சினிமா செய்தித் துளிகள் சனிக்கிழமை, ஜனவரி 11

11 Jan,2014
 

இளசுகளின் தந்தையாக உலகநாயகன்


லிங்குசாமி தயாரிப்பில் உருவாகும் உத்தம வில்லன் படத்தில் டீன்ஏஜ் பெண்ணின் தந்தையாக கமல்ஹாசன் நடிக்கிறார்.

விஸ்வரூபம் 2ம் பாகத்திற்கு பிறகு உத்தம வில்லன் படப்பிடிப்பு தொடங்குகிறது. நடிகரும், கமலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ரமேஷ் அரவிந்த் உத்தம வில்லனை இயக்குகிறார்.

ஏற்கனவே சதிலீலாவதியின் கன்னட ரீமேக்கில் ரமேஷ் அரவிந்த் கமலை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தம வில்லன் கதைப்படி டீன்ஏஜ் பெண்ணின் தந்தையாக கமல் நடிக்கிறார்.

அந்த கதாபாத்திரத்தில் முதலில் ஸ்ருதிஹாசனை கமிட் செய்திருந்தனர். தற்போது கால்ஷீட் பிரச்சனையால் ஸ்ருதி படத்திலிருந்து விலக புதுமுகத்தை தெரிவு செய்யும் பணி நடந்து வருகிறது.

உத்தம வில்லனின் கதை, திரைக்கதையை கமலே எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கமல் படத்துக்கு யுவன் இசையமைப்பது இதுவே முதல்முறை.

அதேபோல் லிங்குசாமி இந்தப் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கயிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



 உதய்கிரண் தற்கொலைக்கு நான்கு மிகப்பெரிய தெலுங்கு திரைப்பட குடும்பங்கள் காரணமா?



தெலுங்கு முன்னணி நடிகரான உதய்கிரண் இரு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என இதுவரை தெரியாத நிலையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெலுங்கு சினிமா உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

2003 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு அது பின்னர் நின்றுபோனது. ஆனால் என்ன காரணத்திற்காக அத்திருமணம் நின்றுபோனது என இதுவரை தெரியவில்லை. ஆனால் இச்சம்பவத்திற்கு பின்னரே உதய்க்கு படவாய்ப்புகள் குறைந்து போனதாக தெரிகிறது.

தெலுங்கு திரையுலகின் முக்கிய குடும்பங்களான சிரஞ்சீவி, டக்குபட்டி, என்.டி.ஆர் மற்றும் டில் ராஜு ஆகியவை உதய் திரைப்படங்களில் நடிக்க முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியதாக கடும் குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. இது குறித்து அம்மாநில மனித உரிமை ஆணையத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருண்குமார் என்பவரும், அம்மாநில பிராமண சங்கத்தலைவர் துரோணம்ராஜு ரவிக்குமாரும் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

உதய்யின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்த அவர்கள் பிராமண சமூகத்தை சார்ந்தவர் என்பதாலேயே உதய் பல்வேறு சமூகத்தின் மறைமுக தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டதாகவும், இப்படிப்பட்ட மறைமுக அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை முடிவுக்கு சென்றதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். உதய்யின் வாழ்வில் உண்மையில் நடந்தது என்ன என்பது வெளியுலகிற்கு தெரியவருமா? என்று பலரும் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.





 நடிகை மனோரமா மீது நில அபகரிப்பு புகார்: அண்ணன் மகன் குற்றச்சாட்டு



பழம்பெரும் நடிகை மனோரமா, சென்னை தியாகராயநகரில் வசிக்கிறார். அவர் மீது அவரது அண்ணன் மகன் காசிநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழக மக்களால் நேசிக்கப்படும், அனைவராலும் ஆச்சி என்று அழைக்கப்படும் நடிகை மனோரமா எனது அத்தை ஆவார். எங்களது பூர்வீகம் மன்னார்குடி. மனோரமாவுக்கு ஆறுமுகம், கிட்டு என்ற 2 அண்ணன்கள் உண்டு. அண்ணன்கள் இருவரும் தற்போது இறந்து விட்டார்கள்.

நான் கிட்டுவின் மகன். எனது உடன் பிறந்தவர்கள் 4 பேர் உள்ளனர். சென்னை கேளம்பாக்கத்தில் நான் குடும்பத்துடன் வசிக்கிறேன். நாங்கள் அனைவரும் மிகவும் ஏழ்மையில் இருக்கிறோம். நான் வாடகை கார் ஓட்டி பிழைக்கிறேன். எனது தங்கை வீட்டு வேலை செய்கிறாள். எனது அண்ணன் கொத்தனார் வேலை செய்கிறான். மனோரமா அத்தை மிகவும் நல்லவர். எங்கள் குடும்பத்திற்கும், எங்கள் பெரியப்பா குடும்பத்திற்கும் நிறைய நல்லது செய்துள்ளார்.

எங்கள் பாட்டி ராமாமிர்தம் பெயரில் சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் ஆறரை கிரவுண்டு நிலம் இருந்தது. அந்த நிலம்  1965-ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிலம் பல கோடி மதிப்புடையது. கார் சர்வீஸ் நிறுவனம் அதில் உள்ளது. அதை மாதம் ரூ.1 லட்சத்திற்கு அத்தை மனோரமா வாடகைக்கு விட்டுள்ளார்.

பாட்டி பெயரில் இருந்த அந்த நிலம் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் சொந்தமானது. அந்த நிலத்தை யாருக்கும் சொல்லாமல், அத்தை மனோரமா அவரது பெயரில் மாற்றிக்கொண்டார். இது சட்ட விரோதமானது. பாட்டி பெயரில் அந்த நிலம் இருந்ததற்கான ஆதாரங்கள், உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. எனவே அத்தை மனோரமா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன்.

நான் போலீசில் புகார் கொடுத்தது தெரிந்து, எனக்கு போனில் பேசி நிறைய கொலை மிரட்டல் வருகிறது. போலீசார்தான் எங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு காசிநாதன் தெரிவித்தார். அவர் கொடுத்துள்ள புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காசிநாதன் கொடுத்த புகார் மனு பற்றி நடிகை மனோரமாவிடம், தினத்தந்தி நிருபர் கேட்டபோது, அவர் ஆக்ரோஷமாக பதில் அளித்தார்.

நான் சம்பாதித்த சொத்தை, நானே அபகரித்து விட்டேன் என்று சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். யாரும் நம்பாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னிடம் பணம் பறிப்பதற்காக, இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. காசிநாதன் எனது அண்ணன் மகன்தான்.

இவ்வாறு மனோரமா தெரிவித்தார்.




முதல் முறையாக இணையும் பாலிவுட் ஜோடி



முதல் முறையாக ரித்திக் ரோஷனுடன் ஜோடி சேரவிருக்கிறார் தீபிகா படுகோனே.
பாலிவுட்டின் பெரும்பாலான ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள தீபிகா படுகோனே இதுவரையில் ரித்திக் ரோஷனுடன் எந்தப் படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்ததில்லை.
தற்போது அந்த குறையும் விரைவில் தீரப்போகிறது.
‘க்ரிஷ் 3’ படத்தைத் தொடர்ந்து ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் மற்றுமொரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறார் ரித்திக் ரோஷன்.
இந்தப் படத்தில் ரித்திக்கின் ஜோடி தீபிகா படுகோனே நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது









Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies