாதிரி சூப்பரா இருந்தது. இன்னொரு பாட்டு வந்து லிங்குசாமி மாதிரி இருந்தது, அதாவது ரொம்ப லவ்வபுளா இருந்தது. இன்னொரு பாட்டு யுவன் மாதிரி, ரொம்ப யூத்ஃபுல்லா இருந்தது. ஒரு பாட்டு வந்து யு டிவி, திருப்பதி பிரதர்ஸ் மாதிரியே இருந்தது, அதாவது ரொம்ப ரிச்சா, ரொம்ப காஸ்ட்லியா இருந்தது. இன்னொரு பாட்டு வந்து, சமந்தா மாதிரி இருந்தது. சமந்தான்னா ரொம்ப செக்ஸியா இருந்தது.
‘கண் ஜாடை செய்தாலேஸ’ பாட்டு கேட்கும் போதே பார்க்கணும்னு தோணுச்சு. ஆனால், பார்க்கும் போது நோக்கம் மாறிடுச்சி. அதாவதுஸ.என்ன சொல்றது நானுஸமெய் மறக்க செஞ்சது அந்த பாட்டு. இப்படி ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. சூர்யா சார் பாடின பாட்டு வந்து, சூர்யாவோட ரசிகர்கள் மாதிரி ரொம்ப மாஸா இருந்தது,” என்றார் பார்த்திபன்.
பார்த்திபன் எந்தெந்த பாடல்களை யாரோடு ஒப்பிட்டார், அது உண்மைதானா என்பதை ‘அஞ்சான்’ பாடல்களைக் கேட்டுப் கேட்டுப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்ஸ
அஞ்சான்ஸபாடல்கள் விவரம்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
1. பேன்ங்ஸபேன்ங்ஸ
எழுதியவர் – மதன் கார்க்கி
பாடியவர் – கே.ஜி. ரஞ்சித்
2. ஒரு கண் ஜாடைஸ
எழுதியவர் – விவேகா
பாடியவர்கள் – பென்னி தயாள், ஷ்வேதா பண்டிட்
3. ஏக் தோ தீன்ஸ
எழுதியவர் – நா.முத்துக்குமார்
பாடியவர்கள் – சூர்யா, ஆன்ட்ரியா
4. காதல் ஆசைஸ
எழுதியவர் – கபிலன்
பாடியவர்கள் – யுவன்ஷங்கர் ராஜா, சூரஜ் சந்தோஷ்
5. சிரிப்பு என்ஸ
எழுதியவர் – விவேகா
பாடியவர் – எம்.எம். மானஸி
நடிகை அபிராபி, காவல்துறை அதிகாரியா? –
விருமாண்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி. 6 வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட் டிலாகிவிட்டார். மீண்டும் நடிக்கும் ஆசையில் திரும்பியவருக்கு ஒரே ஒரு டி.வி . சேனல் நிகழ்ச்சி மட்டும் கிடைத்தது. அது வும் முடிந்து விட்டது.
இதனால் மீண்டும் ஏமாற்றத்துடன் அமெரிக் கா திரும்பியவரை திரும்ப அழைத்துக் கொ ண்டது சொந்த மாநிலமான கேரளா. தமிழ் நாட்டில் திலகவதி போன்று கேரள மாநிலத்தி ன் முதல் ஐ.பி.எஸ் அதிகாரியான குட்டியம்மா வின் வாழ்க்கை அங்கு டிரைவர் ஆன் டூட்டி என்ற பெயரில்
திரைப்படமாகிறது. இதில் குட் டியம்மாவாக நடிக்கப்போகிற வர் அபிராமி. மனோஜ் பெல் லாவா இயக்குகிறார்.
சதாரண சப்-இன்ஸ்பெக்டராக போலீஸ் துறைக்குள் நுழைந் து ஆண்கள் ஆதிக்கம் நிறை ந்த துறையில் துணிச்சலுடன் போராடி குட்டியம்மா எப்படி ஜெயித்தார் என்கிற கதை. இத ற்காக அபிராமி இப்போது குட்டியம்மாவின் வாழ்க்கையை படித்து வருகிறார். அவரது மேனரிசம், நடை உடை பாவனைகளை கற்று வருகிறார்.
நான் ரொம்ப சின்ன பையன், திருமணத்துக்கு அவசரமில்லை! சொல்கிறார் ஜெய்
திருமணம் எனும் நிக்கா படத்தில் நடித்தபோது ஜெய்-நஸ்ரியா இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வெளியானபோதும் அதற்கு மறுப்பு தெரிவித்தார் ஜெய்.
