பரோட்டா சூரியை ஹீரோவாக்கும் முயற்சியில் இயக்குனர்கள்! செய்தித் துளிகள் துளிகள்

22 Apr,2014
 

பரோட்டா சூரியை ஹீரோவாக்கும் முயற்சியில் இயக்குனர்கள்!


சந்தானம் முழுநேர காமெடியனாக இருந்தது வரை முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் முட்டி மோதிக்கொண்டிருந்தார் பரோட்டா சூரி. ஆனால், தற்போது சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாகியிருப்பதோடு, இனிமேல் குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே காமெடி செய்வேன். மற்றபடி நானும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என்று அறிவித்து விட்டார்.

இதனால் தற்போது சிங்கிள் காமெடியனாக களத்தில் நின்று கொண்டிருக்கிறார் சூரி. அதனால் காமெடியனுடன் சீன் பை சீன் என்ட்ரி கொடுக்க நினைக்கும் ஹீரோக்கள் அவரை விடாமல் பிடித்து வைத்துக்கொண்டுள்ளனர். அதனால் ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் சூரி, படத்துக்குப்படம் சத்தமில்லாமல் தனது சம்பளத்தையும் உயர்த்திக்கொண்டே வருகிறார்.

ஆனால், இந்த நேரத்தில் கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், கருணாஸ், கஞ்சா கருப்பு என எல்லோரும் ஹீரோவாகிட்டாங்க. இது காமெடியன்களின் காலம். அதனால் இந்த சந்தர்ப்பதில் நீங்களும் ஹீரோ வேசத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு வச்சிடுறது நல்லது என்று சில டைரக்டர்கள் கதைகளுடன் அவரை துரத்திக்கொண்டு வருகின்றனர்.

ஆனால் ஹீரோ என்றதும் சூரி மனதளவில் சபலப்பட்டு நின்று கொண்டிருக்க, அவரது அபிமானிகளோ, காமெடியனா நடிச்சா பெரிய எதிர்காலம் இருக்கு, ஹீரோவா நடிச்சா ஒருவேளை படம் அவுட்டான்னா அது அப்புறம் மதுரைக்கு வண்டியேறிட வேண்டியதான் என்று சொல்லி சூரியை யோசிக்க வைத்துவிட்டனர். இதனால் தன்னை ஹீரோவாக்க முயற்சித்தவர்களை, கொஞ்சம் அசந்தா என் பொழப்பையே கெடுத்து விட்டுறுவீங்க போலிருக்கே என்று துரத்தியடித்து விட்டார் சூரி.

அஜித்தைப் போலவே கௌதம் கார்த்திக்கும் பைக் பிரியர்


தல அஜித் பைக் பிரியர் என்பது நமக்கெல்லாம் தெரியும். அவரைப்போலவே இன்னொரு இளம் ஹீரோவுக்கும் பைக் என்றால் உயிர். படப்பிடிப்பு இல்லை என்றால் போதும், ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிடுவார்.

அலுக்கும்வரை ஊர் சுற்றிவிட்டு அப்புறம்தான் வீட்டுக்கு வருவாராம். அவர்..கௌதம் கார்த்திக். கடல் படத்தில் நடிகராக அறிமுகமாவதற்கு முன் ஜாலியாய் பைக்கில் நகர்வலம் வந்தாராம் கௌதம் கார்த்திக். நடிகரான பிறகு அப்படி வர முடியவில்லையாம். எனவே ஹெல்மெட் அணிந்து, முகத்தை மறைத்தபடி ஜாலி ரைட் அடிக்கிறார்.

இரண்டு தினங்களுக்கு முன் ஊட்டியிலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்திருக்கிறார் கௌதம் கார்த்திக். என்னதுஸஊட்டியிலிருந்துஸசென்னைக்குஸபைக்கிலேயேஸஎன்று வாயை திறக்காதீர்கள் ப்ளீஸ்ஸ!

இதொன்றும் கௌதம் கார்த்திக்குக்கு புதுசில்லை. ஏறக்குறைய இருபது தடவைக்கு மேல், சென்னையிலிருந்து ஊட்டிக்கும், ஊட்டியிலிருந்து சென்னைக்கும் பைக்கிலேயே பயணித்திருக்கிறாராம்.

அடேங்கப்பா..தம்பி ரியல் ஹீரோதான் போலிருக்கு


காதலனுடன் சுற்றும் எமி ஜாக்சன்!


ஷங்கரின் ஐ படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன் லண்டனைச் சேர்ந்த ஆங்கிலேயே பெண். மதராசபட்டினம் படத்தில் ஆங்கிலேய பெண்ணாக நடிக்க வந்தவரை ஷங்கர், ஐ படத்தில், சென்னை பெண்ணாக மாற்றி நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

(ரஜினியையே வெள்ளைக்காரராக மாற்றியவருக்கு இதெல்லாம் சாதாரணம்) எமி தற்போது இந்திப் படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

எமி நடிக்க வருவதற்கு முன்பே லண்டன் தொலைக்காட்சியில் காரனேஷன் ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் தொகுப்பாளர் ரியான் தாமஸ் என்பவரை காதலித்து வந்தார். சினிமாவில் நடிப்பதில் பிசியாகிவிட்டதால் சில காலம் அவரை சந்திக்காமல் இருந்தார்.

இப்போது ஐ படம் முடிந்துவிட்டதால் லண்டன் பறந்த அவர் சில நாட்களாக காதலனுடன் லண்டன் வீதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். பார்ட்டிகளில் தாமசுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணைய தளங்களில் வெளிவந்திருக்கிறது.

எமியின் காதலர் ரேயான் தாமஸ் லண்டனில் சினிமா ஸ்டார் அளவுக்கு பாப்புலரானவர். எமி, தவிர அவருக்கு இன்னும் சில காதலிகள் இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்


சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்ஸ! கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார்!

சர்ச்சையில் சிக்குவதே சிவகார்த்திகேயனுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. கடந்த சில நாட்களாகத்தான் சிவகார்த்திகேயன் பற்றி சர்ச்சை செய்திகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த படம் மான் கராத்தே. புதுமுக இயக்குநர் திருக்குமரன் இயக்கிய இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மதன் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்து இருந்தார். ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியான மான் கராத்தே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். “சமீபத்தில் திரைக்கு வந்துள்ள ‘மான் கராத்தே’ படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் குத்துச்சண்டையை இழிவுப்படுத்தும் வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அந்தக் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் உரிய அனுமதியும், ஆலோசனையும் பெற்று, குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆலோசனை எதுவும் பெறவில்லை.

உரிய அனுமதியும் பெற வில்லை. இது சட்டத்திற்கு புறம்பான செயல். எனவே ‘மான் கராத்தே’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘மான் கராத்தே’ படத்தை தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அம்மனுவில் கூறியிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

இம்மனு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

ட்விட்டருக்கு வந்தார் சந்தானம்!


ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பிரபலங்களின் பெயர்களில் ஏகபட்ட கணக்குகள் இருக்கின்றன. அவற்றில் எது அசல், எது போலியானது என்பதை கண்டுபிடிப்பதற்குள் மண்டை காய்ந்துவிடும்.

சம்மந்தப்பட்டவர்களே நேரடியாய் சொன்னால்தான் உண்டு. தமன்னா, காஜல்அகர்வால், சூர்யா, கார்த்தி ஆகியோர் சமூகவலைத்தளங்களில் எங்கள் பெயரில் இருப்பது நாங்கள் அல்ல என்று தெரிவித்துவிட்டனர்.

காமெடி நகடிர் சூரி பெயரில் தொடங்கப்பட்ட ஒரு ட்விட்டர் பக்கத்தில் ரஜினி உட்பட பல முக்கிய பிரமுகர்களைப் பற்றி சகட்டுமேனிக்கு விமர்சனம் பதிவிடப்பட்டது. அது பற்றி செய்திகளினால் சூரிக்கு பிரச்சனை ஏற்பட்டதும், காவல்துறையில் உள்ள சைபர்க்ரைம் பிரிவில் புகார் அளித்தார்.

