சினிமாச் செய்தித் துளிகள் சனிக்கிழமை, 28 டிசெம்பர் 2013

28 Dec,2013
 

நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார்: நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்றார்




பெங்களூர் அருகே பிடுதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்று நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார்.

நாடோடி தென்றல் படம் மூலம் 1992-ம் ஆண்டு டைரக்டர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா நடத்தி வரும் ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தா-நடிகை ரஞ்சிதா தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நித்தியானந்தா கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நித்தியானந்தாவின் பிறந்த தினத்தையொட்டி பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் நேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவரது சீடர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது நித்தியானந்தாவிடம் இருந்து தீட்சை பெற்று நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார்.

அதனை தொடர்ந்து நடிகை ரஞ்சிதா, இனி “மா ஆனந்தமயி” என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருடன் மேலும் சில பெண் சீடர்களும் சன்னியாசியாகி தீட்சை பெற்றனர். நடிகை ரஞ்சிதா சன்னியாசியாகி தீட்சை பெற்றதற்கு கர்நாடகத்தை சேர்ந்த பல மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

சன்னியாசி தீட்சை பெறுவது என்பது சுலபமானது அல்ல. தியாக மனோபாவம் இருக்க வேண்டும். அதற்கென்று சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளன. அவை எல்லாம் கடைப்பிடிக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.


படப்பிடிப்பு நடந்த கிராமத்துக்கே உணவு பரிமாறிய அஜீத்





வீரம் படப்பிடிப்பு நடந்த ஒரு கிராமத்துக்கு இறுதியில் நடிகர் அஜீத் உணவு பரிமாறினார். கிராமத்தில் வசித்த ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று சாப்பிட்டனர். மெகாபந்தியாக இது இருந்தது என படக்குழுவினர் தெரிவித்தனர். 

விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி, தயாரிக்கும் இப்படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், விதார்த், பாலா போன்றோரும் உள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இதன் பெரும் காட்சிகள் ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் படமானது. இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்சினைகளே கதை. ஆரம்பத்தில் அமைதியாக வரும் அஜீத் பிறகு ஆவேசமாகி ஆக்சனுக்கு மாறுவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. 

படத்தில் அஜீத் வேட்டி சட்டை அணிந்து வருகிறார். ஒரு காட்சியில் மாட்டு வண்டி ஓட்டி நடித்து இருக்கிறார். அந்த காட்சியில் மாடு வேமகாக போகாமல் முரண்டு பிடிக்க வண்டிக்காரர் மாட்டை சாட்டையால் அடித்துள்ளார். இதை பார்த்ததும் அஜீத்துக்கு கோபம் ஏற்பட்டது. உங்களுக்கு சாப்பாடு போடுவதே அந்த மாடு அதை போய் அடிக்கிறீர்களே என கண்டித்தார். விலங்குகள் மீதான அஜீத்தின் நேயத்தை படக்குழுவினர் பாராட் டினர்.

ரெயிலுக்குள் நடப்பது போன்ற சண்டைகாட்சி யொன்றை பின்னி மில்லில் ரூ.1 கோடி செலவில் ரெயில் அரங்கு அமைத்து படமாக்கியுள்ளனர். இந்த சண்டைகாட்சி பேசப்படும் என்கின்றனர்.


இசைஞானி இளையராஜா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்





நெஞ்சு வலி காரணமாக இசைஞானி இளையராஜா மருத்துவமனையில் அனுமதியாகி, 5 நாள் சிகிச்சைக்கு பிறகு இன்று காலை வீடு திரும்பினார்.  சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவிற்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்தனர். அப்போது அவரது இருதயத்தில் செல்லும் ரத்தக்குழாயில் இரு இடங்களில் அடைப்பு ஏற்பட்டதை டாக்டர் கண்டுபிடித்து அவருக்கு செய்ற்கை ரத்தக்குழாயை பொருத்தி அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

உரிய சிகிச்சைக்கு பின் சிறப்பு வார்டிற்கு மாற்றப்பட்ட இளையராஜா பூரண குணமடைந்ததால் 5 நாட்களுக்கு பின் நேற்று வீடு திரும்பினார். முன்னதாக மலேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இளையராஜா திட்டமிருந்தது குறிப்பிடத்தக்கது. இளையராஜா திட்டமிட்டபடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.


இந்தி திரைப்பட நடிகர் பாரூக் ஷேக் மாரடைப்பால் துபாயில் மரணம்




துபாயில் நடைபெறும் கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பாரூக் ஷேக் அங்கு சென்றுபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 64 வயதான ஷேக், கரம் ஹவா என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். 

இவர் புகழ்பெற்ற வங்க திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரேயின் பல படங்களில் சிறப்பாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரேயின், சத்ரஞ்ச் கே கிலாடி, சாய் பரஞ்பேயின், சாஷ்மே புத்தூர் மற்றும் சாகர் சர்ஹாதியின், பஜார் ஆகிய படங்களில் தனது அபார நடிப்பாற்றலை இவர் வெளிப்படுத்தியுள்ளார். 

சஞ்சய் புரான் சிங் சவுகானின் லாகூர் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த இவருக்கு 2010 ஆம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது நினைவு கூறத்தக்கது. அவரது மறைவுக்கு பல்வேறு இந்தி திரைப்பட நட்சத்திங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி: சங்கவி



அமராவதி படத்தில் அஜீத் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் சங்கவி. 1993–ல் இப்படம் வந்தது. விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்து வருகிறார். சங்கவிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் தற்போது சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு கணவருடன் குடித்தனம் நடத்தி வருவதாகவும் செய்திகள் பரவின. 
இதனை சங்கவி மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:– 

எனக்கு திருமணம் முடிந்து விட்டதாக செய்திகள் பரவியுள்ளன. இதில் உண்மை இல்லை. எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் கமிஷனர் அலுவலகத்துக்கு போய் வந்தது பற்றியும் பலவிதமாக பேசப்படுகிறது. எனக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் இருக்கிறது. அதில் முகவரி மாற்றம் செய்வதற்காகவே கமிஷனர் அலுவலகத்துக்கு போனேன். 

இவ்வாறு அவர் கூறினார்.


சன்னியாசி ஆனது ஏன்?- நடிகை ரஞ்சிதா விளக்கம்




தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு நித்யானந்தா சாமியாருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ பட காட்சிகள் சில வருடங்களுக்கு முன் டெலிவிஷனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. நித்யானந்தாவின் மடாலயங்கள் தாக்கப்பட்டது. ரஞ்சிதா தலைமறைவானார். நித்யானந்தா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். ரஞ்சிதாவும் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளிப்பட்டு ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல என்று அறிவித்தார். தன் மீது அவதூறு பரப்பி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் தற்போது சன்னியாசியாகியுள்ளார். நித்யானந்தாவின் 37-வது பிறந்தநாள் விழா பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் நடந்தது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் சன்னியாசியாக விரும்புகிறவர்களுக்கு நித்யானந்தா தீட்சை வழங்குவது உண்டு. இந்த பிறந்த நாளிலும் 40–க்கும் மேற்பட்ட பெண்கள் தீட்சை பெற்றனர். அதில் ஒருவர் நடிகை ரஞ்சிதா. இதனால் ஆசிரமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உரிய சடங்குகள் செய்து ரஞ்சிதா சன்னியாசியாக தீட்சை பெற்றார். படுக்கையறை ஆபாச வீடியோ சர்ச்சைக்கு பின்பும் நித்யானந்தா ஆசிரமத்திலேயே ரஞ்சிதா தங்கி இருந்தார். ஆன்மீக சுற்றுப் பயணங்களிலும் நித்யானந்தாவுடன் சென்றார். தியான கூட்டங்களிலும் பங்கேற்றார். தற்போது சன்னியாசியாகி உள்ளார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து ருத்ராட்சை மாலைகள், மற்றும் காவி உடை அணிந்து சன்னியாசியாக தீட்சை பெற்றார்.

மேடையில் அவர் பேசும்போது உண்மை, அமைதி, அகிம்சை போன்றவற்றை நான் புரிந்து கொண்டேன். இதன் மூலமே சன்னியாசி ஆகி இருக்கிறேன். முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன் என்றார். ரஞ்சிதாவுக்கு நித்யானந்தா சன்னியாசி தீட்சதை வழங்கியதற்கு மடாதிபதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


தமிழ் படங்களில் நடிக்காதது ஏன்?: அஞ்சலி விளக்கம்




நடிகை அஞ்சலி தமிழ் படங்களில் நடிப்பதை திடீர் என நிறுத்தி உள்ளார். கடைசியாக இவர் நடித்த ‘வத்திக்குச்சி’ படம் வந்தது. அதன் பிறகு ‘சிங்கம்–2’ படத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு ஆடினார். தற்போது ஐதராபாத்திலேயே தங்கி உள்ளார். 

சித்தி கொடுமைப்படுத்தியதாக சென்னை வீட்டில் இருந்து வெளியேறிய அவர் அதன் பிறகு மீண்டும் சென்னைக்கு வரவில்லை. தனது வீட்டை அபகரித்து விட்டதாக சித்தி மீது போலீசிலும் புகார் அளித்துள்ளார். தமிழில் சில படங்களில் நடிக்க அஞ்சலிக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் மறுத்து விட்டார். 

தமிழில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படம் ஆந்திராவிலும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. இதன் வெற்றி விழாவில் பங்கேற்ற அஞ்சலி தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:– 

‘ஆதலால் காதல் செய்வீர்’ படம் தயாரான போது அதில் கதாநாயகியாக நடிக்க என்னைத்தான் அழைத்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எனக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. அது எல்லோருக்கும் தெரியும். எனவேதான் தமிழ் படங்களில் நடிக்காமல் உள்ளேன். ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்திலும் இதனால்தான் நடிக்க முடியவில்லை. 

இந்த படம் ஆந்திராவில் ரிலீசாகி பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியை எனக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன். 

இவ்வாறு அஞ்சலி பேசினார்.


புதுமுக நடிகருடன் நித்யாமேனன் காதல்?




நித்யாமேனனுக்கும் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ பட நாயகன் கிரிஷ் சாதருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நித்யாமேனன் ஏற்கனவே தமிழில் நூற்றி என்பது, வெப்பம், படங்களில் நடித்துள்ளார். சேரன் இயக்கும் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. 

தொடர்ந்து மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பழைய நடிகை ஸ்ரீப்ரியா இயக்குகிறார். தெலுங்கு மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் கதாநாயகனாக கிரிஷ் சதார் நடிக்கிறார். இவர் பழைய மலையாள நடிகை ஜெய பாரதியின் மகன் ஆவார். 

படப்பிடிப்பில் நித்யா மேனனுக்கும் கிரிஷ்க்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் படப்பிடிப்பு ஓய்வில் தனியாக உட்கார்ந்து பேசுவதாகவும் போனில் பேசியும் காதல் வளர்க்கின்றனர் என்றும் கிசு கிசுக்கின்றனர். ஆரம்பத்தில் நட்பாகத்தான் பழகினார்கள். படிப்பிடிப்பு முடியும் தருவாயில் அது காதலாக மலர்ந்துள்ளதாம். இவர்கள் காதல் பற்றி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாலினி 22 பாளையங் கோட்டை படம் மலையாளத்தில் தயாரான 22 பிமேல் கோட்டயம் என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய ஆஷிக் சபுவுக்கும் அதில் நாயகியாக நடித்த ரீமா கல்லிங்கலுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies