கோச்சடையான் படத்துக்கு யு சான்றுரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரிலீசுக்கு தயாராகிறது. இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. டிரெய்லரும் வந்துள்ளது. இதனை லட்சக் கணக்கானோர் இணைய தளங்களில் பார்த்துள்ளனர்.‘கோச்சடையான்’ தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் படம் பார்த்து ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதன் மூலம் அரசின் வரி விலக்குக்கு தகுதி பெற்றுள்ளது.அடுத்த மாதம் (ஏப்ரல்) படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாமா என்று யோசிக்கின்றனர். உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடு கின்றனர்.தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வருகிறது.ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடித்துள்ளனர். சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கிஷெராப் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.‘அவதார்’, ‘டின்டின்’ போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் அனிமேஷன் படமாக கோச்சடையான் தயாராகியுள்ளது. காதலில் சிக்கிக் கொண்ட கேரள நாட்டிளம் பெண்களுடனே நாயகன்கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தில் நடித்தவர் நாயகன் அபி சரவணன். இப்படத்தில் காயத்ரி, தீக்சிதா, அபிராமி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.குமரன்.தற்போது இப்படம் வெளிவரும் சூழ்நிலையில் உள்ளது. இப்படத்தில் நடிக்கும் போது அபி சரவணனுக்கும், காயத்ரிக்கும் காதல் ஏற்பட்டதாம். இருவரும் நன்றாக பழகி வருகிறார்களாம். தற்போது காயத்ரி, எஸ்.எஸ்.குமரன் இயக்கியத்தில் வேறொரு படத்திற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். அதற்கு அபி சரவணன் உதவி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.இந்த காதல் விவகாரம் வெளியில் தெரிந்தால் தங்களின் வருங்காலம் பாதிக்கும் என்றும், வளர்ந்து வரும் நாங்கள் நிறைய சாதிக்க வேண்டும் என்றும் நினைத்து தன் காதல் விஷயத்தை மறைத்து வருகிறார்களாம் அபி சரவணனும் காயத்ரியும்.தமிழில் ஒரே நேரத்தில் மூன்று குத்துச்சண்டை படங்கள்ஜெயம் ரவி, ஜீவா, சிவகார்த்திகேயன் மூன்று பேருமே அவர்களது படங்களில் குத்துச்சண்டை வீரராக இறங்கியுள்ளனர்.ஜெயம் ரவி தனது எம். குமரன் சன்ஆப்ஃ மகாலஷ்மி படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். மேலும் தற்போது பூலோகம் படத்தில் வடசென்னை சார்ந்த ஒரு குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார்.ஜீவாவும் யான் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறாராம். சமீபத்தில் இசையை வெளியிட்ட மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனும் குத்துச்சண்டை வீரராக தான் நடிக்கிறாராம்.இப்படங்களில் யார் படம் முதலில் ரிலீஸாகும் என்ற ஆர்வம் அனைவரிடமும் இருந்தது. ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மான்கராத்தே தான் முதலில் ரிலீஸாகும் என உறுதியாகியுள்ளது.இந்நிலையில் இம்மூன்று பேரின் படங்களுமே வெவ்வேறு கோணங்களில் இருப்பதால் எந்த பாதிப்பும் வராது என கருதி மான்கராத்தே படத்தை எதிர்நோக்கியிருக்கிறார்களாம்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தனத்தின் புதிய தோற்றம்காமெடி நடிகர் மற்றும் இயக்குனர் ஸ்ரீநாத் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகிவரும் படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’.2010ல் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘மரியாத ராமண்ணா’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படம் தான் இது.PVP Cinemas மற்றும் சந்தானம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார் அஷ்னா சாவேரி. வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த சந்தானம், நான் முந்தைய படங்களில் இல்லாத அளவிற்கு இந்த படத்தில் புதிய தோற்றத்தில் நடிப்பதாக கூறினார். மேலும் ஒரு இளம் நாயகனாக நடிக்கவுள்ளதால், நான் தினமும் உடற்பயிற்சி செய்து கொண்டு வருகிறேன் என்றும் கூறினார்.