சூரி பெயரில் மட்டுமல்ல, காமெடியன் சந்தானம் பெயரிலும் ட்விட்டரில் ஏகப்பட்ட அக்கவுண்டுகள் உள்ளன. அவற்றில் எது சந்தானத்தின் அக்கவுண்ட் என்று தெரியாமல் ரசிகர்கள் திகைத்து வந்த நிலையில், தன்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் இதுதான் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் சந்தானம். இதுதான் அவரது ட்விட்டர் அக்கவுண்ட்.. @iamsanthanam


மகனை நடிகன் ஆக்கியது ஏன்? நாசர் விளக்கம்


நாசரின் மகன் லுதுஃபுதீன், சைவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவர் நாசரின் பேரனாக நடிக்கிறார். மகன் நடிக்க வந்திருப்பது பற்றி நாசர் கூறியிருப்பதாவது: ஆரம்பத்தில் அவனுக்கு நடிக்கும் ஆர்வம் இல்லை.

ஒரு இயக்குனராக வரவேண்டும் என்பதே அவர் லட்சியமாக இருந்தது. மேற்கத்திய இசையை முறையாக கற்றுக் கொண்டிருக்கிறான். திடீரென்று சைவம் வாய்ப்பு வந்தது.

இயக்குனர் விஜய் எங்க வீட்டு பிள்ளை. அவரின் பேச்சை மீற முடியாது. அதனால் நடிக்க சம்மதித்தேன், நடிப்பு பிறவியில் இருந்தெல்லாம் வராது பயிற்சியின் மூலம்தான் வரும்.

அதனால் அவனை டெல்லிக்கு அனுப்பி என்.கே.சர்மாவிடம் நடிப்பு கற்றுவரச் செய்தேன். சர்மாதான் ஷாருக்கானுக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்தவர். அதன் பிறகு நடிகர் சண்முகராஜன் பயிற்சி கொடுத்தார்.

அதன் பிறகு நான் அவனை நடிக்கை வைத்து எனக்கு திருப்தி வந்த பிறகே கேமரா முன்னாடி நிற்க வைத்தேன். தொடர்ந்து நடிப்பதும், படம் இயக்குவதும் அவன் விருப்பம் என்றார் நாசர்.

 


மணல் புயலில் சிக்கிய அனுஷ்கா சர்மா


பிரபல பாலிவுட் ஹீரோயின் அனுஷ்கா சர்மா, இப்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். என்.எச் 10 என்ற படத்தை தயாரித்து நவ்தீப் சிங்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அருகே உள்ள பாலைவனத்தில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு வீசிய கடும் பாலைவன புயலால் பலபேர் இறந்தனர். இந்த புயலில் அனுஷ்கா சர்மாவின் பட யூனிட்டும் மாட்டிக் கொண்டது.

மணல் புயல் வீச ஆரம்பித்ததுமே அனுஷ்கா சர்மாவையும், நவ்தீப் சிங்கையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு கேமரா உள்ளிட்ட முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

மணல் புயலால் பாடல் காட்சிக்காக போடப்பட்டிருந்த செட்டுகள் அனைத்தும் வீணானது. இதனால் பல லட்சம் நஷ்டம் அடைந்தோடு படப்பிடிப்பும் நின்று விட்டது.

“படப்பிடிப்புக்கு போட்டிருந்த அனைத்து செட்டுகளும் சேதமைடைந்து விட்டது. பல லட்சம் ரூபாய் எனக்கு நஷ்டம்தான். ஆனால் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது ஆறுதலாக இருக்கிறது. அந்த நாளை மறக்க முடியாது. காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி” என்ற தனது டுவிட்டரில் எழுதியிருக்கிறார் அனுஷ்கா சர்மா.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies