கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ரைஸ் ஆஃப் தி பிளானெட் ஆஃப் த ஏப்ஸ் என்ற படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள படம்தான் டான் ஆப் தி ஏப்ஸ். மோஷன் கேப்ட்சர் தொழில்நுட்பத்தில் மிகவும் தத்ருபமாக உருவாக்கப்பட்ட குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் சண்டைக்காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றது. கோச்சடையான் படத்தை எடுத்த செளந்தர்யா, இந்த படத்தை கண்டிப்பாக பார்த்து எதிர்காலத்தில் தன் தவறை திருத்திக்கொள்ள வேண்டும்.
குரங்குகளை பரிசோதனை செய்ய வைத்திருந்த கொடுமையான கிருமிகள் உலகில் பரவி மனித இனமே கிட்டத்தட்ட அழிந்துவிடுகிறது. எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்த ஒருசிலர் மட்டும் கலிபோர்னியாவில் உள்ள இடத்தில் உயிர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு மின்சார வசதி இல்லை. இந்நிலையில் சீசர் தனது கூட்டத்துடன் வாழும் காட்டுக்குள் சேதமடைந்த அணைக்கட்டில் இருக்கும் நீர்மின்சக்தி இயந்திரத்தை சரியாக இயக்கிவிட்டால் மின்சாரம் கிடைத்துவிடும். இதற்காக மனிதர்கள் காட்டுக்குள் செல்கின்றனர்.
மனித இனமே அழிந்துவிட்டது என சந்தோஷமாக இருந்த குரங்குகள் இனத்திற்கு மனிதர்கள் இன்னும் சிலர் உயிரோடு இருக்கின்றனர் என்று தெரியவருகிறது. மேலும் மின்சாரம் தயாரிக்க அணைக்கு வரும் மனிதர்களை சீசர் எச்சரித்து அனுப்பிவிடுகிறது. ஆனாலும் குரங்குகள் மீது படையெடுத்து மீண்டும் மனிதர்கள் வருவார்கள் என்ற சந்தேகம் சீசருக்கு இருக்கின்றது.
தங்களது முக்கிய தேவைக்கு மின்சாரம் கண்டிப்பாக தேவைப்படுவதால், குரங்குகள் மீது படையெடுத்து அணையை கைப்பற்ற முடிவு செய்கிறார் மனித இனத்தின் தலைவர். ஆனால் அதற்கு முன் சீசருடன் சுமூகமாக பேசி தீர்வு காண சமாதான பேச்சு நடத்த ஒருவர் அனுப்பப்படுகிறார். சமாதானத்திற்கு முதலில் மறுக்கும் சீசர் பின்னர் போர் ஏற்பட்டால் விளையக்கூடிய தீமைகளை எண்ணி அணையில் மின்சாரம் எடுக்க சம்மதம் தெரிவிக்கின்றது. ஆனால் சீசரின் சீசரின் நண்பன் கூபாவுக்கு இதில் துளியும் விருப்பமில்லை.
இந்நிலையில் மனிதர்கள் வாழும் பகுதியில் உள்ள ஒரு இடத்தில், ஆயுதக் கிடங்கில் இருக்கும் பயங்கர ஆயுதங்களை பார்க்கும் கூபா, மனிதர்கள் நம் மீது போர் தொடுக்க தயாராகி வருகின்றனர் என்று தவறாக நினைத்துக் கொள்கிறது. இதனை, சீசரிடம் வந்து கூபா சொல்கிறது.
இறுதியில், குரங்குகள் மின்சாரத்தை எடுக்க சம்மதம் தெரிவித்ததா? கூபா சொன்னது போல் மனிதர்கள் அவர்கள் மீது படையெடுத்தார்களா? அல்லது குரங்குகள் மனிதர்கள் மீது படையெடுத்தனவா? என்பதே மீதிக்கதை.
ஒவ்வொரு காட்சியிலும் பிரமாண்டத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் மாத்தேவ் வாஹன். அதிர வைக்கும் பின்னணி இசையுடன் மிகவும் தத்ருபமான மோஷன் கேப்ட்சர் வேலையும் படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றது. கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய அற்புதமான பொழுதுபோக்கு படம்.