ஒரு கட்டத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலை நஸ்ரியா காதலிப்பதாக செய்தி வெளியாகின, தொடர்ந்து நிச்சயதார்த்தமும் நடந்து, இப்போது நஸ்ரியாவின் திருமணமும் விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில, யாராவது திருமணம் பற்றி ஜெயிடம் கேள்வி எழுப்பினால். டென்சனாகி விடுகிறார். சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதனால் இப்போது எனது முழுக்கவனமும் சினிமாவில்தான் உள்ளது என்று நழுவுகிறார்.
மேலும், திருமணம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு ஒரு வயதுவரம்பு உள்ளது. அந்த வகையில் நான் இன்னும் அந்த வயதை தொடவில்லை என்றே நினைக்கிறேன்.
அதோடு, இன்றைக்கு சினிமாவில் சில நடிகைகளே 33 வயதை கடந்த பிறகும் திருமணம் பற்றி யோசிக்காமல் இருக்கிறார்கள். அப்படியிருக்க நான் அதைப்பற்றி யோசிக்கவே இன்னும் பல வருடஙகள் உள்ளன என்கிறார் ஜெய்.
ஜோதிகா இனிமேல் வேறு ஹீரோக்களுடன் நடிக்க மாட்டார். சூர்யா
சமீபத்தில் ஒரு முன்னணி வார இதழுக்கு பேட்டியளித்த அஞ்சான் நாயகர் சூர்யா, ஜோதிகா மீண்டும் நடிப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜோதிகா மீண்டும் திரையுலகில் ரீ எண்ட்ரி ஆவதற்கு கதை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பது உண்மைதான் என்றும், ஆனால் அவர் என்னுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பார், வெறொருவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஜோதிகா நடிக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார். இருவருக்கும் பொருத்தமான கேரக்டர்கள் வரும் கதையை தேடிக்கொண்டிருப்பதாகவும், அப்படி ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக ஜோதிகா மீண்டும் நடிப்பார் என்றும் சூர்யா கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் ஜோதிகாவிடம் தொடர்ச்சியாக ஐம்பது நாட்கள் அல்லது நூறு நாட்கள் கால்ஷீட் கேட்டால் கண்டிப்பாக அவர் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரால் குழந்தைகளை பிரிந்து சில மணிநேரங்கள் பிரிந்து இருக்க முடியாது என்று கூறியுள்ளார். தற்போது எங்களுடைய 2D பட நிறுவனத்தை ஜோதிகாதான் கவனித்து வருகிறார். எதிர்காலத்தில் ஜோதிகா என்னுடைய மற்றும் பிற ஹீரோக்களுடைய படங்களை தயாரிக்கும் ஒரு பெரிய தயாரிப்பாளராக மாற வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்று சூர்யா கூறியுள்ளார்.
பாலாவின் தாரை தப்பட்டையில் பாலியல் தொழிலாளியாக வரலட்சுமி.
தேசிய விருது பெற்ற பாலாவின் அடுத்த படம் 'தாரை தப்பட்டை". இந்த படத்தில் சசிகுமார், வரலட்சுமி உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் வரலட்சுமிக்கு கரகாட்ட நடனக்கலைஞர் வேடம் என்றும், அதனால் உண்மையான கரகாட்ட நடனக்கலைஞரிடம் வரலட்சுமி நடனப்பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் வரலட்சுமியின் கேரக்டர் குறித்து தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. முதல்பாதியில் கரகாட்ட நடனக்கலைஞராக வரும் வரலட்சுமி இரண்டாவது பாதியில் விபச்சாரியாக வருகிறாராம். இந்த தகவல் தற்போதுதான் வரலட்சுமிக்கே தெரிந்துள்ளது. ஆனால் வரலட்சுமி எவ்வித தயக்கமும் இல்லாமல் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
அனுஷ்கா, சினேகா, ஸ்ரேயா போன்றோர் விபச்சாரியாக நடித்தபிறகுதான் அவர்களுடை மார்க்கெட் அதிகரித்தது. அதுபோன்று தனக்கும் தாரை தப்பட்டை படம் வெளியானதும் மார்கெட் அதிகரிக்கும் என வரலட்சுமி கருதுகிறாராம். சசிகுமார் நாதஸ்வர கலைஞராக நடிக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கின்றார். இந்த படம் இளையராஜாவுக்கு 1000வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் இரண்டாம் பரிசு பெற்ற பிரகதி குருபிரசாத் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கின்றார்.