பாலா படத்தில் நடிகையாகும் பாடகி பிரகதி!-நீயெல்லாம் ஒரு ஆம்பளையா விஷாலை ஹன்சிகா
12 Jul,2014
வளர்ந்து வரும் பின்னணி பாடகி பிரகதி குருபிரசாத். சிங்கப்பூரில் பிறந்த இவர் இப்போது வசிப்பது கலிபோர்னியாவில். சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று பாடகியானார்.
பரதேசி படத்தில் அவரை பாடகியாக அறிமுகப்படுத்தினார் பாலா. செங்காடே, ஒர் மிருகம் பாடல்களை பாடினார். அதன் பிறகு ஒசாக்கா என்ற பாடலை வணக்கம் சென்னை படத்தில் பாடினார். இதுதவிர தனி ஆல்பங்களில் பாடி வருகிறார்.
தற்போது பிரகதி நடிகையாகிறார். பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் நாதஸ்வர கலைஞராக வரும் சசிகுமாரின் தங்கை ஒரு நாட்டுப்புற பாடகி.
அந்த கேரக்டருக்கு பாலா பிரகதியை தேர்வு செய்துள்ளார். தற்போது பிரகதி நடிப்பு பயிற்சியும், நடிக்க போகும் கேரக்டருக்கான ஒத்திகையும் செய்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு பாடகி நடிகையாகி இருக்கிறார்.
'நீயெல்லாம் ஒரு ஆம்பளையா' விஷாலை ஹன்சிகா.
ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடித்த ‘மதகத ராஜா’ திரைப்படம் முடிவடைந்தும் வெளிவராத நிலையில், சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் மீண்டும் நடிப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்றூ முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும் சுந்தர்.சி தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். விஷாலுடன் ஹன்சிகா முதல்முறையாக ஜோடி சேர்ந்தாலும் சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பது 3வது முறையாகும். ஏற்கனவே ஹன்சிகா தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை ஆகிய படங்களில் சுந்தர் சியின் இயக்கத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு நீள காமெடி மற்றும் பொழுதுபோக்கு படமாக அமையும் இந்த படத்தில் காமெடி கேரக்டரில் சதீஷ் நடிக்கிறார். இவர் ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’ ஆகிய படங்களில் காமெடியில் கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘ஆம்பள’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
விஷாலிடம் ஹன்சிகா "நீயெல்லம் ஒரு ஆம்பளையா? என உசுப்பிவிடுவதால் ஏற்படும் விளைவுகளைத்தான் தனது காமெடி திரைக்கதையில் மூலம் படம் முழுவதும் கூறுகிறாராம் சுந்தர் சி.