நம்பியார் படத்தில் நடிக்கும் எம்.ஜி.ஆர். ஆர்யாவின் காமெடி கமெண்ட்
ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த், முதன்முதலாக தயாரித்து நடிக்கும் 'நம்பியார்' திரைப்படம் கிட்டத்தட்ட ரிலீஸ் நிலைக்கு வந்துவிட்டது. சயன்ஸ் பிக்சன் காமெடி மற்றும் த்ரில் படமாக வளர்ந்துள்ள இந்த படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க ஆர்யா ஒப்புக்கொண்டுள்ளார் என்பதுதான் புதிய செய்தி.
இந்த படத்தில் ஆர்யாவுக்கு எம்.ஜி.ஆர் வேடம் என்பதுதான் சஸ்பென்ஸ். நம்பியார் படத்தில் எம்.ஜி.ஆர் வேடம் ஏற்றது புதுமையாக இருப்பதாக ஆர்யா இதுகுறித்து கமெண்ட் அடித்துள்ளார். மேலும் இதுவரை எம்.ஜி.ஆர் படத்தில் நம்பியார் நடித்துள்ளார் என்றுதான் அனைவரும் கூறுவர். ஆனால் இந்த படத்தில் மட்டும்தான் நம்பியார் படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துள்ளார் என்று அனைவரும் கூறுவார்கள் என்று அவர் காமெடியாக கூறியுள்ளார். மேலும் தானும் ஸ்ரீகாந்த்தும் பள்ளிக்காலத்தில் இருந்தே நண்பர்கள் என்றும் தான் தற்போது நடிப்பு மற்றும் தயாரிப்பு என பிசியாக இருந்தபோதிலும் எனது பள்ளி நண்பனுக்காக இரண்டு நாள் ஒதுக்கி தருவதில் பெருமை அடைவதாகவும் ஆர்யா கூறியுள்ளார்.
மேலும் முதன்முதலாக படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்ரீகாந்துக்கு உதவி செய்யும் நோக்கத்தில் சந்தானமும் தனது சம்பளத்தில் பெரும்பகுதியை அவருக்காக குறைத்துக்கொண்டாராம். சம்பள விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கும் சந்தானமே ஸ்ரீகாந்துக்கு இறங்கி வந்து உதவி செய்ததை கோலிவுட்டில் மிகவும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். சுனைனா ஹீரோயினியாக நடிக்கும் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல ஹிட்டாகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அசின் வீட்டிற்கு அடிக்கடி சல்மான்கான் வருவது ஏன்? மும்பையில் காட்டுத்தீயாய் பரவும் வதந்தி
பலகோடி ரூபாய் மதிப்பில் நடிகை அசினுக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கான் சொந்த வீடு வாங்கி கொடுத்திருப்பதாக மும்பையில் தற்போது பலமான வதந்தி பரவி வருகின்றது.
சல்மான்கான் மற்றும் அசின் ஆகிய இருவரும் 'லண்டன் ட்ரீம்ஸ்' என்ற படத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. அப்போதே இந்த வதந்தியை இருவருமே மறுத்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த வதந்தி மும்பை முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது.
முக்கிய முக்கிய பகுதியில் பலகோடி ரூபாய் மதிப்பில் அசின் பெயரில் சொந்த வீடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய பணம் முழுவதையும் சல்மான்கான் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. தாயாருடன் தனியாக அந்த வீட்டில் வாழும் அசினை பார்க்க சல்மான்கான் அடிக்கடி வந்து செல்வதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.
ஆனால் இந்த வதந்தி குறித்து அசின் உதவியாளர் மறுப்பு தெரிவித்துள்ளர்.
நேற்று மும்பை பத்திரிகையாளர்களிடையே பேசிய அசின் உதவியாளர் "அசினுக்கு சல்மான்கான் வீடு ஒன்றை பரிசாக கொடுத்தார் என்பது பழைய வதந்தி. ‘லண்டன் டிரீம்ஸ்’ படத்தில் நடித்தபோது இது வெளியானது. இப்போது மீண்டும் அந்த வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இதில் உண்மை இல்லை. அசினும் சல்மான்கானும் நல்ல நண்பர்கள். அசினுக்கு சல்மான்கான் வீடு எதுவும் வாங்கி கொடுக்கவில்லை. இதை சட்டப்படி தன்னிடம் உள்ள தஸ்தாவேஜுகள் மூலம் அவரால் நிரூபிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வரும் அமலா. தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறார்
டி.ராஜேந்தரி, 'மைதிலி என்னை காதலி' என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அமலா, 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
மைதிலி என்னை காதலி, சத்யா, வெற்றி விழா, வேலைக்காரன், ஜீவா, அக்னி நட்சத்திரம் போன்ற பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நடிகை அமலா. பின்னர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டு குடும்ப பெண்ணாக வாழந்தார். மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் கொள்கையால் கவர்ந்த இவர் பிராணிகள் பாதுகாப்பில் தனது கவனத்தை செலுத்தினார். தற்போது பிராணிகள் பாதுகாப்பு அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
தறோது தமிழில் தயாராகும் புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க அமலா ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அமலா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தொலைக்காட்சி தொடரின் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். சினிமாவில் நடிப்பது பற்றி உடனடியாக முடிவு எதுவும் எடுக்கவில்லை. அதற்கு சில காலம். ஆகலாம்’’ என்றார்.
'லிங்கா' படத்தில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன். டுவிட்டரில் சோனாக்ஷி சின்ஹா
ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்ப்பாக நடந்து வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டது குறித்த தனது அனுபவங்களை நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் ராமோஜி பிலிம்சிட்டியில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. ரஜினியின் எளிமைதான் அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுத்தந்துள்ளது. 'லிங்கா' படத்தின் என்னுடைய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டதாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கூறிவிட்டார். இன்னும் சில காட்சிகள் ரஜினியுடன் நடிக்க மாட்டோமா என்ற கனத்த இதயத்துடன் 'லிங்கா' குழுவினர்களிடம் இருந்து விடைபெற்றேன்.
தற்போது குடும்பத்துடன் ஓய்வு எடுக்க வெளிநாடு செல்ல இருப்பதாகவும், திரும்பி வந்தவுடன் அர்ஜூன் கபூருடன் நடித்து வரும் "தேவர்" என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகேஷ்பாபு, பூமிகா நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற 'ஒக்கடு' திரைப்படத்தின் ரீகேக்தான் 'தேவர்' என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனை திறமைசாலிகளாக இருந்தாலும் வெற்றி நம்மைத் தேடி வராது. பெண் இசையமைப்பாளர் ஸ்ரீவித்யாகலை பேட்டி
பிரபல பாடகியான ஸ்ரீவித்யாகலை, தற்போது இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். "என்ன பிடிச்சிருக்கா?' படத்திற்காக பாடலாசிரியர் விவேகா எழுதிய ஐந்து பாடல்களுக்கு இளசுகளைக் கவரும் வகையில் துள்ளலான இசையைத் தந்து மயக்கியிருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட இசைக் கோர்ப்பு பணியில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்...
""இசைக் குழுவோடும், தனியாகவும் பல மொழிகளில் பாடியிருக்கிறேன். "அன்னியன்', "தொட்டி ஜெயா', "போக்கிரி', "ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற படங்களில் பாடியிருக்கிறேன். இசையில் என்னுடைய அடுத்த இலக்கான இசையமைக்கும் பணியை இப்போதுதான் எட்டியிருக்கிறேன். இதற்காகப் பல ஆண்டுகள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டேன்... அதன் விளைவுதான் இப்போது "என்ன பிடிச்சிருக்கா?' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு.
இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்தேன். அதன் காரணமாக பாடல்கள் நன்றாக வந்திருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்து, என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியிருக்கும் தயாரிப்பாளர் பிரகாசம் மற்றும் படத்தின் இயக்குநர் சுப்புராஜ் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அப்போதும் சரி, இப்போதும் சரி இசையில் புதியதைக் கொடுத்தவர்கள் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறார்கள். அப்படிக் கொடுத்தால் மட்டும்தான் நிலைத்து நிற்க முடியும். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை நேரிலும், பல வித அனுபவங்களிலும் நான் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறேன்.
எந்தத் துறையாக இருந்தாலும், புதிய முயற்சி செய்தால் மட்டுமே நாம் தொடர்ச்சியாக பணியாற்ற முடியும். ரசனை நவீனமாக இருக்கும்போது இசையும் அதற்கு ஏற்றது போல் நவீனமாக இருக்க வேண்டும். எத்தனை திறமைசாலிகளாக இருந்தாலும் வெற்றி நம்மைத் தேடி வராது. நாம் தான் அதனைத் தேடிச் சென்று அடைய வேண்டும். இது என்னுடைய அப்பா அடிக்கடி எனக்குச் சொல்லும் அறிவுரை. என்னுடைய நீண்ட நாள் போராட்டத்திற்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாக என்னுடைய பாடல்களை கலைப்புலி எஸ்.தாணுவின் டைகர் ஆடியோ நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது.
என் கணவர் கலைச் செல்வன் தபேலா இசைக் கலைஞர். ஒரே துறையைச் சார்ந்தவர்கள் என்பதால், இதில் உள்ள கஷ்ட, நஷ்டங்கள் என்ன என்பதை எளிதாகப் புரிந்து கொள்வோம். நான் இசையமைத்த பாடல்கள் சிறப்பாக வருவதற்குப் பேருதவியாக இருந்தவரே என் கணவர் தான். இசை என்பது ஆத்ம திருப்தியோடு இறைவனை அடையும் வழி. இதில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றுவதைப் பெருமையாக நினைக்கிறோம்.
கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டாலும், சினிமா இசைக்கு வலு சேர்ப்பது மற்ற இசை வகைகளான மேற்கத்திய இசை, கிராமிய மற்றும் மெல்லிசையாகும். கதைக் களத்திற்கேற்ற வகையில் பாடலின் இசை அமைவது அவசியம். எந்த வகையைச் சார்ந்த இசையை எந்தெந்த அளவில் கொடுக்க வேண்டும் என்கிற அனுபவம் வேண்டும். இசைத் துறையில் பாடகியாக இருந்த காரணத்தால் பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய அனுபவம் என்னுடைய தனிப்பட்ட இசை ஞானத்தை வளர்த்துக் கொள்ள உதவியாக இருந்தது. இதுவே என்னுடைய தனித்துவமாக இருக்கும்.
நான் இசையமைத்த பாடல்களில் நான்கு பாடல்கள் மெட்டுக்காக எழுதப்பட்டவை. ஒரு பாடல் மட்டும் பாடல் வரிகளுக்கு இசையமைக்கப்பட்டது. சமீபத்தில் தத்துவப் பாடல் எதுவும் வெளியாகவில்லை. காதலை மையமாகக் கொண்ட கதை என்பதால், தத்துவப் பாடல் ஒன்றை இயக்குநர் கேட்டுக் கொண்டதன் பேரில் படத்தில் வைத்தோம்.
"எங்கேயோ எங்கேயோ போகுதே வாழ்வென்னும் புதிரான பாதைதான்...' என்ற தத்துவப் பாடலுக்கு இசையமைத்தது தனி அனுபவம். இது வாழ்க்கைப் பாடங்களைப் பற்றிய பாடல். தனியார் தொலைக்காட்சி குரல் வல்லுநர் ஆனந்த்ஜி முதல் முறையாக என்னுடைய படத்தில் பாடியிருக்கிறார். இந்தத் தத்துவப் பாடல் அனைவரையும் முணுமுணுக்க வைக்கும் என்பது உறுதி. கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள்தான் எனக்கு ஊக்கம் தந்தது. மேலும் என்னுடைய குருநாதர் கணேசய்யர், "உனக்குச் சங்கீதம்தான் சோறு போடும். அதனால் அதில் தேர்ச்சி கொள்' என்று என்னை உற்சாகப் படுத்தினார். அவருடைய வார்த்தை இன்று நிஜமாகிவிட்டது'' என்று நெகிழ்கிறார் ஸ்ரீவித்யாகலை.
உத்தம வில்லன் படக்குழுவில் புதிதாக இணையும் 'விருமாண்டி' அபிராமி.
கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, ஊர்வசி ஆகியோர் நடிப்பில் ரமேஷ் அரவிந்த இயக்கும் உத்தம வில்லன் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசனின் 'விருமாண்டி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை அபிராமியும் தற்போது உத்தம வில்லன் படத்தில் புதிதாக இணைந்துள்ளார்.
நாயகி பூஜாகுமாருக்கு பின்னணி குரல் கொடுப்பதற்காக கமல்ஹாசனால் அழைக்கப்பட்டுள்ளார் அபிராமி. விருமாண்டி படத்தின் ரீரிக்கார்டிங் போதே அபிராமியின் தமிழ் உச்சரிப்பை பாராட்டிய கமல், தற்போது அவரை ஞாபகம் வைத்து உத்தம வில்லன் படத்தில் பயன்படுத்தியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகைகள் ஆண்ட்ரியா, பார்வதி மற்றும் ஊர்வசி ஆகியோர் அவர்களே பின்னணி குரல் கொடுக்கின்றனர். பூஜா குமாருக்