சினிமா செய்தித் துளிகள் திங்கட்கிழமை, ஜனவரி 20

20 Jan,2014
 

1980களில் கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சந்திப்பு: ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால் கலந்து கொண்டனர்


1980களில் கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சென்னையில் ஒரே இடத்தில் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் 1980–ம் வருடத்தில் நட்சத்திரங்கள் என்ற பெயரில் தனியாக அமைப்பு வைத்துள்ளனர். வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 2009–ல் முதல் சந்திப்பு நடந்தது. நடிகைகள் லிசியும், சுகாசினியும் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். அப்போது முதல் ஒவ்வொரு வருடமும் இந்த குதுகல சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்த வருடத்துக்கான சந்திப்பு நேற்று முன்தினம் இரவு சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை அருகில் உள்ள மலையாள நடிகர் மோகன்லால் பண்ணை வீட்டில் நடந்தது. அவரே விருந்துக்கான ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராக காரில் வந்து இறங்க மோகன்லால் வரவேற்றார்.

ரஜினிகாந்த், சிரஞ்சீவி, வெங்கடேஷ், மோகன், சுமன், ரமேஷ் அரவிந்த், அம்பரீஷ், நடிகைகள் ராதா, அம்பிகா, ரேவதி, நதியா, ரம்யாகிருஷ்ணன், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், சுகாசினி, லிசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகர்–நடிகைகள் மட்டுமே இதில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் கணவன், மனைவி, குழந்தைகளுக்கோ வெளியாட்களுக்கே அனுமதி இல்லை.

ஒவ்வொருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர். ரஜினி, சிரஞ்சீவியை நடுவில் உட்கார வைத்து ‘குரூப்’ போட்டோவும் எடுத்துக் கொண்டனர். விருந்து முடிந்ததும் அனைவருக்கும் பரிசு பொருட்கள் கொடுத்து வழியனுப்பி வைக்கப்பட்டார்கள்.

சுகாசினி இதுகுறித்து கூறும்போது, ‘1980களில் நடித்த நடிகர்–நடிகைகள் முதன் முதலாக 2009–ல் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தோம். வருடத்துக்கு இதுபோல அனைவரும் சந்தித்து பேசவேண்டும் என்று அப்போது யோசனை உருவானது. தொடர்ந்து இந்த சந்திப்பை நடத்தி வருகிறோம். டைரக்டர் உள்ளிட்ட பலர் எங்களையும் ஏன் அழைக்க கூடாது என்று கேட்டு வருகிறார்கள். நடிகர், நடிகைகளை மட்டுமே அழைப்பதென முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பொது நிகழ்ச்சிகளில் நாங்கள் சந்திக்க நேர்ந்தாலும் நட்சத்திர வட்டத்துக்குள் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இங்கு அப்படி அல்ல. ஒருவருக்கொருவர் ஜோக் அடித்து மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்றார்.



நட்சத்திர ஓட்டலில் சித்தார்த், சமந்தா ரகசிய சந்திப்பு


நட்சத்திர ஓட்டலில் சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக சந்தித்து மனம் விட்டு பேசினார்கள். இருவருக்கும் காதல் முறிந்து விட்டதாகவும், சந்திப்புகளை தவிர்க்கிறார்கள் என்றும் சமீபத்தில் வெளியான செய்திகளை இது பொய்யாக்குவதாக இருந்தது என்றனர் ஓட்டல் ஊழியர்கள்.

சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக காதலிக்கின்றனர். கோவிலில் குடும்பத்தினருடன் ஜோடியாக சாமி கும்பிட வந்த போது இந்த காதல் அம்பலமானது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

சமந்தா தெலுங்கிலும், சித்தார்த் தமிழிலும் பிசியாக நடிக்கின்றனர். கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் இவர்கள் காதலில் திடீர் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின. தற்போதைய சந்திப்பு அதை வதந்தி என ஊர்சிதபடுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் பெட்டம்மா கோவில் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் ஆட்கள் இல்லாத இடத்தில் ‘டின்னர் டேபிள்’ முன் அருகருகே உட்கார்ந்து இருந்தனர். இருவரையும் பார்க்க புது மணதம்பதி போல் இருந்தார்கள் என்றார் அங்கிருந்த ஊழியர் ஒருவர். ஒருவருக்கொருவர் சிரித்து பேசிக் கொண்டு இருந்தார்கள். அதில் காதல் நெருக்கத்தை பார்க்க முடிந்தது என்றும் ஓட்டல்காரர்கள் தெரிவித்தனர். இரவு நெடு நேரம் தனிமையில் உட்கார்ந்து இருந்தார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.



 தென் ஆப்ரிக்க சர்வதேச இந்திய திரைப்படவிழா: வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பாடகர் எஸ்.பி.பி-க்கு உடல் நலக்குறைவு


தென் ஆப்ரிக்காவில் சர்வதேச இந்திய திரைப்படவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா இந்திய மற்றும் தென்னாப்ப்ரிக்க நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் சகோதரத்துவ தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. இருநாடுகளின் பிராந்திய மொழிகளுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

சனிக்கிழமை இரவு அன்று தொடங்கப்பட்ட இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி திரைப்படத்தின் பாடல் வரிகளை 15 மொழிகளில் பாடிய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு (67) வாழ்நாள் சாதனையாளருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருதுபெற்ற அவருக்கு உடனடியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து அவரை தனிவிமானம் மூலம் சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து விருந்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.




பஹத் பாசிலை மணக்கிறார் நஸ்ரியா


மலையாள நடிகர் பஹத் பாசிலை மணம் முடிக்கவுள்ளார் நஸ்ரியா நசீம்.
மலையாள உலகில் மோஸ்ட் வான்டட் ஹீரோ பஹத் பாசில், இவர் இயக்குனர் பாசிலின் மகன் ஆவார்.
2013ம் ஆண்டில் மட்டும் 12 படங்களில் கமிட் ஆகி நடித்த இவர் முன்பு ஆண்ட்ரியாவைக் காதலிக்கிறேன் என்று பரப்பைக் கிளப்பியவர் இப்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டார்.
பஹத் பாசிலின் மனம் கவர்ந்த அந்தப் பெண் நஸ்ரியா நசீம். 'நேரம்' படத்தில் அறிமுகமாகி, 'ராஜா ராணி, 'நய்யாண்டி' படங்களில் நடித்தவர்.
பெற்றோர்கள் நிச்சயித்த இவர்கள் திருமணம் வரும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெற இருக்கிறது.
முப்பது வயதான பஹத் 18 வயதான நஸ்ரியாவைக் கரம் பிடிக்கிறார்.




மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்?



சிறுத்தை சிவாவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவிருக்கிறராம் அஜித்.
அஜித்தின் மாஸ் இமேஜ் அப்படியே திரையில் பிரதிபலித்து கரன்சிகளை அள்ளிக் கொண்டிருக்கிறது வீரம்.
திரையிட்ட அனைத்து இடங்களிலும் பாகுபாடில்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணைவதை எல்லா ஹீரோக்களும் விரும்புவார்கள், தற்போது சிவாவுடன் மேலுமொரு படம் செய்ய விரும்புவதாக அஜித் கூறியுள்ளாராம்.
சிறுத்தை படத்தின் மூலம் தமிழுக்கு வந்த சிவா, கார்த்தியை வைத்து சிறுத்தை இரண்டாம் பாகத்தை இயக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது.




பாலிவுட்டில் ‘சுப்பிரமணிபுரம்’



இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது சசிகுமாரின் சுப்பிரமணிபுரம்.
கடந்த மூன்று வருடங்களில் தமிழில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்று சுப்பிரமணியபுரம்.
கதை சொன்னவிதமும், காட்சிகளின் நேர்த்தியும் உலகத்தரத்தில் அமைந்திருந்தன.
இந்தப்படத்தினை சசிகுமாரின் லைஃப் டைம் படம் என்று கூட சொல்லலாம்.
இந்தப் படத்தின் பாதிப்பில் நிறைய படங்கள் தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் வெளியாயின.
அனைவரையும் கவர்ந்த இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் தனது எண்ணத்தை சசிகுமார் சமீபத்தில் தெரியப்படுத்தினார்.
இந்தியில் தானே ரீமேக் செய்ய வேண்டும் என்பதற்காக படத்தின் ரீமேக் உரிமையை இதுவரை தன்னிடமே வைத்துள்ளார். பலர் கேட்டும் சுப்பிரமணியபுரத்தின் ரீமேக் உரிமையை அவர் தரவில்லை.
சுப்பிரமணியபுரம் இந்தி ரீமேக்கில் அனுராக் காஷ்யபும் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் வசனத்தில் பங்களிப்பு செலுத்துவார் என தெரிகிறது.
மேலும், அனுராக்கின் தயாரிப்பு நிறுவனம் இந்த ரீமேக்கை தயாரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.













Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies