நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆஸ்பத்திரியில் அனுமதிதமிழ் திரையுலகில் 1950 மற்றும் 60களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். பராசக்தி, மனோகரா, ரத்த கண்ணீர், சிவகங்கை சீமை, தெய்வபிறவி, குமுதம், ஆலயமணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் கதாநாயகனாக நடித்து வந்தார்.86 வயதான எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு சளி தொல்லை ஏற்பட்டது. வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரால் சாப்பிட முடியவில்லை. திரவ உணவே செலுத்தப்பட்டது.நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து டிரஸ்ட்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகை ராதிகா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பார்த்தனர். டாக்டர்களிடம் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நிலை குறித்து கேட்டு அறிந்தனர். இசையமைப்பாளர் அனிருத் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்இசையமைப்பாளர் அனிருத் மீது, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் ஆபாச பாடல்களை வெளியிட்டு, பெண்களையும், தாய்மார்களையும் இழிவுபடுத்தி இருப்பதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஜெபதாஸ்பாண்டியன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், பிரபல திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.அவர் கொடுத்துள்ள மனு விவரம் வருமாறு:-பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், இணையதளத்தில் ஆங்கில பாடல்களுக்கு இசையமைத்து, இசை ஆல்பம் வெளியிட்டு இருக்கிறார். அந்த பாடல்களில் உள்ள வரிகள், பெண்களையும், குறிப்பாக தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளது. பாடல்களில் ஆபாச வரிகள் இடம் பெற்றுள்ளன. உடனடியாக, அந்த பாடல்களை தடை செய்து, சைபர் கிரைம் போலீசார் மூலம், அனிருத் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறேன்.இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு மீது விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொலை வெறி பாடல் மூலம் அனிருத் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. நஸ்ரியா காதல் என்னை மாற்றியது: பஹத் பாசில்நடிகை நஸ்ரியாவும், இயக்குனர் பாசிலின் மகனும் நடிகருமான பஹத் பாசிலும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இருவரும் ‘எல் பார் லவ்’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இவர்கள் காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டு திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.ஆகஸ்டு மாதம் திருமணம் நடக்கும் என்று பகத்பாசில் தந்தையும் பிரபல மலையாள டைரக்டருமான பாசில் அறிவித்து உள்ளார். கேரளாவில் இத்திருமணம் நடைபெறும் என்றும் பெற்றோர்கள் நிச்சயம் செய்து இந்த திருமணத்தை நடத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.நஸ்ரியாவுடன் காதல் மலர்ந்தது பற்றி பஹத் பாசில் கூறும்போது,நஸ்ரியாவுக்கும் எனக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. நஸ்ரியாவிடம் நான் மயங்கி விட்டேன். அவரது காதல் என்னை மாற்றி விட்டது. என் குடும்பத்தினருக்கும் நஸ்ரியாவை மிகவும் பிடித்துள்ளது. நஸ்ரியாவோடு நான் உரையாடினேன். அப்போது காதல் வயப்பட்டேன்.என்னை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். எனக்காக தன்னை தியாகம் செய்ய தயாராகவும் இருக்க வேண்டும். அதுமாதிரி ஒரு பெண்ணை தேடி வந்தேன். இறுதியில் அப்படிப்பட்டவராக நஸ்ரியாவை கண்டு பிடித்தேன். நஸ்ரியாவை கடைசி வரை காதலிப்பேன். கடைசி வரை நன்றாக பார்த்து கொள்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.பெண்களை ஆபாசமாக சித்தரித்ததாக அனிருத் மீது புகார்பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் பாடல் வரிகள் கொண்ட வீடியோவை உருவாக்கியுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கறிஞர் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.ஒய் திஸ் கொல வெறி என்ற ஒரே பாடல் மூலம் பெரும் புகழ் பெற்றவர் அனிருத். மேலும் அடுத்தடுத்த படங்களில் ஹிட் பாடல்கள் தந்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.இவர் புதிதாக என்ற பெயரில் மியூசிக் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ படு ஆபாசமாக உள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.சென்னை மணலியைச் சேர்ந்த ஜெபதஸ் பாண்டியன் என்பவர் இதுகுறித்து சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், "பிரபல இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் வெளியிட்டுள்ள Aint nobody ****in with my music என்ற மியூசிக் வீடியோ படுமோசமாகவும் பெண்களை, தாய்மார்களை அவமதிக்கும் வகையிலும் உள்ளது.அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளோ மிக வக்கிரமாகவும், சமூக விரோதமாகவும் உள்ளன. இதுபோன்ற வீடியோக்களை, பாடல்களை அனுமதிப்பது சமூக அமைதியை, ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாகும்.குறிப்பாக பெண்களின் தாய்மையைக் கூட கேவலமாக சித்தரித்துள்ள இந்த வீடியோ, பெண்களை புனிதமாகக் கருதும் இந்த நாட்டில் பல மோசமான விளைவுகளுக்கு அடிகோலும்.எனவே இந்த வீடியோவை வெளியிட்டதற்காக அனிருத் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுமென்றே இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.‘இது கதிர்வேலன் காதல்’ சொல்லும் இரண்டு கதைஇரண்டு கதைகளையும் சேர்த்து ஒரே படமாக உருவாகியிருப்பதுதான் இது கதிர்வேலன் காதல்.இது கதிர்வேலன் படத்தின் டிரெய்லர் வெளியாகி பட்டியெல்லாம் பட்டையை கிளப்பிகொண்டிருக்கிறது.இப்படத்தினை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இது கதிர்வேலன் காதல் படத்தின் கதை உருவானவிதமே ஒரு சுவாரஸ்யமான விடயம்தான்.‘சுந்தரபாண்டியன்’ வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் உதயநிதியை சந்தித்து, அவரிடம் இரண்டு கதைகளை சொல்லியிருக்கிறார்.அவர் சொன்ன இரண்டு கதைகளும் உதயநிதிக்குப் பிடித்துப் போகவே, இரண்டையும் சேர்த்து ஒரே கதையாக உருவான படம்தான் இது கதிர்வேலன் காதல்.ஈழத்தமிழ் வசனத்தில் 'யாழ்'யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு வந்தது என ஈழத்தமிழ் வசனத்தில் உருவாகிறது ‘யாழ்’ திரைப்படம்.மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக அவுஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் ‘யாழ்’.இந்தப் படத்தில் வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லீமா, மிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்தப் படத்தின் கதை, திரைக்கதை , வசனம் எழுதி தயாரித்து இயக்கும் எம்.எஸ்.ஆனந்த் படம் பற்றி கூறுகையில், யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி.இத்திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையில் நடக்கிறது. இதில் இந்திய, தமிழ் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப் படத்தின் பாடல்கள் ஈழத்தமிழில் இருப்பதும், பாடலாசிரியர்களும் இலங்கை தமிழர்களே என்பதும் இதுவே முதல் முறை, வசனம் முழுவதும் இலங்கை தமிழிலே இருக்கும்.‘யாழ்’ என்பது ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இசைக் கருவி. பாணர்கள் என்பவர்கள் இக்கருவியை வைத்துக் கொண்டு சைவ சித்தாந்த கருத்துகளையும், தமிழர்களின் கலை மற்றும் கலாசாரத்தையும், பண்பாட்டையும் ஊர் ஊராக சென்று பரப்பியதால் தான் யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்தது.மேலும் யாழ் இசையும், யாழ் கலையும், கலாச்சாரமும் சம்மந்தபட்ட கதாபாத்திரங்களுக்கு இடையில் இப்பொழுது இறுதி போரின்போது அவர்களுக்கு நடந்த நட்பு, காதல், போன்ற சம்பவங்களை மிக ஜனரஞ்சகமாக எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.