சகாப்தம் பட இயக்குனர் ஓட்டம். மகனுக்காக களத்தில் இறங்குகிறார் விஜயகாந்த்
02 Jul,2014
விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முகப்பாண்டியனை திரையுலகில் அறிமுகப்படுத்தும் விதமாக 'சகாப்தம்' என்னும் திரைப்படத்தை சொந்தமாக தயாரித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஆரம்பவிழா மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இவர் வல்லரசு படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சியில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த படத்தில் இருந்து இயக்குனர் சந்தோஷ்குமார் திடீரென விலகிவிட்டதாக தகவல் வந்துள்ளது. விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்களின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், சொந்தமாக ஒரு ஷாட்டை எடுக்க முடியாமல் விஜயகாந்த் சொன்னதை அப்படியே செய்ய வேண்டிய நிலை இருப்பதாலும் படத்தில் இருந்து இயக்குனர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு வேறு எந்த இயக்குனரும் இயக்குனர் பொறுப்பேற்க தயங்கி வருவதால் விஜயகாந்த்தே இந்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன,.
இம்மாத கடைசியில் மலேசியாவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை ஆரம்பிக்கும் விஜயகாந்த், இந்த படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்க கடுமையாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.2015ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்த படத்தை வெளியிட விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.