இந்த படம் இந்தியிலும் 'SON OF SARDAR' என்ற பெயரில் ரீமேக்காகி இருப்பது குறிப்பிடத்தக்கது.வடகறி படத்தின் டீஸர் விரைவில்ஜெய், சுவாதிநடிப்பில் தயாராகிவரும் படம் ‘வடகறி’ படத்தை சரவண ராஜன் இயக்கி வருகிறார். இவர்இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.யுவன்சங்கர்ராஜா இசையமைக்கும்இப்படத்தினைதயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார்.திரில்லர் படமான வடகறி படத்தின் டீஸரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.யூ சான்றிதழ் பெற்ற இந்த திரில்லர் படத்தின் டீஸரில் ஒரு சுவாரஸ்யம் வைத்திருப்பதாவும்க, டீஸரை பார்ப்பவர்களுக்கு என்ன கதை என்று யோசிக் வைக்கும் வகயில் இருக்குமாம்.கார்த்தி நடிக்க வெங்கட் பிரபுவின் பிரியாணி ஊசிபோக, பிரியாணியில் அசிஸ்டன்ட்டாக வேலை செய்தசரவண ராஜன், வடகறிய எப்படி எடுத்திருக்காரு பொறுத்திருந்து பார்ப்போம்.இறுதி கட்டத்தில் மெல்லிசைவித்தியாசமான கதை களங்களில் ஜொலிக்கும் விஜய் சேதுபதி, சமீபத்தில் தான் கேட்டு வியந்த கதை என்று எல்லோரிடமும் பாராட்டும் 'மெல்லிசை' படத்தின் இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி. இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். ' நவீனமாக்கபட்ட நகர வாழ்வின் சிக்கலை சொல்லும் கதை .இந்த நகரத்தை எதனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த நகரம் ஏதோ வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நகரத்துக்கு கழுகு கண்கள்.இங்கு எல்லோரும் சுவராஸ்யமாக, வாழ்கிறோம் ஆனால் நிம்மதியாகவும், 'சுதந்திரமாகவும் வாழ்கிறோமா' என்பது தான் இந்த கதையின் கரு என்றார்.படத்தின் தலைப்பை பற்றி பேசும் போது ' மெல்லிசை என்பது மேலும் மேலும் கேட்க தூண்டும் சுகமான இசை வடிவம் , மேலும் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் இசை சம்பந்த பட்டவர்கள். அதுவே 'மெல்லிசை' என விளக்கம் அளித்தார்.இசைக்கும், நவீன கதை அமைப்புக்கும் களமாக அமையும் 'மெல்லிசை' படத்தின் இசை அமைப்பாளர் சாம் C .S என்னும் அறிமுக இசை அமைப்பாளர் ஆவார். ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், விஜய் சேதுபதி இந்த கதையை எதேச்சையாக கேட்ட மாத்திரத்தில் கால்ஷீட் தர ஒப்பு கொண்ட பின் நான் பேசியது தினேஷிடம் தான், அவர் கொடுத்த நம்பிக்கையும் அதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் காட்டிய வேகமும் பிரமாதம்.இப்போதுதான் கதை சொன்ன மாதிரி இருக்கிறது, இதோ படப்பிடிப்பு இறுதிகட்ட பணிகளில் இருக்கிறது. கதாசிரியனை போலவே கதையை பற்றி தெளிவாக தெரிந்து வைத்து இருக்கும் நாயகன் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக காயத்ரி நடித்து உள்ளார்.இந்த கதாபாத்திரத்துக்கு வேறு எவரையும் சிந்திக்க விடாமல் செய்து இருக்கிறார் என்று படத்தை பார்த்து நிச்சயம் சொல்லலாம். ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில் தீபன் பூபதி, மற்றும் ரெதேஷ் வேலு தயாரிக்கும் 'மெல்லிசை' நிச்சயம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் படமாக இருக்கும் என்று கூறுகிறார் இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி.