கணவரை அறிவித்து விட்டார் இலியானாதனது வருங்கால கணவர் வருண் தாவனை போன்று இருக்க வேண்டுமென்று மறைமுகமாக காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் இலியானா.தெலுங்கு நடிகையான இலியானா தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்துள்ளார்.தற்போது இந்தியில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர் சம்பளத்தை ஒரு கோடிக்கு மேல் உயர்த்தியுள்ளார்.இவர், மெயின் தேரா ஹீரோ படத்தில், வருண் தவானுடன் நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கத் தொடங்கிய நேரத்தில் இருந்தே இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்கள்.இதுவரை லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்திராத இலியானா இந்தப் படத்தில் வருண் தவானுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து அசத்தினார். இப்போது தான் வருணை காதலிப்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.வருண் மிகவும் அன்பானவர், இனிமையானவர், புத்திசாலி. அவரது குணங்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கும். எனக்கும் அவருக்கும் பல விஷயங்களில் ஒத்துப்போகிறது. எனக்கு கணவராக வருகிறவர் வருணின் குணங்கள் உள்ளவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.ஆனால் இலியானாவை காதலிப்பதாவோ, குறைந்த பட்சம் அவருடன் நட்பாக இருப்பது பற்றியோ வருண் இதுவரை வாய்திறக்கவே இல்லை.ஆதங்கத்தில் ஸ்ரேயாபாலாவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பறிபோனதால் கடுப்பில் இருக்கிறாராம் ஸ்ரேயா.தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா, என்றாலும் அதன்பிறகு ஜெயம்ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த மழை படம்தான் அவரை பேச வைத்தது.இதையடுத்து, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி என முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடித்தவர், ஒரு கட்டத்தில் மார்க்கெட் ஆட்டம் கண்டதால், மீண்டும் இந்தி, கன்னடம் என்று சென்று விட்டார்.தற்போது ராமானுஜம் படம் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்தில் என்ட்ரி கொத்திருக்கிறார்.முன்னதாக, இந்த படத்திற்கு முன்பு பாலா இயக்கவிருக்கும் தாரை தப்பட்டை படத்தில் ஸ்ரேயாதான நடிப்பதாக இருந்தார்.அப்படத்துக்காக கரகாட்ட பயிற்சி எடுப்பதற்கும் சென்னை வர தயாரானார் ஸ்ரேயா. ஆனால், அதற்குள் ஸ்ரேயா வேடத்துக்கு வரலட்சுமி ஒப்பந்தமாகி விட்டதாக ஸ்ரேயாவுக்கு தகவல் அனுப்பி விட்டனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சென்னை வந்து விசாரித்திருக்கிறார். அப்போதுதான், இரண்டு இளவட்ட ஹீரோக்கள்தான் தனக்கு வர இருந்த வாய்ப்பை வரலட்சுமிக்கு திருப்பி விட்டது தெரியவந்திருக்கிறது.இதனால் ஆவேசமடைந்த ஸ்ரேயா மேற்படி நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு தனது கொலிவுட் நண்பர்களிடம் சூடான வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டு திரிகிறார்.தத்துவமான குத்துப்பாடலில் விஜய்விஜய்க்காக தத்துவமான குத்துப்பாடல் ஒன்று உருவாகியுள்ளது.விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார்.அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்.படத்தில் சூப்பர் பாடல்களை கொடுக்க வேண்டும் என்று தனி கவனம் செலுத்தி ட்யூன்களை அமைத்து வர, மதன் கார்க்கி எழுதியுள்ள தத்துவ குத்துப் பாடல் பாடல் ஒன்றை சமீபத்தில் பதிவு செய்துள்ளனர்.இந்தப் பாடல் சூப்பராக அமைந்துள்ளதாக மதன் கார்க்கியே தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.விமலுடன் நடிக்கும் சமுத்திரக்கனிநிமிர்ந்து நில் படத்திற்கு பிறகு மிகவும் பிசியாக இருந்து வருகிறார் சமுத்திரக்கனி.அமலா பாலை முன்னணி கதாபாத்திரமாக வைத்து எடுக்கும் படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி விஜய்யை வைத்து படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈசன், சாட்டை படங்களில் தனது கடுமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள சமுத்திரக்கனி, வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷிற்கு அப்பாவாக நடித்து இருக்கிறார்.மேலும் விமல் நடிக்கும் நீயெல்லாம் நல்லா வருவடா திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துவருவதாக தகவல் வெளிவந்துள்ளது.இயக்குனர் சீமானிடம் இணை இயக்குனராக இருந்த நாகேந்திரன் இயக்கத்தில் வெளிவரும் நீயெல்லாம் நல்லா வருவடா திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.